என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
டிராக்டர் மீது பஸ் மோதி மதுரை பக்தர்கள் 15 பேர் படுகாயம்
- 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பஸ்சில் திருப்பதிக்கு சென்றனர்.
- போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரணி:
மதுரையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பஸ்சில் திருப்பதிக்கு சென்றனர். பஸ்சை தஞ்சாவூரை சேர்ந்த விக்டர் என்பவர் ஓட்டி சென்றார்.
சாமி தரிசனம் முடிந்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலை நெசல் கூட்ரோடு அருகே வரும்போது சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.
இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக 4 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்