என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் தாக்குதலில் மூத்த பாஜக தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்1 Nov 2018 7:36 PM GMT (Updated: 2 Nov 2018 10:05 AM GMT)
ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது. #MilitansAttack #BJPLeader
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்தவர் அனில் பரிஹார். அவரது சகோதரர் அஜித்.
இருவரும் நேறு இரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனில், அஜீத்தை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பாஜக மாநில செயலாளர் அனில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பொது செயலாளர் அசோக் கவுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பல ஆண்டுக்கு பிறகு அரசியல் கட்சி பிரமுகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #MilitansAttack #BJPLeader
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X