search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் நிலை ஆக்கிரமிப்பு"

    • அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க அறிவுரை
    • ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முழுமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அதிக அளவு மழை வெள்ளம் வந்ததால் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் திறம்பட செயல்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த ஆண்டு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறிப்பாக அணைக்கட்டு, பேரணாம்பட்டு, குடியாத்தம், மோர்தானா உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்கு செல்லாதவாறு தடுக்க அதிகாரிகள் வாக்கி டாக்கிகளை பயன்படுத்தி மழை வெள்ளம் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    நெடுஞ்சாலைகளில் மரைக்கிளைகள் விழுந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதற்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இதே போல் மழை மானி சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

    • உயிரினங்கள் வசித்து வருதுடன் உழவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது.
    • ஆண்டுதோறும் பராமரிப்பு செய்து நீர்வரத்தை பெறுவதற்கு தயார்படுத்துவதில்லை.

    உடுமலை :

    நீராதாரங்கள் பராமரிப்பில் அக்கறை காட்டாததால் நீர் வழித்தடங்கள் குளம் குட்டை உள்ளிட்டவை நாளடைவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இதனால் அடைமழை பெய்தாலும் அவை நீர்வரத்தை பெற முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வகையில் உடுமலை தளி பகுதியில் ஒரு சில நீராதாரங்களைத் தவிர மற்றவைகள் நீர் இருப்பை பெற முடியாமல் தவித்து வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நீராதாரங்களை மையமாகக் கொண்டு அனைத்து விதமான உயிரினங்கள் வசித்து வருதுடன் உழவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது. அவற்றை ஆண்டுதோறும் பராமரிப்பு செய்து நீர்வரத்தை பெறுவதற்கு தயார்படுத்துவதில்லை. இதனால் படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளானதுடன் மண் சூழ்ந்து மேடாகி விட்டது. இதன் காரணமாக முழுமையான நீர் வரத்தை பெற முடியாமலும் அதையும் மீறி வெள்ளப்பெருக்கு நீராதாரத்தை அடைந்தால் வீணாகி வருவதும் தொடர்கதையாக உள்ளது. நீராதாரங்கள் பராமரிப்பில் முனைப்பு காட்டாததால் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தும் நீர்வரத்தை பெறாமல் குளம் குட்டைகள் தவித்து வருகிறது. இதனால் கிணறு ஆழ்குழாய் கிணறுகள் விரைவில் வறண்டுவிடுவதுடன் விவசாய தொழிலும் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் சூழல் நிலவுகிறது.

    விவசாயத் தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தளிக்கு உட்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள நீராதாரங்கள் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்து அவற்றில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்வர வேண்டும். இதனால் மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர் இருப்பு உயர்ந்து வருவதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாக இருப்பதில் கிணறு, குளம், குட்டை, ஏரி, ஓடை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாலும், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் பாழாகி வருகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் உப்பாறு ஓடை வழியாக செல்கிறது. இதனால் குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

    உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் இறுதியாக உப்பாறு அணைக்கு செல்கிறது . உப்பாறு அணை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. உப்பாறு ஓடை செல்லும் வழிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. சில இடங்களில் ஓடை தெரியாத அளவிற்கு சீமைகருவேல மரங்களாக காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் ஓடை வழியாக செல்லும் மழை நீர் வீணாகிறது. சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.

    நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ள நிலையில் குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட உப்பாறு ஓடை பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.எனவே உப்பாறு ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை மழைக்கு முன்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். பல்லடம் வட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறை மூலம் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அந்த வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால்உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவர்களிடம் அங்கு வசிக்கும் மக்கள் கால அவகாசம் மற்றும் மாற்று இடம் வழங்க கேட்டனர்.இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நாளை 8ந்தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் குடியிருப்புவாசிகள் திடீரென வீடுகளை காலி செய்தால், தொழில் மற்றும் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் .எனவே அந்த இடத்திற்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த தாசில்தார் நந்தகோபால் நீதிமன்ற உத்தரவை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாளைக்குள் ஆக்கிரமிப்புப் குடியிருப்புகளை அகற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு குடியிருப்புவாசிகள் மேலும் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். தாசில்தார் மறுக்கவே கூட்டம் முடிவுற்றது.

    ×