search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே மான்களை வேட்டையாடிய மேலும் ஒருவர் கைது
    X
    கைதான சதீஸ்குமார்.

    சிவகிரி அருகே மான்களை வேட்டையாடிய மேலும் ஒருவர் கைது

    • ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    • சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகிரி:

    சிவகிரி வனத்துறை ரேஞ்சர் மவுனிகா தலைமையில், கடந்த மாதம் 17-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முருகன் என்பவரின் தோட்டத்தில் மான்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாக 5 நபர்களையும், இதனை தொடர்ந்து ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜதுரை மகன் சதீஸ்குமார் (வயது 28) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும் இதுசம்பந்தமாக சில நபர்களை வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.


    Next Story
    ×