search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாய் கடித்த மான் மீட்பு; ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது
    X

    காயமடைந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நாய் கடித்த மான் மீட்பு; ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது

    • அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
    • பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கடற்கரை பகுதியில் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது.

    வழக்கம்போல் சுற்றித்திரிந்த அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.

    இதனால் காயங்களுடன் கிடந்த அந்த மானை அவ்வழியாக வந்த பிரபுகுமார் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்தவர்கள் வனவர் பெரியசாமி, வனக்காவலர் நாகூரான், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், வேதமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மானை மீட்டு கோடியக்கரை உதவி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது.

    Next Story
    ×