என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக தலைவர் தமிழிசையின் கணவரிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு
Byமாலை மலர்9 Feb 2019 1:54 AM GMT (Updated: 9 Feb 2019 1:54 AM GMT)
சென்னை விமான நிலையத்தில் பா.ஜனதா தலைவர் தமிழிசையின் கணவரிடம் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை. இவருடைய கணவர் சவுந்தரராஜன். பிரபல டாக்டரான இவர், கடந்த மாதம் 11-ந்தேதி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு சென்றார்.
அவரது பையில் செல்போன் சார்ஜ் ஏற்றக்கூடிய ‘பவர்பாங்க்’ இருந்தது. அதை எடுத்து வைத்து கொள்ளுமாறு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். பின்னர் அவர், கொழும்புக்கு சென்று பார்த்தபோது பையில் இருந்த ரூ.50 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் உடைமைகளை கொண்டு செல்லும்போது யாராவது அந்த பணத்தை திருடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி விமான நிலைய போலீசில் சவுந்தரராஜன் புகார் செய்து உள்ளார்.
அதன்பேரில் விமான நிலைய போலீசார், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அவரது பணத்தை யார் திருடியது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது பையில் செல்போன் சார்ஜ் ஏற்றக்கூடிய ‘பவர்பாங்க்’ இருந்தது. அதை எடுத்து வைத்து கொள்ளுமாறு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். பின்னர் அவர், கொழும்புக்கு சென்று பார்த்தபோது பையில் இருந்த ரூ.50 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் உடைமைகளை கொண்டு செல்லும்போது யாராவது அந்த பணத்தை திருடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி விமான நிலைய போலீசில் சவுந்தரராஜன் புகார் செய்து உள்ளார்.
அதன்பேரில் விமான நிலைய போலீசார், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அவரது பணத்தை யார் திருடியது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X