search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் செங்குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
    X

    பல்லடம் அருகே ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்ட போது எடுத்த படம்.

    பல்லடம் செங்குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

    • நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஜூலை 8-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்தனர். இந்தநிலையில் பல்லடம் வட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறை மூலம் ஏற்கனவே நோட்டிஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அந்த வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஜூலை 8-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது.இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற திருப்பூர் கோட்டாட்சியர் பண்டரிநாதன், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், நகராட்சி ஆணையாளர் விநாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார், மற்றும் போலீசார், தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, நகராட்சி பணியாளர்கள் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்தவர்கள் வீடுகளை காலி செய்ய அவகாசம் கேட்டனர் பின்னர் அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு நாள் அவகாசம் அளிக்குமாறும் அதற்குள் தாங்களாகவே வீடுகளை காலி செய்து விடுவதாகவும் குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் நந்தகோபால், மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிநடைபெற்றது. வருவாய்த்துறையினர், போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×