என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "damaged"
- மதுரை தமுக்கம் சந்திப்பில் உள்ள நேரு சிலை பீடம் வாகனம் மோதி சேதம் அடைந்தது.
- காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலுக்கு ஈடுபட முயன்றனர்.
மதுரை
மதுரை தமுக்கம் சந்திப்பில் தபால் தந்தி அலுவலகம் அருகில் நேரு சிலை உள்ளது. இன்று அதிகாலை அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேரு சிலை பீடத்தில் மோதியது. இதில் சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்தி கேயன் தலைமையில் தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் நேரு சிலையை சேதப்படுத்திய நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து கட்சியினர் சாலை மறியலுக்கு ஈடுபட முயன்றனர். உடனடியா அங்கு வந்த தல்லாகுளம் போலீசார் நேரு சிலை பீடத்தை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து காங்கிரசார் போராட்டத்தை கைவிட்டனர்.
- அந்தியூர் பர்கூர் மலையில் உணவு தேடி வந்த காட்டுயானை 2வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.
- இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி மாதம்மாள் (65). இவர்களது மகன் முனியப்பன். மாதம்மாள் தனது மகளுடன் அருகாமையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அதிகாலை இவர்களின் வசிப்பி டத்துக்கு காட்டுயானை உணவு தேடி வந்துள்ளது. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது தெரியவந்தது. உணவு தேடி வந்த காட்டுயானை இவர்களின் வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.
இதுகுறித்த தகவலின்பேரில் பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உணவு தேடி காட்டுயானை குடியிருப்புக்கு வந்து செல்வது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர். இதேபோல் அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உடன்குடி அருகே அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
- கடந்த 22-ந்தேதி மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து வாகவிளை செல்லும் மெயின் ரோட்டில் காமராஜர் நகர், ஆண்டி விளை பகுதியில் அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இதுபற்றி கடந்த 22-ந்தேதி மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதைப்பார்த்த மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை மாற்றினர். இப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன, துணைத்தலைவர் செல்வகுமார், இப்பகுதி மக்கள் ஆகியோர் இதற்கு காரணமான மாலை மலர் நாளிதழ் மற்றும் மின்சார துறைஅதிகாரிகள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை தந்த கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி அடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது.
இந்நிலையில் அக்னி முடிவடையும் கடைசி நாளான நேற்று காலை கடும் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து செங்கோட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடும் வெப்பத்தை அனுபவித்து வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.
மழையால் நீர்தேக்கங்கள், தடுப்பணைகள், பண்ணை குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. குடிநீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வந்த யானை கூட்டங்கள் உட்பட விலங்குகளின் தாகத்தினை தீர்ப்பதற்கும் கோடை மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் அருகில் சாலையின் இருந்த பெரியமரம் ஒன்று நேற்றைய சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்தது. அப்போது மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கூடல் குமரன் (வயது 61 ), அவரது மனைவி முத்தமிழ்வடிவு (57) மற்றும் மகன் விஜயகுமார் (30) ஆகியோர் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் சாய்ந்து விழுந்தது.
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்களும், மின்வாரிய ஊழியர்களும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி காருக்குள் இருந்த மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர். இதில் கார் மட்டும் சேதமடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
முக்கூடல் பகுதியில் நேற்று மாலை பலத்த இடியுடன் லேசான மழை பெய்தது. அப்போது முக்கூடல் அருகே உள்ள கண்டபட்டி கிராமத்தில் உள்ள 110 ஆண்டு பழமையான கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள கோபுரத்தில் ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட சிலுவையின் மீது இடி தாக்கியதால் சிலுவை முற்றிலும் சேதமடைந்து கீழே விழுந்ததில் தடுப்பு சுவர் பலத்த சேதமடைந்தது. அந்த நேரத்தில் ஆலயத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாகவே பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.
இந்த ஆண்டு கோடை மழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. சாரல் மழை பெய்தபோதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் பலன் தரும் நிலையில் இருந்த ஏராளமான வாழைகள் காற்றுக்கு சேதம் அடைந்தது.
பல இடங்களில் மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருந்தபோதும் காலைவரை மின் வினியோகம் இல்லை. இதனால் இரவு முழுவதும் இருளில் தவித்தனர்.
சமீப காலமாக கோடை மழையில் காற்றின் வேகமே அதிகமாக உள்ளது. மழைப்பொழிவு போதிய அளவு இல்லை. சூறாவளி காற்று சுழன்று வீசுவதால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
மேலும் செங்கல் காளவாசலில் வைக்கப்பட்டிருந்த செங்கலும் கரைந்து ஓடியதால் செங்கல் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த வீடு உள்ளது. அந்த வீடு முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையார் நினைவு நூலகமாக கருணாநிதி உயிரோடு இருந்தபோதே மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த வீட்டில் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகத்தம்மாள் ஆகியோரின் உருவ சிலைகள், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பழைய நினைவுகளை கூறும் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த வீட்டை தி.மு.க.வினர் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.
பழமை மாறாமல் அந்த ஓட்டு வீடு பராமரிக்கப்பட்டு நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. இந்த நிலையில் கஜா புயலின் தாக்கத்தில் இந்த வீடும் தப்பவில்லை. கருணாநிதி பிறந்த வீட்டின் அருகில் இருந்த தென்னை மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. வீட்டுக்கு முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ‘நூலகம்’ என்ற வாசகம் அடங்கிய பெயர் பலகை மரம் விழுந்ததில் சேதமடைந்தது. மேலும் சூறாவளி காற்றினால் வீட்டின் ஓடுகளும் உடைந்தன.
இந்த தகவலை அறிந்த கருணாநிதியின் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்ததுடன், உடனடியாக சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், கருணாநிதி பிறந்த வீட்டை உடனடியாக சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். #GajaCyclone #Karunanidhi
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் பல ஆயிரம் ஏக்கர் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
கந்தவர்க்கோட்டை அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி சந்திரா (வயது 45). விவசாயிகளான இவர்களுக்கு அதே பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வாழை, தென்னை, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர். அவற்றை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.
சமீபத்தில் வந்த கஜா புயலால் இந்த பயிர்கள் கடுமையான வகையில் சேத மடைந்தன. சேதமடைந்த பயிர்களை சந்திரா கடந்த 17-ந்தேதி பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து யாருடனும் பேசாமல் சோகத்தில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்திரா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கந்தவர்க்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #GajaCyclone
கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை புயல் புரட்டிப் போட்டுள்ளது.
காரைக்குடி பொன் நகர், வள்ளலார் நகர், இலுப்பக்குடி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுமார் 400-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் நேற்று அதிகாலை 3 மணியளவில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் விடிய விடிய அவதிக்குள்ளானார்கள். இன்று காலையும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அனைத்து மின் கம்பங்களையும் சீரமைத்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என்றனர். இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாவட்டத்தில் வருவாய்த் துறையினர், பொதுப் பணித்துறையினர், மின் வாரிய அமைப்பினர் என அனைத்து துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். ஆனாலும் பல இடங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் இன்னும் சீர்செய்யப்படவில்லை.
இதன் காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளி கல்லூரிளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வு எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவாளர் குருமல்லேஷ்பிரபு அறிவித்துள்ளார்.
புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் சாய்ந்ததில் வள்ளலார் தெரு, பொன் நகர் பகுதி யில் பல வீடுகளின் காம்ப வுண்டு சுவர்கள் இடிந்து சேதமடைந்தன. பொன் நகரில் தோட்டத்தில் இருந்த 15 தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காரைக்குடியில் தொடர்ந்து மீட்பு பணிகளில் அதிகாரிகள் வேகம் காட்டி வருகின்றனர். #GajaCyclone
கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 17-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு 50 வயதிற்குட்பட்ட பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நிலக்கல், பம்பை, பத்தனம் திட்டா போன்ற பகுதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள் பல பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.
நிலக்கல் பகுதியில் நடந்த வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. மேலும் 10-க்கும் மேற்பட்ட பக்தர்களின் வாகனங்களும் கல்வீச்சில் உடைந்தன. இது தொடர்பாக 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச இந்து பரிஷத் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடை பெற்றது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன, பஸ்களும் ஓடவில்லை. நேற்றும் சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினார்கள்.
பம்பையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சபரிமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் பந்தளம் ராஜ குடும்ப கட்டிடம் முன்பு சரண கோஷ போராட்டம் நடைபெற்றது. சபரிமலை ஆச்சாரத்தை மீறக்கூடாது என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
சபரிமலை கோவில் தந்திரி ராகுல் ஈஸ்வரர் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து போராட்டம் நடத்திய மன்னர் குடும்பத்தினர் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
சபரிமலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நிலக்கல், பம்பை, இலவங்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 30 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு வருகிற 22-ந்தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
தொடர்ந்து சபரிமலை பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு இன்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #Sabarimala #SabarimalaProtests
கூடலூர் பகுதியில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. காலையில் வெயிலும், மதியவேளைக்கு பிறகு மழையும் காணப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல் அருகே அரிகோடுவயல் பகுதியை சேர்ந்த உபேஷ், ரெதிஷ், ரவி, ரியாஷ் ஆகியோர் அதே பகுதியில் விவசாய நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குத்தகை எடுத்தனர்.
பின்னர் 5 ஆயிரம் நேந்திர வாழைகளை பயிரிட்டு பராமரித்து வந்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் இரவு பகலாக கண்காணித்து வாழைகளை வளர்த்து வந்தனர். மேலும் உரமிட்டு பராமரித்ததால் வாழை மரங்கள் நன்கும் வளர்ந்து, வாழைத்தார்கள் காணப்பட்டன. இன்னும் சில வாரங்களில் வாழைத்தார்களை அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6½ மணிக்கு தேவர்சோலை பகுதியில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதில் உபேஷ், ரெதிஷ், ரவி, ரியாஷ் ஆகியோரின் வாழைகள் காற்றில் முறிந்து விழுந்தது. இதில் சுமார் 1,000 வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
5 ஆயிரம் வாழைகளை நட்டு பராமரித்து வந்த நிலையில் சூறாவளி காற்று வீசி ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்து விட்டது. வழக்கமாக காட்டு யானைகள் சேதப்படுத்தி விடும் என எதிர்பார்த்து இரவு பகலாக கண்காணித்து வந்தோம். ஆனால் காட்டு யானைகளுக்கு பதிலாக சூறாவளி காற்று எங்களது பொருளாதாரத்தை பாதித்து விட்டது. எனவே அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி விட்டோம். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, சிலமலை, தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏலக்காய் விவசாயிகளுக்கு பல ஆயிரக்கணக்கான ஏலக்காய் விவசாய தோட்டங்கள் கேரள மாநிலத்தில் உள்ளது.
கடந்த 4 நாட்களாக ஏலக்காய் விளையும் தோட்டங்கள் உள்ள கேரளா ஏலமுடி, பூப்பாறை, சாந்தாதாம்பாறை, கஜனாப்பாறை, சுண்டல், மூணாறு, வண்டன்மேடு உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழையும், சூறாவளி காற்றுடன் பெரும் மழையும் பெய்து வருகிறது.
இது சமயம் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய பெரும் மழையால் ஏலத்தோட்டங்களில் ஏலச்செடி நிழலுக்காக உள்ள பெரிய சிறிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாய்ந்த மரங்கள் அருகில் உள்ள ஏலச்செடிகளில் விழுந்து நாசம் ஆகின.
சூறாவளி காற்றால் ஏலச் செடிகள் ஒன்றுக்கொன்று முறுக்கி ஒடிந்து கீழே விழுந்துது உள்ளது. இதனால் தற்போது பறிக்கும் நிலையில் உள்ள ஏலக்காய், பழங்காய்கள், கருங்காய்கள், பிஞ்சுகள் பலத்த சேதம் அடைந்தன. இதை கண்ட ஏலக்காய் விவசாயிகள் மனமுடைந்து காணப்பட்டனர். கடன் வாங்கி ஏலக்காய் விவசாயம் செய்தவர்கள் குத்தகைக்கு எடுத்தவர்கள் பல லட்சகணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்கள் வழியாகவும், தெருச்சாலைகள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சூறாவளி காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக ஏல விவசாயிகள் குடியிருக்கும் வீடுகள், ஏலக்காயை பதப்படுத்தும் ஸ்டோர்கள், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்களில் முற்றிலும் மின்சாரம் சப்ளை இல்லாமல் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் கேரள மாநில அரசு செயல்பட்டு தேனி மாவட்ட ஏலக்காய் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்