search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus accident"

    • விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகுளத்தூர்:

    கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர் உள்பட 49 பேர் சபரிமலைக்கு பஸ்சில் புறப்பட்டனர். இவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி கர்நாடக பக்தர்கள் குழுவினர் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்று இரவு ராமேசுவரத்திற்கு பஸ்சில் புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புல்லந்தை நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள சி.எஸ்.ஐ. சர்ச் அருகே ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது கர்நாடக பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த பெல்லாரியை சேர்ந்த கண்ணப்பா என்பவரின் மகன் சந்தீப்(வயது25) என்பவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிப்பர் லாரியுடன் மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
    • 14 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் தனியார் பேருந்து சுமார் 30 பேர்களுடன் ஆரோன் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிப்பர் லாரி ஒன்று ஆரோனில் இருந்து குணா பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. குணா-ஆரோன் சாலையில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியது.

    மோதிய வேகத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் இருந்தவர்கள் வெளியே குதித்து தப்பிக்க முயற்சித்தனர். இருந்தபோதிலும் தீ வேகமாக பரவியதாலும், விபத்தில் பஸ் சேதமடைந்து இருந்ததாலும் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

    கண்ணிமைக்கும் நேரத்திற்குள் 12 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவர்களது குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி, காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் "இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்து குறித்து கேள்விப்ப்பட்டதும் உடனடியாக கலெக்டர் மற்றும் எஸ்.பி.-யை தொடர்பு கொண்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணியை தொடங்க உத்தரவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்ற பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
    • அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சிரபாக்கம் அருகே அம்மணம்பாக்கத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேற்றிரவு புறப்பட்டனர். இன்று காலை 3 மணியளவில் திண்டுக்கல் பைபாஸ் சாலை மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்ற பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அம்மணம்பாக்கத்தை சேர்ந்த திருவேங்கடம்(36), அவரது மகள் ஹரிணி(8), ஜெகதாம்பாள்(50), விநாயகம் (40), கோவிந்தராஜ்(27), ஹரிகரன்(16), சுதர்சன்(17), சுகுமாறன்(37). சங்கரலிங்கம்(31) உள்பட 23 அய்யப்ப பக்தர்கள் படுயாமடைந்தனர்.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் ராம்கியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.
    • 24 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் டிரைவர் உள்பட 28 பேர் இருந்தனர்.

    இன்று அதிகாலை 1 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அவில்தார் சத்திரம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

    இந்த விபத்தில் டிரைவர், பயணிகள் என 24 பேர் படுகாயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 24 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அப்துல் மஜித்(வயது55) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவர்களது ஆட்டோ செட்டியங்காடு என்ற பகுதியில் சென்ற போது, எதிரே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    ஆட்டோவில் இருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்டோவில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.

    பின்பு படுகாயம் அடைந்தவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த ஐயப்ப பக்தர்கள் யாரும் காயம் அடையவில்லை. சாலை திருப்பத்தில் பஸ் வேகமாக திரும்பிய போது தவறுதலாக ஆட்டோ மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. பலியான ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித் தனது மகளுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மகள் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதே போல் விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது புல்லூரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போது தனது 2 குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் பலியாகிவிட்டார்.

    இந்த விபத்து பலியானவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது.
    • கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், விஜயபுரத்தில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புறப்பட்டது. பஸ்சினை ஈரியூரை சேர்ந்த கோவிந்தன் (வயது 47) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் பள்ளியின் பாத்ரூமை கழுவ 2 லிட்டர் ஆசிட் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

    பஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆசிட் பாட்டில் சாய்ந்து விழுந்து, ஆசிட் கொட்டியது. இதனால் பஸ் முழுவதும் கடும் நெடியுடன் துர்நாற்றம் வீசியது. இதில் மாணவர்களுக்கு மூச்சுதிணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பஸ்சினை நிறுத்திய டிரைவர், மாணவர்களை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார். தொடர்ந்து கிளினர் அம்ம களத்தூர் ராஜவேல் (36) உதவியுடன் ஆசிட் மீது நீரை ஊற்றி சுத்தம் செய்தார்.

    தொடர்ந்து பஸ்சினை இயக்கிய டிரைவர், மாணவர்களை பள்ளியில் இறக்கிவிட்டார். வகுப்பறைக்கு சென்ற ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நேற்று மாலை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பள்ளி பஸ்சின் டிரைவர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சின்னசேலத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளி பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.

    • 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பஸ்சில் திருப்பதிக்கு சென்றனர்.
    • போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆரணி:

    மதுரையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பஸ்சில் திருப்பதிக்கு சென்றனர். பஸ்சை தஞ்சாவூரை சேர்ந்த விக்டர் என்பவர் ஓட்டி சென்றார்.

    சாமி தரிசனம் முடிந்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலை நெசல் கூட்ரோடு அருகே வரும்போது சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.

    இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக 4 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் ப ள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

    இதில், 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்து சென்றபோது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    • விபத்தில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தகவல்.

    தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பேருந்து ஒன்று 49 பேருடன் பிரச்சாவ் கிரி கான் மாகாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது ஹாட் வனாக்கார்ன் தேசிய பூங்கா அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் வேகமாக மோதியது.

    இதில், பேருந்தில் இருந்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " பேருந்து ஓட்டுனர் தூங்கியதே விபத்துக்கான காரணம் என தெரிகிறது. விபத்தில் உயிர் பிழைத்த பேருந்து ஓட்டுனருக்கு ரத்த மாதிரி சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிகிறோம்.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் தாய்லாந்து, பர்மா மற்றும் வீராபெட் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    • பைக்கில் சென்றபோது விபரீதம்
    • போலீஸ் விசாரணை

    கண்ணமங்கலம்,

    சந்தவாசல் அருகே உள்ள தேப்பனந்தல் சந்தைமேட்டை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் ஹரிஹரன் (வயது 23), கலசபாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபு ரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஹரிஹரன் மோட்டார் சைக் கிளில் தேப்பனந்தல் சந்தை மேடு பகுதியில் வந்து கொண் டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த தனியார் பஸ் எதிர்பா ராத விதமாக மோதியதில் ஹரிஹரன் படுகாயமடைந் தார். அவரை அக்கம்பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு 108 ஆம்புலன் சில் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.
    • குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த கொல்லாச்சேரியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-வது படிக்கும் சந்தோஷ் (16) என்ற மாணவர் மாநகர பஸ்சில் படிக்கெட்டில் தொங்கிச் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.

    பலத்த காயம் அடைந்த மாணவன் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இரண்டு கால் பாதங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதாக பஸ் டிரைவர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஸ் மீது குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • 10 பேர் காயம்
    • போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்தனர்

    ராணிப்பேட்டை:

    சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக அரசு பஸ் சென்றது.

    அப்போது வாலாஜா டோல்கேட் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். டிரைவர் பஸ்சை கட்டுக்குள் கொண்டு வர முயற்ச்சித்தார்.

    இருப்பினும் பஸ் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் எஞ்சின் பாகங்கள் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர். போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×