search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP leader"

    • விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது
    • பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்

    சூரம்பட்டி,

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடன் வாங்கி மொபட்டை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதற்கான தவணை கட்டப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் செந்தில் குமார் வாங்கிய மொபட்டை ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளதாக நிதி நிறுவன த்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையொட்டி நிதி நிறுவன ஊழியர்கள் விக்னேஷ் குமார் (26)என்பவர் உள்பட 3 பேர் அந்த கடைக்கு சென்று அங்கு நின்ற மொபட்டை எடுக்க முயற்சி செய்தனர்.

    அப்போது கடையில் இருந்த செருப்பு கடையின் உரிமையாளரும் பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளருமான விநாயக மூர்த்தி அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    இதுபற்றி சூரம்பட்டி போலீசார் கூறும் போது

    இறந்த செந்தில் குமார் விநாயக மூர்த்தியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கடன் வாங்கி யிருந்ததாகவும் இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் இறந்து விட்டதால் செந்தில் குமாரின் வீட்டுக்கு சென்று ஸ்கூட்டரை எடுத்து வந்ததாவும் அந்த மொபட்டை தனது செருப்பு கடை முன்பு நிறுத்தி இருந்ததாகவும் கூறினர்.

    • காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது.
    • 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணமலை பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை. திமுக அரசின் கபட நாடகம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம்.

    மேலும், இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜக கோட்டப் பொறுப்பாளராகப் பொறுப்பு வகித்து வருபவா் பாலகுமாா் இவா் வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியிருந்து வந்துள்ளாா்
    • மா்ம நபா்கள் கடந்த சனிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மாயமாகினர்

    திருப்பூர் :

    பாஜக கோட்டப் பொறுப்பாளராகப் பொறுப்பு வகித்து வருபவா் பாலகுமாா். இவா் அங்கேரிபாளையம் ஏவிபி லே அவுட் 3 ஆவது வீதியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியிருந்து வந்துள்ளாா். அதன் பின்னா் வேறு பகுதிக்கு குடிபெயா்ந்துள்ளாா். இதனிடையே, பாலகுமாா் முன்பு குடியிருந்த வீட்டின் மீது மா்ம நபா்கள் கடந்த சனிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மாயமாகினர்எனினும் குண்டை பற்றவைக்காமல் வீசியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.இது குறித்து வீட்டின் உரிமையாளா் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று சையது இப்ராஹீம் 20, கேரளாவை சேர்ந்த பெரோஸ் காண் 32 ஆகிய இருவர் கைதாகி உள்ளனர் அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து, ‘கோட்சே தேசியவாதி’ என்று பா.ஜனதா பெண் எம்எல்ஏ உஷா தாக்குர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    இந்தூர்:

    மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் மன்னிப்பு கோரினார்.



    இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் மாவ் தொகுதி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ.வும், மாநில பா.ஜனதா துணைத்தலைவருமான உஷா தாக்குரிடம் ஒரு செய்தி சேனல் பேட்டி கண்டது. “கோட்சேவை தேசியவாதியாக கருதுகிறீர்களா?” என்று நிருபர் கேட்டதற்கு, “ஆமாம், அவர் தேசியவாதிதான். தனது வாழ்நாள் முழுவதும் அவர் நாட்டைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார். காந்தியை கொலை செய்ய எந்த சூழ்நிலையில் முடிவு எடுத்தார் என்பது அவருக்குத்தான் தெரியும்” என்று உஷா தாக்குர் பதில் அளித்தார்.

    இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உஷாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ என்று பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

    அழகாக தோன்றுவதற்காக மாயாவதி தினமும் ‘டை’ அடித்து முகத்தில் பவுடர் பூசி கொள்வதால் அவரது தோற்றம் எடுபடவில்லை என்று பா.ஜனதா தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #mayawati #bjp

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பரியா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு பா.ஜனதா சார்பில் தேர்வானவர் சுரேந்திரசிங். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் பல்லியா என்ற ஊரில் பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    மாயாவதி தன்னை அழகாக காட்டிக்கொள்ள விரும்புகிறார். தினமும் அவர் தலைக்கு டை அடிக்கிறார்.

    அது மட்டுமல்ல தன்னை பிரகாசமாக காட்டிக் கொள்வதற்காக முகத்தில் அதிகளவு பவுடர் பூசுகிறார். அழகாக உடை உடுத்தலாம் தவறு இல்லை. ஆனால் 60 வயதுக்கு பிறகு இளமையாக தோன்றுவதற்காக இப்படியா பவுடர் பூசுவது?


    அவர் அடிக்கும் டை தலைமுடியை கறுப்பாக காட்ட வேண்டும். ஆனால் அந்த டை கலர் கிரேயாக மாறி விடுகிறது. இதனால் அவரது தோற்றம் எடுபடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் இந்த கருத்துக்கு உத்தரபிர தேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்கை கண்டித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பதிவாகி வருகின்றன. #mayawati #bjp

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் முகுல் ராய் முன்ஜாமின் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #SatyajitBiswas #MukulRoy #Anticipatorybail
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் 9-2-2019 அன்று நடந்த சரஸ்வதி பூஜையில்  பங்கேற்றார்.

    சத்யஜித் பிஸ்வாஸ்

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் சத்யஜித் பிஸ்வாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  சத்யஜித் பிஸ்வாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். விரைவில் முகுல் ராயும் கைது செய்யப்படலாம் என திரிணாமுல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், சத்யஜித் பிஸ்வாஸ் கொலை வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் முகுல் ராய்  இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவின் மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறவுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முகுல் ராய் சில மாதங்கள் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். #SatyajitBiswas #MukulRoy #Anticipatorybail
    சென்னை விமான நிலையத்தில் பா.ஜனதா தலைவர் தமிழிசையின் கணவரிடம் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
    தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை. இவருடைய கணவர் சவுந்தரராஜன். பிரபல டாக்டரான இவர், கடந்த மாதம் 11-ந்தேதி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு சென்றார்.

    அவரது பையில் செல்போன் சார்ஜ் ஏற்றக்கூடிய ‘பவர்பாங்க்’ இருந்தது. அதை எடுத்து வைத்து கொள்ளுமாறு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். பின்னர் அவர், கொழும்புக்கு சென்று பார்த்தபோது பையில் இருந்த ரூ.50 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் உடைமைகளை கொண்டு செல்லும்போது யாராவது அந்த பணத்தை திருடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி விமான நிலைய போலீசில் சவுந்தரராஜன் புகார் செய்து உள்ளார்.

    அதன்பேரில் விமான நிலைய போலீசார், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அவரது பணத்தை யார் திருடியது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். #Uttarakhand #ITRaid #BJP #AnilGoyal
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ‘குவாலிட்டி ஹார்டுவேர்’, ‘உமாங் சேரீஸ்’, அலெக்சியா பேனல்ஸ், குவான்டம் பல்கலைக்கழகம், ‘பஞ்சாப் பிளைவுட் இன்டஸ்ட்ரீஸ்’ உள்ளிட்ட இந்த 13 நிறுவனங்களில் விற்பனையை மறைத்தல், கணக்கில் வராத ரசீதுகள் மற்றும் முதலீடுகள் என ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.

    கோயல் 2016-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் இவர் சமீபத்தில் டேராடூன் மேயர் பதவிக்கு டிக்கெட் கேட்டு வந்தார்.
    இருமுடி கட்டுடன் சபரிமலை சென்றபோது கைதான கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரனை ஜாமினில் விடுதலை செய்யுமாறு திருவல்லா கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SabarimalaTemple #KSurendran
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது

    இந்நிலையில், கடந்த 17-ம் தேதி கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் தனது காரில் மேலும் இருவருடன் ஐயப்பனை தரிசிப்பதற்காக இருமுடி கட்டுடன் சென்று கொண்டிருந்தார்.

    அவரை நிலக்கல் அருகே பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்டு யாதிஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கார் நுழைவுக்கான அனுமதி சீட்டும், தரிசனத்துக்காக கோவில் நிர்வாகத்திடம் ரசீதும் பெற்றிருக்கும் எங்களை ஏன் தடை செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் சுரேந்திரன் வாக்குவாதம் நடத்தினார்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேந்திரனை கைது செய்த போலீசார், பத்தினம்திட்டா மாவட்ட மாஜிஸ்திரேட் இல்லத்தில் மறுநாள் அதிகாலை சுரேந்திரனை ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, சுரேந்திரன் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



    சுரேந்திரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வினர் கடந்த இருநாட்களாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில், சுரேந்திரனை ஜாமினில் விடுதலை செய்யுமாறு கோரி திருவல்லா நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி சுரேந்திரனுக்கு ஜாமின் அளித்து உத்தரவிட்டார். #SabarimalaTemple #KeralaBJPleader #KSurendran 
    ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது. #MilitansAttack #BJPLeader
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்தவர் அனில் பரிஹார். அவரது சகோதரர் அஜித்.

    இருவரும் நேறு இரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனில், அஜீத்தை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.



    இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பாஜக மாநில செயலாளர் அனில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பொது செயலாளர் அசோக் கவுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரில் பல ஆண்டுக்கு பிறகு அரசியல் கட்சி பிரமுகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #MilitansAttack #BJPLeader
    வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதற்கு முன் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #VijayMallya #RahulGandhi #BJPLeader
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வருகிறார். அவர் மீது, ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

    ஆனால் லண்டன் கோர்ட்டில் நடைபெறும் நாடு கடத்தக்கோரும் வழக்கின் விசாரணையில் அவர் பங்கேற்பதால், மும்பை கோர்ட்டில் நேரில் ஆஜராகமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக சட்ட பிரதிநிதி ஒருவர் ஆஜராவார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்த நிலையில் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு முன் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்தினருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இது தொடர்பாக கூறியதாவது:-

    இந்திய வங்கிகளை மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கும் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் மோடி அரசு கருணையுடன் நடந்துகொள்கிறது. இந்திய சிறைகள் சரியில்லை என மல்லையா கூறியதால், அவருக்காக சிறப்பு ஜெயில் ஏற்படுத்தப்படுகிறது. இதை ஏற்க முடியாது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும்.

    விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேறும் முன் பா.ஜனதா மூத்த தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்களின் பெயரை வெளியிடமாட்டேன்.

    மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் குறித்த அழகான சுவரொட்டிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த ரெயில் டிக்கெட் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகம். நாளொன்றுக்கு 5 ஆயிரம் மக்களுக்காக ரூ.1½ லட்சம் கோடி என்பது தேவையற்ற முதலீடு.

    இந்த திட்டத்தை பற்றி பேசுவதில் மோடி அரசு காட்டும் ஆர்வத்தை, அதை செய்து முடிப்பதில் காட்டவில்லை. வேகமெடுக்காத இந்த திட்டம் வெறும் எண்ணம் மட்டும்தான். அதில் உண்மை இல்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    பின்னர் மேற்கு லண்டனில் இந்திய சர்வதேச காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என கூறிவரும் பிரதமர் மோடி, இதன் மூலம் காங்கிரசை அல்ல, நாட்டு மக்களையே அவமதித்து வருகிறார். ஏனெனில் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை இந்தியா காட்டியிருக்கிறது. இந்திய மக்கள் இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி உதவியிருக்கிறது.

    அதேநேரம் தற்போது தலித்துகள், விவசாயிகள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் மற்றும் இந்திய ஏழைகள், தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கிறார்கள். இதைக் கேட்டால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தலித் வன்கொடுமை சட்டம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    நாட்டில் யாரும் எதையும் பெறவில்லை. ஆனால் அம்பானி மட்டுமே அனைத்தும் பெற்று வருகிறார். இந்த மனிதர் ரூ.45 ஆயிரம் கோடி கடன் பெற்று இருக்கிறார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை, ஒரு தொழில் அதிபரின் வளர்ச்சிக்காக பா.ஜனதா அரசு கூடுதல் தொகைக்கு அதிகரித்து இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் கமிஷன், ரிசர்வ் வங்கி போன்ற நாட்டின் தூண்கள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. சீனா நாளொன்றுக்கு 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியா வெறும் 450 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரும் பிரச்சினை ஆகும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    முன்னதாக இந்த கூட்ட அரங்கிற்கு ராகுல் காந்தி வருவதற்கு முன் அங்கு வந்த ‘காலிஸ்தான்’ அமைப்பு ஆதரவாளர்கள் சிலர் ‘காலிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கூட்டத்தினர் சிலரும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #VijayMallya #RahulGandhi #BJPLeader
    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர் தெரிவித்தார். #OmMathur #BJP
    ஜெய்ப்பூர்:

    பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படாத ஒரு நகரம் கூட கிடையாது. நாடு, தர்மசத்திரம் ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகவே, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தொடங்கிய இந்த திட்டத்தை நிறைவேற்ற முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தைரியம் இல்லை. இந்த விஷயத்தில், ராகுல் காந்தி தனது முன்னோர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #OmMathur #BJP #tamilnews 
    ×