search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலகுமலை"

    • பெரும்பாலான பணிகள் முடிவுற்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடம் தயார் நிலையில் உள்ளது.
    • போட்டி நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

      பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு போட்டிக்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) போட்டி நடைபெறுகிறது. இதற்காக பார்வையாளர்கள் அமரும் கேலரி, வாடிவாசல், போட்டியில் கலந்து கொண்ட பின் மாடுகளை பிடிப்பதற்கான இடம், கால்நடைகளை மருத்துவ பரிசோதனை செய்வதற்கான இடம், பார்வையாளர்கள் வந்தால் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் பகுதி உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் முடிவுற்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடம் தயார் நிலையில் உள்ளது.

    போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மற்றும் மாவட்ட சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 600 காளைகளும், 500 மாடு பிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து இன்று இறுதிக்கட்ட பணிகள் முடிவுற்று போட்டிக்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேலும் போட்டி நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.
    • 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.

    வீரபாண்டி :

    பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

    அதன்படி கலெக்டர் மற்றும் சப்- கலெக்டர் ஆகியோர் ஆய்வின் முடிவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரி, வாடிவாசல் மற்றும் போட்டியில் கலந்து கொண்டபின் செல்லும் மாடுகளை பிடிப்பதற்கான இடம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. நாளை 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதையொட்டி மாடு பிடி வீரர்கள் முன்பதிவு தீவிரமாக நடைபெற்றது. இதில் சுமார் 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதுகாப்புக்கான போலீசார் பற்றாக்குறை ஏற்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வைத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களினால் 23-ந் தேதி நடத்தப்படவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை வேறு ஒரு தேதியில் நடத்துவதற்கு ஏதுவாக மாற்று தேதி மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அதில் தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் என அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி தெரிவித்தார். போட்டியினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்குகிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அல–கு–மலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    • கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • கேலரிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம்அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டு களாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அலகுமலை பகுதியில் போட்டி நடத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரும் 23-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.அதனைத் தொடர்ந்து தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    மேலும் போட்டி யில் கலந்து கொண்ட மாடுகளை பிடிப்பதற்கான தனி இடமும் அதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை போட்டியில்கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடிவீரர்கள் முன்பதிவு பணி தொடங்க உள்ளதாக ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

    • உலக தண்ணீர் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானங்களை ஏற்க போவதில்லை என்றும், இதனை ஏற்று சம்மதம் தெரிவித்து கையெழுத்திடப் போவதில்லை என்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு சேர தெரிவித்தனர். ஏற்கனவே அலகுமலை ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டும் அதனை முழுமையாக நிறைவேற்றாத அரசு நிர்வாகத்தை கண்டித்து இந்த முடிவை எடுத்து ள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜன், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து கிராம சபை கூட்டம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நேற்று ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசின் சார்பாக 22 தீர்மானங்களும், மேலும் 4 தீர்மானங்கள் என மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரு தரப்பினர் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்றும், ஒரு தரப்பினர் நடத்தியே தீர்வோம் என்றும் கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏற்கனவே வந்திருந்த அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் இருதரப்பின ரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அலகுமலை ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு விழாவானது நடைபெற்றது.
    • ஜல்லிக்கட்டுவிழா நடைபெற வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அலகுமலை ஊராட்சி பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு வட்டம், அலகுமலை ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு விழாவானது நடைபெற்றது. இதனால் நாங்கள் பட்ட கஷ்டங்களை மனுவாகஎழுதி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து இருந்தோம்.

    ஆனால்25.3.2023 அன்று அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்றுதமிழ்நாடு செய்திதுறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார். 22.3.2023 அன்றுநடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் அலகுமலை ஊராட்சியிலும் அலகுமலையை சுற்றிலும் குறிப்பிட்டதூரம் ஜல்லிக்கட்டுவிழா நடைபெற வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட வேலை செய்து வருகிறார்கள். இதனால் அலகுமலைமக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலைஉருவாகி உள்ளது. வரும் நாட்களில் மேலும் மக்களிடம் பதட்ட சூழ்நிலைஉருவாகும் சூழல் உள்ளது. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு ஜல்லிகட்டு விழா தொடர்பான நடவடிக்கை யை நிறுத்தி ஜல்லிக்கட்டு போட்டிக்கு உண்டான பொருட்களை அப்புறப்ப டுத்த வேண்டும். மேலும் அலகுமலை ஊராட்சி கிராமசபா கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என தெரிவித்து ள்ளனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில்இன்று நடைபெற்ற விவசாய குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது. 

    • மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அனுமதி அளிக்கப்பட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு வீட்டை காலை செய்துவிட்டு செல்வதாக தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் ஜனவரி 29-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைப்பதற்கு கால்கோள் விழா நடைபெற்றது. இந்த கால்கோள் விழாவில் தமிழக ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து வாடிவாசல் மற்றும் பார்வையாளர் கேலரிகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றம் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்தது. அதில் மனுதாரரின் கோரிக்கைக்கு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு 6 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இங்கே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அனுமதி அளிக்கப்பட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு வீட்டை காலை செய்துவிட்டு செல்வதாக தெரிவித்தனர்.மேலும் அங்கு வந்தவர்களில் சிலர் தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் அதற்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். இதனை கேட்டுக் கொண்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மறு உத்தரவு வரும் வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வாய்மொழியாக உத்தரவிட்டதாகவும், இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஜல்லிக்கட்டு தலைவர் தோட்டத்தில் நடைபெற்றது.
    • டிசம்பர் 18-ந் தேதி கால்கோள் விழாவை சிறப்பாக நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

     பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஜல்லிக்கட்டு தலைவர் தோட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவாசலம், சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் டிசம்பர் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கால்கோள் விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், அந்த கால்கோள் விழாவிற்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரை அழைப்பது என்றும் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் அழைப்பது, தைப்பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடத்துவது என்றும் ஒருமனதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு விழாவிற்கு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை அழைப்பது, மேலும் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது என்றும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. கால் கோள் விழாவன்று காளைகளுக்கான முன்பதிவு தொடங்குவது என்றும், முதலில் உள்ளூர், மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    • உற்சவமூர்த்திகளுக்கு வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது.
    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடைபெற உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பொங்கலூர் அலகுமலை பிரஹன்நாயகியம்மன் சமேத ஆதிகைலாசநாதர் கோவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை திரிசதி சத்ரு சம்ஹார பூஜைகள் நடைபெற்றது.

    உற்சவமூர்த்திகளுக்கு வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத முருகருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டபின் சத்ரு சம்ஹார மந்திரங்கள் சொல்லப்பட்டு, மகா தீபாராதனையுடன் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடைபெற உள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    திருப்பூர் அலகுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாைள காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது.
    • வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் -அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் உள்ளமுத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் முன்னிலையில் கோபூஜை நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் -அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கங்கணம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    சுமார் 1500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் -குழந்தைகள் சஷ்டி விரதத்தை துவக்கினர். பின்னர் அலகுமலை, மூலவரான முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு மரிக்கொழுந்து பச்சை மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அடிவார மண்டபத்தில் கந்தன் கருணை எனும் தலைப்பில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு - திருக்கோவில் ஆன்மிகப் பேரவையினர் செய்து வருகின்றனர்.

    • அலகுமலை அடிவாரத்தில் மந்தை வெளி புறம்போக்கு நிலம் உள்ளது.
    • நில அளவை செய்யப்பட்டதில் மந்தை புறம்போக்கில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    பொங்கலூர் அலகுமலை அடிவாரத்தில் மந்தை வெளி புறம்போக்கு நிலம் உள்ளது. அந்நிலத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தொங்குட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மந்தை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார் என மலைப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததன் பேரில் நில அளவை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் நில அளவை செய்யப்பட்டதில் மந்தை புறம்போக்கில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாளை 29-ந் தேதிக்குள் கட்டடங்களை அகற்றி, மந்தை புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் என்று திருப்பூர் தெற்கு தாசில்தார் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனருக்கு கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.

    • எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
    • இங்கு சமூக விரோத செயல்களும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் நிலவும் என்றனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் அருகே அலகுமலையில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் முன்பு கொடி கம்பம் மற்றும் தேர் ஆகியன நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பாதுகாப்பிற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அப்போதைய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவராக இருந்த முருகன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் இருபுறமும் நுழைவாயில் அமைக்கப்பட்டது.

    அந்த நுழைவாயில் பகல் நேரங்களில் திறக்கப்பட்டும், இரவு நேரங்களில் பூட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோயிலின் அருகே உள்ள கேட் நிரந்தரமாகவும் மூடப்பட்டது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பிரிவினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தது. அதன் பின்னர் அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால் தற்போது அந்த கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் நேற்று கம்பி வேலி அகற்றும் போராட்டம் மற்றும் தலித் மக்களின் 12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை மீட்கும் போராட்டம் என போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனை தொடர்ந்து நேற்று கோயிலுக்கு சம்பந்தப்பட்ட பிரிவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். இதன் காரணமாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், அவிநாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர் மேலும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜன், கோவில் செயல் அலுவலர் சரவணபவன் ஆகியோரும் வந்தனர்.

    போராட்டம் அறிவித்த தரப்பினரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிசெல்வன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி. கலையரசன், பல்லடம் தொகுதி செயலாளர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தரப்பில், இந்த கம்பி வேலியை முழுமையாக அகற்ற வேண்டும், பொதுமக்கள் சென்று வர எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது என்பதே எங்களது கோரிக்கை. மேலும் கோயிலின் அருகில் உள்ள கேட்டையும் திறந்து விட வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு போலீஸ் தரப்பில் திங்கட்கிழமை அமைதி பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். அதுவரை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கோயில் தரப்பில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ஏற்கனவே 2010 முதல் என்ன நடைமுறை அறிவிக்கப்பட்டதோ அது அப்படியே தொடர வேண்டும். இதில் எந்த விதமான மாறுதலும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இங்கு சமூக விரோத செயல்களும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் நிலவும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ×