search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deer"

    உணவுக்காக மலையில் இருந்து வெளியேறி அருகிலுள்ள தோட்டங்களுக்கு மான்கள் செல்கின்றன.

    காங்கயம்:

    காங்கயம் அடுத்துள்ள ஊதியூா் மலையில் 100 க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. கோடை காலங்களில் மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் குடிநீா் மற்றும் உணவுக்காக மலையில் இருந்து வெளியேறி அருகிலுள்ள தோட்டங்களுக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில், சனிக்கிழமை இரவு மலையிலிருந்து கீழிறங்கி, குண்டடம் சாலையைக் கடக்க முயன்ற ஒரு புள்ளிமான், ஒரம்பபுதூா் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி உயிரிழந்தது. இது குறித்த தகவலறிந்த காங்கயம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மானின் உடலை கைப்பற்றினா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா். 

    • அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
    • பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கடற்கரை பகுதியில் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது.

    வழக்கம்போல் சுற்றித்திரிந்த அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.

    இதனால் காயங்களுடன் கிடந்த அந்த மானை அவ்வழியாக வந்த பிரபுகுமார் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்தவர்கள் வனவர் பெரியசாமி, வனக்காவலர் நாகூரான், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், வேதமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மானை மீட்டு கோடியக்கரை உதவி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது.

    • கர்நாடக எல்லை நுழைவாயிலில் கர்நாடக வனத்துறை சார்பில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • சாலை அருகே வனத்துறை கட்டிடம் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த கடமான் அழகை ரசித்து செல்கிறார்கள்.

    மேட்டூர்:

    தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதி பாலாறு ஆகும். இங்குள்ள கர்நாடக எல்லை நுழைவாயிலில் கர்நாடக வனத்துறை சார்பில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடி அருகே வனத்துறைக்கு சொந்தமான அலுவலகம் கட்டிடம் அமைந்துள்ளது.

    இதனை சுற்றியும் வனப் பகுதி என்பதால் இந்த பகுதிகளில் யானை, மான், முயல், நரி போன்ற வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக மாலை நேரத்தில் பாலாற்றில் தண்ணீர் அருந்துவதற்காக யானைகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறது.

    இதை அந்த சாலையை வாகனங்களில் கடந்து செல்லும் ஏராளமான சுற்றுலா பகுதிகளில் நின்று ரசித்துச் செல்வார்கள். இது மட்டுமின்றி கர்நாடக வனத்துறை அலுவலகம் மற்றும் சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் கடமான் ஒன்று தினசரி வந்து செல்கிறது. சாலை அருகே வனத்துறை கட்டிடம் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த கடமான் அழகை ரசித்து செல்கிறார்கள்.

    மக்களைக் கண்டு அச்சப்படாமல் தைரியமாக இந்த பகுதியில் உலாவரும் கடமான் நாள்தோறும் வந்துசெல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன.
    • மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

     காங்கயம் :

    காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் மலையில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன. இந்நிலையில் ஊதியூா் வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய புள்ளிமான் குண்டடம் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    குடிநீர் தேடி வனங்களில் இருந்து வெளியேறும் விலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே வனங்களில் குடிநீா்த் தொட்டி அமைத்து தண்ணீா் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
    • நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. நகரின் எல்லை பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இதில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.

    அமராவதி புதூரில் இருந்து புளியால் வரை உள்ள காட்டுப் பகுதிகளில் மான்கள் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் நெடுஞ்சாலையைக் கடந்து வருவது வழக்கம்.

    அப்படி கடந்து வரும் போது வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாரிச்சான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானின் உடலை மீட்டுச் சென்றனர்.

    மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்தும், வேகக்கட்டுபாடுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தும் வகையிலும் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
    • மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.

    ஏற்காடு:

    ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.

    இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.

    • ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    • சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகிரி:

    சிவகிரி வனத்துறை ரேஞ்சர் மவுனிகா தலைமையில், கடந்த மாதம் 17-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முருகன் என்பவரின் தோட்டத்தில் மான்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாக 5 நபர்களையும், இதனை தொடர்ந்து ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜதுரை மகன் சதீஸ்குமார் (வயது 28) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும் இதுசம்பந்தமாக சில நபர்களை வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.


    • வனக்காப்பாளரிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.
    • கண்மாய் கரையில் புள்ளிமான் செத்து கிடந்தது.

    புதுக்கோட்டை,

    காரையூர் அருகே அரசமலை சம்புருதி கண்மாய் கரையில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற அரசமலை வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் ஆகியோர் கிராம உதவியாளர்களுடன் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனக்காப்பாளர் கனகவள்ளியிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.

    • அபிராமம் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், பாப்பனம், நகரத்தார் குறிச்சி, பள்ளபச்சேரி, உடையநாதபுரம், விரதக்குளம், காடனேரி, பொட்டகுளம் உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    இந்த பயிர்களை காட்டுப் பன்றி, மான்கள் சேதப்படுத்தி நாசம் செய்து வருகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.

    பி்ன்னர் வன விலங்கு களிடம் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அப்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

    இதுகுறித்து விவசாயி விரதக்குளம் கர்ணன் கூறுகையில், மான், காட்டுப்பன்றி, முயல், நரி போன்ற வன விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான கிராமங்களில் நிலக்கடலை, பயிறு வகைகள், கேப்பை போன்ற பயிர்களை சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டனர். வனத்துறையினர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது.

     அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும். காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர். இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கிடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பயிர்களை நல்லமுறையில் பாதுகாத்து இரவு விடியவிடிய கண்விழித்து தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து நல்லமுறையில் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தோட்டம் ,காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில் ,முன்பெல்லாம் தோட்டம், காடுகளில் விவசாயதொழிலுடன் ஆடு,மாடு, கோழிவளர்ப்பில் ஈடுபடுவார்கள். நாகரீக உலகத்தில் தற்போது நாட்டுக்கோழி, ஆடுகள் வளர்ப்பது மறைந்துவருகிறது. அதேசமயம் மான், மயில்கள் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயபயிர்களை நாசம் செய்துவிடுகிறது. அரும்பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நாசமாவதுடன் எங்கள் பாடு வீணாகி பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் இருந்த நிலையில் இப்போது அவினாசி ஒன்றியத்தில் 40 கி.மீ சுற்றளவிற்கு தோட்டம் ,காடுகளில் மான்கள், மயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது. எனவேதான் சிறுத்தை நடமாட்டம் தொடங்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் மான், மயில்களுடன் போராடுவது போதாதென்று தற்போது எந்த நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம்

    மான், மயில்களின்தொந்தரவை கட்டுப்படுத்த அரசு,விவசாயத்துறை, தோட்டக்கலை துறையினரிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்குஎந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் இதற்கு தீர்வுகாண அவினாசி ஒன்றியத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதிரண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒன்றுதான் வழிஎன்றனர்.

    • விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
    • அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது.

    மேட்டுப்பாளையம் 

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துரை, அகத்தியர் பீடம், ஊட்டி-குன்னூர் சாலை, கல்லார் காட்டேஜ் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இந்த வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானை, புள்ளிமான், சிறுத்தை, கடமான், காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடியும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம்.அப்படி வரும் போது விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.


    இந்த நிலையில் அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனை அந்த பகுதியில் மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதை விசாரிப்பதற்காக வந்த தாசில்தார் மாலதி பார்த்தார். உடனடியாக அவர் சம்பவம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, புள்ளிமானை கைப்பற்றினர். இந்த பகுதியில் 20-க்கும் ேமற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் நாய்கள் கடித்ததில் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    இருப்பினும் நாய்கள் கடித்ததால் தான் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த பகுதியில் 3 மான்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வரும் மான், யானைகளை போட்டோ எடுத்தால் வழக்குப்பதிவு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1435 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

    இங்கு யானைகள் புலி,சிறுத்தை, கரடி, செந்நாய்கள், கடமான்கள், புள்ளிமான்கள், கழுதைபுலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது.

    இந்த சரணாலயத்தின் மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்கும் தலமலை வனப்பகுதி யானைகள் இடம்பெறும் முக்கிய வழித்தடமாக உள்ளது. அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர் கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிக்கின்றனர். யானை, புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் சாாலையோரம் துளிர்விட்டு பச்சைபசேல் என படர்ந்திருக்கும் புற்களை சாப்பிட அடிக்கடி வருவது வழக்கம்.

    அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்வதால் இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,சுற்றுலா பயணிகள் யானை, புள்ளிமான்களை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். சிலர் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, சப்தமிடுவதும் வனவிலங்குகளின் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகின்றன.

    சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்பி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை துரத்தி தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆபத்தை உணராத இளைஞர்கள் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    சல சலவென ஓடும் நீரோடைகளில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதும் எல்லையை மீறிய செயலாககாணமுடிகிறது. இயற்கையான சூழல் கொண்ட விலங்குகள் வாழும் வாழ்விடத்தில் மனிதர்கள் அத்துமீறி நுழைந்து யானை, சிறுத்தை. புள்ளிமான்களின் வாழ்விடத்தில் இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    ×