என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செங்கோடு அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் சாலை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு இருந்ததால் பேருந்து திரும்ப முடியாமலும் இருசக்கர வாகனம் வந்தால் கூட கடந்து செல்ல முடியாமல் இருப்பது தெரியவந்தது.
- அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் ஒன்றியம் சப்பையபுரம் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பஸ்வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1½ கிமீ நடந்து வரவேண்டிய நிலையில் இருந்தனர்.
பள்ளி மாணவர்கள் முதியவர்கள் என பலரும் இதனால் சிரமபட்டனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில் விசாரித்த போது சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் சாலை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு இருந்ததால் பேருந்து திரும்ப முடியாமலும் இருசக்கர வாகனம் வந்தால் கூட கடந்து செல்ல முடியாமல் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து வருவாய் தறையினர், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வேயர் ஆகியோரை கொண்டு நில அளவை செய்து ஆக்கரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆக்கிரமிப் பாளர்களிடம் எதிர்ப்பு வந்தால் போலீசார் துணையுடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லியிருந்தார்.
அதன்படி இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. 50 போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், கிராமநிர்வாக அலுவலர் அருண் சர்வேயர் கண்ணன், ஊராட்சித்தலைவர் பிரதிபா ரமேஷ், துணைத்தலைவர் அமுதா கண்ணன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளி்ட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். பொதுமக்கள் நலனுக்காக விரைந்து நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்