search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "replaced"

    • உடன்குடி அருகே அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
    • கடந்த 22-ந்தேதி மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து வாகவிளை செல்லும் மெயின் ரோட்டில் காமராஜர் நகர், ஆண்டி விளை பகுதியில் அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

    இதுபற்றி கடந்த 22-ந்தேதி மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதைப்பார்த்த மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை மாற்றினர். இப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன, துணைத்தலைவர் செல்வகுமார், இப்பகுதி மக்கள் ஆகியோர் இதற்கு காரணமான மாலை மலர் நாளிதழ் மற்றும் மின்சார துறைஅதிகாரிகள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.சசாங் இன்று மாற்றப்பட்டு உள்ளார். #Mizoram #Shashank #ChiefElectroralOfficer
    புதுடெல்லி:

    மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

    இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த  எஸ்.பி.சசாங் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.



    இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த சசாங் இன்று மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக ஆஷிஷ் குந்த்ரா என்பவரை நியமனம் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Mizoram #Shashank #ChiefElectroralOfficer
    ×