search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adikailasanathar Temple"

    • உற்சவமூர்த்திகளுக்கு வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது.
    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடைபெற உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பொங்கலூர் அலகுமலை பிரஹன்நாயகியம்மன் சமேத ஆதிகைலாசநாதர் கோவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை திரிசதி சத்ரு சம்ஹார பூஜைகள் நடைபெற்றது.

    உற்சவமூர்த்திகளுக்கு வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத முருகருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டபின் சத்ரு சம்ஹார மந்திரங்கள் சொல்லப்பட்டு, மகா தீபாராதனையுடன் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடைபெற உள்ளது.

    ×