search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்றும்"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
    • மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினரிடம் புகார் மனு கொடுத்து மலைத்தேனீக்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று அங்கு கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினார்கள். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.

    காகாபாளையம்:

    சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நகராட் சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர். இதனால் தினமும் இளம்பிள்ளையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த விஷயம் சேலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள், அங்கு நேற்று ஆக்கிரமிப்பு களை அகற்றும் நடவ டிக்கையை தொடங்கினர். ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் இளம்பிள்ளை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதையொட்டி மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் சங்க கிரி ஊராட்சி ஒன்றியம் ஐவேலி ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • அள்ளப்பட்டு மீண்டும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்க கிரி ஊராட்சி ஒன்றியம் ஐவேலி ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதையொட்டி ஊரில் பொது இடத்தில் குவிக்கப்பட்ட குப்பைகள் அள்ளப்பட்டு மீண்டும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) எல். நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர். ஒன்றியக்குழு உறுப்பினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ). வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. சவாரி செயல் பட்டு வரும் கடைகளின் கோடுகள் மற்றும் கடையின் பொருள்களை ரோடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து மெர்சல் ஏற்படுவதோடு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். தற்போது ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இததனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    தொடர்ந்து அதிகாரிகள் ரோட்டை அளவீடு செய்யும் போது ஒரு சில பெரிய கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கடை உரிமையாளர்களுக்கு விரைவில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கருத்தை முடித்து அகற்ற வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    ×