search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு"

    • அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.
    • ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி இந்திரநகர் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதிய அளவுமயான வசதி இல்லை. மேலும் சிலர் மயான பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். அந்த கட்டிடங்களை இடித்து மயானத்திற்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இப்பகுதியில் 4 சாலைகள் சந்திப்பதால் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதால் 4 சாலைகளிலும் வேகத்தடை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இரு பகுதிகளிலும் நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனவும், முறையாக குடிநீர் விநியோகம் இல்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜ், வருவாய்த்துறை அலுவலர்கள், கோசணம் ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் 7 நாட்களுக்குள் உங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தருகிறோம் என உறுதி கூறியதன் அடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் கோபி நம்பியூர் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.

    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநகர பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செலவு தொகை, ஆக்கிரமிப்பு செய்ததற்கான அபராத கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த நேரிடும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் முக்கிய சாலைகளான எஸ்.என். ஹை ரோடு, நயினார்குளம் சாலை, டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை பைபாஸ் சாலைகள், முருகன் குறிச்சி சாலை, திருவனந்தபுரம் சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக சாலைகளில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநகர பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது.

    இதற்கு சாலைகளின் இருபுறமும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைதான் காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. எனவே சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், தள்ளுவண்டி கடைகள், விளம்பர போர்டுகள் உள்ளிட்டவற்றை அகற்றி நடைபாதைகளில் நடந்து செல்வதற்கும், சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சாலையையும், நடைபாதையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், மேற்கூரைகள் ஆகியவற்றை 24 மணி நேரத்திற்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதோடு ஆக்கிரமிப்பு பொருட்கள் திரும்ப வழங்கப்படமாட்டாது.

    ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செலவு தொகை, ஆக்கிரமிப்பு செய்ததற்கான அபராத கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த நேரிடும். மேலும் கட்டுமானம் மற்றும் கட்டிட பராமரிப்பு பணி செய்வோர் கட்டிட இடிபாடுகளையோ, கட்டுமான பொருட்களையோ பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாகவோ, கழிவுநீர் செல்லும் கால்வாய்களிலோ கொட்டி வைக்க கூடாது. அவ்வாறு கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன.

    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர்வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வைத்து சென்னையில் சுமார் 3 1/2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கமுடியும்.

    புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், நீர்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ.விடம் ஐ.ஐ.டி.,யின் நகர்ப்புற வளர்ச்சி, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மையமான 'கியூப்'அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

    இதில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் 3 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த கட்டுமான பணி தற்போது 24 சதவிதமாக உயர்ந்து இருக்கிறது.

    புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன. இதில் கட்டுமான நடவடி க்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் நகரம் விரிவாக்கத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் 1991-ம் ஆண்டு மொத்த நில பரப்பில் 55 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள், 2023-ல் 33 சதவீதமாக குறைந்துள்ளன.

    இதேபோல் புழல் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மண்ணில் பேரியம், கோபால்ட், குரோமியம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாகவும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்பரப்பு மண் மாதிரிகளில் ஈயம் மற்றும் ப்ளூரைடு சற்று அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் ஏரியில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வின் முடிவை வைத்து புழல் ஏரியில் நீர்பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன் மென்ட் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதில் பல ஆண்டு காலமாக கட்டிடங்கள் இயங்கி வருவதாகவும் செங்கல்பட்டு கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    கோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பல்லாவரம் தாசில்தார் தலைமையில் போலீசார் உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்கத்தொடங்கினர். ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. பின்பு ஆக்கிரமித்த கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதில் தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விளையாட்டுக் கிளப்புகள், வர்த்தக கட்டிடங்கள், ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடங்கும்.

    பரங்கிமலை மற்றும் கண்டோன்மெண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    மீட்கப்பட்ட இந்த இடங்களில் அரசு கட்டிடம் மற்றும் மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இடம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றலாம் என்று வருவாய்த்துறை மூலமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

    ஆலந்தூரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை ரெயில் நிலைய பகுதியில் வாகனம் நிறுத்தும் இடங்கள் நாள்முழுவதும் நிரம்பி வழிகிறது. வாகன நிறுத்தும் இடம் அமைப்பதால் இந்த பிரச்சினையை தீர்ப்பதுடன், அரசு போதிய வருவாயும் ஈட்ட முடியும் என்றார்.

    ஆனால் பரங்கிமலை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ள ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஆவணம் அதிகாரிகளிடம் இல்லை. இதனால் வருவாய் துறை அதிகாரிகள் தவறாக சீல் வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
    • கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரையில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோவிலுக்கு சாதகமாக வரப்பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய துறையினர் மூலம் நீலகண்டேஸ்வரர் சாமி கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத் துறை தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) சுந்தர வள்ளி தலைமையில் ஒய்வு பெற்ற தாசில்தார் வரதராஜன், ஆய்வாளர் ஜனனி, வழக்கு ஆய்வாளர் கனகராஜ், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவீடு செய்தனர். இதில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 1/2 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.

    • சாலைப்பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் கனரக எந்திரங்கள் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
    • இழப்பீடு வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழியாக பொள்ளாட்சி முதல் காமலாபுரம் வரை விபத்து இல்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக லக்கையன்கோட்டை கிராமத்தில் சுமார் 1 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த னர். இந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் கனரக எந்திரங்கள் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவம் குறித்து அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு மாதத்திற்குள் உரிய இழப்பீடு தொகையை வாங்கி தருவதாக கூறி சமரசம் செய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது.
    • பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவாதிட்டார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் அரசு ஆவணங்களின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • தேரடி மூடு பகுதியில் உள்ள புரோட்டா கடையின் மேல் கூரை ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது
    • வீடுகள் முன்பு போடப்பட்டிருந்த சீட்டுகளை அவர்களே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. வடிவீஸ்வரம் நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது.

    சுகாதார ஆய்வாளர் ஜான் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்கொண்டனர். தேரடி மூடு பகுதியில் உள்ள புரோட்டா கடையின் மேல் கூரை ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.

    அதை மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். இதேபோல் வீடுகள் முன்பு போடப்பட்டிருந்த சீட்டுகளை அவர்களே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள். ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து கோட்டார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் புகாராளிக்கப்பட்டது.
    • ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் வேளானேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி (வயது 55). இவரது குடும்பத்தினர் கடந்த பல வருடங்களாக பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவரை கட்டி தெருவை மறைத்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை சங்கிலியும், அவரது குடும்பத்தினரும் நாள்தோறும் ஆபாசமாகவும் மிகவும் தரக்குறைவாக பேசி வருவதாகவும் புகார் எழுந்தது. இதனால் அந்த பாதையை கடந்து தங்களது வீடுகளுக்கு சென்று வருவதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தனிப்பட்ட ஒரு குடும்பத்தினர் பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளது குறித்து வேளானேரி ஊராட்சி மன்றத்தலைவரான போதும்பொண்ணு முனியாண்டியிடம் அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    மேலும் ஊராட்சி மன்ற தலைவர் போதும்பெண்ணு, இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய பி.டி.ஓ., திருச்சுழி தாசில்தார் ஆகியோரிடம் புகாரளித்தார். அந்த பகுதியை அளந்து ஆக்கிரமிப்பு இருந்தால் பாரபட்சமின்றி அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

    இது தொடர்பாக ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றிய நிலையில் அளவீடுகள் செய்வதற்கான கட்டணமும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செலுத்தப்பட்டது. இதனால் சங்கிலி குடும்பத்தினருக்கும், ஊராட்சி மன்றத்தலைவர் போதும்பொண்ணுவுக்கும் இடையே பகை மூண்டது. இதற்கிடையில் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 10 அடி பொதுப்பாதையை மறைத்து சங்கிலி குடும்பத்தினர் காம்பவுண்டு சுவர் கட்டியது உறுதியானது. அந்த காம்பவுண்டு சுவரை அகற்ற வருவாய்த்துறையினர் தயாராகினர்.

    இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கு சென்றபோது கடும் எதிர்ப்பு தெரிவித்த சங்கிலி குடும்பத்தினர் திடீரென தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த சங்கிலி குடும்பத்தினரை போலீசார் எச்சரித்தனர். அதன் பிறகு ஓரிரு நாட்களில் தாங்களாகவே ஆக்கிரமிப்பை எடுத்துக்கொள்வதாக சங்கிலி குடும்பத்தினர் கேட்டு கொண்டதன் பேரில் அரசு அதிகாரிகள் சில நாட்கள் அவகாசம் அளித்தனர்.

    அதற்கு பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் புகாராளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சங்கிலி குடும்பத்தினர் இதற்கெல்லாம் ஊராட்சி மன்றத் தலைவர் போதும்பொண்ணுதான் காரணம் என்று கூறி பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசி வந்தனர்.

    கடந்த மாதம் 18-ந்தேதி மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சியும் தள்ளிப்போனது. இதனால் காம்பவுண்டு சுவரை கடந்து செல்லும் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் சங்கிலி குடும்பத்தினர் பொதுமக்கள் நடந்து செல்லும் பொதுப்பாதையை மண் கொண்டு வழி மறித்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட ஊராட்சி மன்றத்தலைவர் போதும் பொண்ணுவை வெட்ட அரிவாளுடன் சங்கிலி ஆவேசமாக வந்துள்ளார்.

    இதனால் அச்சமடைந்த போதும்பொண்ணு தனது கணவரான முனியாண்டியுடன் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். தனது உயிருக்கு பாதுகாப்பு கோரியதுடன் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சங்கிலி மற்றும் அவரை தூண்டிவிட்ட சங்கிலியின் மனைவியான ஜோதிலட்சுமி ஆகியோர் மீதும் புகார் அளித்தார்.

    அத்துடன் ஆக்கிரமித்து கட்டியுள்ள காம்பவுண்டு சுவரால் உயிர் பலி போன்ற பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்விரைவில் அந்த சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி ஆணையாளர் காந்திராஜ் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நேரில் வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. ஊடக பிரிவை சேர்ந்த சதீஷ், போராட்டத்தில் பதட்டம் நிலவுவதாகவும், அனைவரும் உடனே வரவேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதாக கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர். இதனை அறிந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் முதுநகர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
    • கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    இந்த நிலங்களில் பலர் உரிய அனுமதி பெற்று வீடு கட்டி கோவிலுக்கு வரி செலுத்தி வசித்து வருகின்ற னர். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளன. இந்த நிலையில் சிலர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை முறையாக செலுத்தாமலும், கோவில் நிலத்தில் உரிய அனுமதி யின்றியும் கட்டிடம் கட்டி வசித்து வந்ததாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதியின்றி வசித்து வருபவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படியும், வரி செலுத்தாத வர்கள் வரி பாக்கியை செலுத்துமாறும் பலமுறை நோட்டீஸ் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தீர்வு ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வசித்து வந்த வீடுகளை, இடித்து அப்புப்புறப்படுத்தும்படி நிலம் மீட்பு தீர்ப்பாணையம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கோவில் அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் வீட்டை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து நேற்று மாலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட2 வீடுகளை இடித்து அகற்றுவ தற்காக போலீசாருடன் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியே செல்லும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வீட்டை காலி செய்வதற்கு மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டு மென கோரிக்கை வைத்த னர். அதற்கு அதிகாரிகள் கடந்த 2010-ம் ஆண்டே இது குறித்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்ப்பு வழங்கப்பட்ட தாகவும் இனி அவகாசம் தர முடியாது எனவும் தெரி வித்தனர். மேலும் அந்த வீடுகளில் வசித்தவர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்று மீண்டும் அதே இடத்தில் வீடு கட்டி வசிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 வீடுகளில் வசித்தவர்கள் போலீசார் பாதுகாப்புடன் வெளி யேற்றப்பட்டு அந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப் பட்டன.

    • ஆக்கிரமிப்பு நிலம் கோவிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
    • இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5.14 கோடி ஆகும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரையில் உள்ள விஸ்வநாதசாமி கோவிலுக்கு சொந்தமான, பட்டுக்கோட்டை , காசாங்கு ளம் கீழ்க்கரை பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 811 சதுர அடி பர ப்பளவு இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணை யர் ஞானசேகரன் மற்றும் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) கவிதா தலைமையில், தஞ்சாவூர் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர், தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமை எழுத்தர் பிரகாஷ் பரம்பரை அறங்காவலர் கட ம்பநாதன், திருக்கோயிலின் செயல் அலுவலர் சுந்தரம் கணக்கர் ரெங்கராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் முன்னிலையில் ஆக்கிரமி ப்பு நிலம் மீட்கப்பட்டு அங்கு நிரந்தர அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலம் திருக்கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5.14 கோடிகள் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×