search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nathuram Godse"

    பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து, ‘கோட்சே தேசியவாதி’ என்று பா.ஜனதா பெண் எம்எல்ஏ உஷா தாக்குர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    இந்தூர்:

    மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் மன்னிப்பு கோரினார்.



    இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் மாவ் தொகுதி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ.வும், மாநில பா.ஜனதா துணைத்தலைவருமான உஷா தாக்குரிடம் ஒரு செய்தி சேனல் பேட்டி கண்டது. “கோட்சேவை தேசியவாதியாக கருதுகிறீர்களா?” என்று நிருபர் கேட்டதற்கு, “ஆமாம், அவர் தேசியவாதிதான். தனது வாழ்நாள் முழுவதும் அவர் நாட்டைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார். காந்தியை கொலை செய்ய எந்த சூழ்நிலையில் முடிவு எடுத்தார் என்பது அவருக்குத்தான் தெரியும்” என்று உஷா தாக்குர் பதில் அளித்தார்.

    இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உஷாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ என்று பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
    போபால்:

    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

    அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.



    பிரக்யா சிங்கின் பேச்சுக்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்தார்.

    மேலும் பிரக்யா சிங் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார்.

    மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங் இதுகுறித்து கூறும்போது, “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என்றார்.

    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சிலையை காந்தி ஜெயந்தி தினத்தில் வைக்க முயன்றதால் 4 பேர் கைது செய்யப்பட்டனர். #GandhiJayanti #MahatmaGandhi
    அலகாபாத்:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் உருவ சிலையை வைக்க முயற்சி நடந்தது.

    உத்தரபிரதேச மாநிலம் சித்ரா கூட் மாவட்டத்தில் சக்வாரா என்ற கிராமத்தில் ராஷ்டீரிய சனாதன் தள் அமைப்பினர் கோட்சே சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ராஷ்ட்டீரிய சனாத்தன் தள் அமைப்பின் சித்ரகூட் மண்டல தலைவர் ராமேந்திராவுக்கு சொந்தமான இடத்தில் அந்த சிலை நிறுவப்பட இருந்தது.

    அதை அறிந்த கிராம மக்கள் உஷாராயினர். இது குறித்து சித்ரகூட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமாரிடம் புகார் செய்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கோட்சே சிலையை நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தினர். சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அது தொடர்பாக ராஷ்ட்டீரிய சனாதன் தள் அமைப்பின் நிறுவன உறுப்பினர் மற்றும் இணை அமைப்பாளர் பிரிஜேஷ் பாண்டே உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களில் 2 பேர் சித்ராகூட் பகுதியை சேர்ந்தவர்கள் ஒருவர் புஷார் பகுதியையும், மற்றொருவர் பாண்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர் ஆவார். கோட்சே சிலை நிறுவ இருந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #GandhiJayanti #MahatmaGandhi
    ×