search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dye"

    • சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றனர்.
    • சாயக்கழிவுகளை கலந்துவிடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை துறையின் அங்கமாக உள்ள சாய ஆலைகள், பிரிண்டிங், வாஷிங் நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன் சாயக்கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டும் என பல விதிமுறைகளுக்கு உட்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

    ஆனால் சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலே குடோன்கள் மற்றும் வீடுகளில் பிளாஸ்டிக் டிரம் மூலம் பட்டன், ஜிப் போன்றவற்றுக்கு சாயமேற்றுகின்றனர். பின்னர் சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றனர். அவ்வாறு திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் கலந்த சாயக்கழிவுநீரால் ஆற்றுநீர் நிறம் மாறி நுரையுடன் பாய்ந்தது.

    இதனால் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும்போது பயிர்கள் காய்கின்றன. இதனால் ஆற்றுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    எனவே மாசுக்கட்டுபாட்டு வாரியம் சாயக்கழிவுகளை கலந்துவிடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவுநீரை சுத்திகரிக்காததால், ஆலைகள் மலிவான கட்டணத்தில் துணிக்கு சாயமேற்றுகின்றன.
    • சிறப்பாக செயல்படும் உள்ளூர் சாய ஆலைகளுக்கு ஆர்டர் வழங்கி கைகொடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதி சாய ஆலைகள்மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதியுடன் விதிகளை பின்பற்றி இயங்குகின்றன. சாயக்கழிவுநீர் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. 18 பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு உட்பட்டு 400க்கும் மேற்பட்ட சாய ஆலைகள், தனியார் சுத்திகரிப்பு மையத்துடன் கூடிய 100சாய ஆலைகள் திருப்பூரில் இயங்குகின்றன.ஈரோடு, விருதுநகர், தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில், வாரிய அனுமதி பெறாமலும், சாயநீரை சுத்திகரிக்காத விதிமீறல் ஆலைகள் அதிகளவில் செயல்படுகின்றன. சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றி, சுற்றுச்சூழலை பாழ்படுத்துகின்றன. கழிவுநீரை சுத்திகரிக்காததால், இந்த ஆலைகள் மலிவான கட்டணத்தில் துணிக்கு சாயமேற்றுகின்றன.

    செலவு குறையும் என்பதால், திருப்பூரில் உள்ள சில பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், வெளியூர் ஆலைகளுக்கு துணியை அனுப்பி சாயமேற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி சில ஆசாமிகள் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து துணியை கபளீகரம் செய்துவிடுகின்றனர்.

    இதுகுறித்து, ஏற்றுமதியாளர் சங்கம், சைமா, டீமா, உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க தலைவர்களுக்கு சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு துணியை கொண்டுசென்று, குறைந்த கட்டணத்தில் சாயமேற்றித்தருவதாக ஏஜென்ட்கள் சிலர் ஆசை வார்த்தை கூறுகின்றனர். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள், இதை நம்பி அவர்களிடம் துணியை கொடுத்துவிடுகின்றனர். இவ்வாறு வாங்கிச் செல்லும் துணிக்கு மோசடி ஆசாமிகள் சாயமேற்றுவதில்லை. நல்ல விலைக்கு விற்பனை செய்துவிட்டு தலைமறைவாகிவிடுகின்றனர். இதுகுறித்து எங்கள் சங்கத்துக்கு பல புகார்கள் வந்துள்ளன.சிறிய லாபத்துக்காக போலி ஏஜென்ட்களிடம் துணியை கொடுத்து, பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஏமாறக்கூடாது.திருப்பூரில் இயங்கும் சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரிக்கின்றன. சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீரையும் பாதுகாத்து சிறப்பாக செயல்படும் உள்ளூர் சாய ஆலைகளுக்கு ஆர்டர் வழங்கி கைகொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    அழகாக தோன்றுவதற்காக மாயாவதி தினமும் ‘டை’ அடித்து முகத்தில் பவுடர் பூசி கொள்வதால் அவரது தோற்றம் எடுபடவில்லை என்று பா.ஜனதா தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #mayawati #bjp

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பரியா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு பா.ஜனதா சார்பில் தேர்வானவர் சுரேந்திரசிங். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் பல்லியா என்ற ஊரில் பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    மாயாவதி தன்னை அழகாக காட்டிக்கொள்ள விரும்புகிறார். தினமும் அவர் தலைக்கு டை அடிக்கிறார்.

    அது மட்டுமல்ல தன்னை பிரகாசமாக காட்டிக் கொள்வதற்காக முகத்தில் அதிகளவு பவுடர் பூசுகிறார். அழகாக உடை உடுத்தலாம் தவறு இல்லை. ஆனால் 60 வயதுக்கு பிறகு இளமையாக தோன்றுவதற்காக இப்படியா பவுடர் பூசுவது?


    அவர் அடிக்கும் டை தலைமுடியை கறுப்பாக காட்ட வேண்டும். ஆனால் அந்த டை கலர் கிரேயாக மாறி விடுகிறது. இதனால் அவரது தோற்றம் எடுபடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் இந்த கருத்துக்கு உத்தரபிர தேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்கை கண்டித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பதிவாகி வருகின்றன. #mayawati #bjp

    ×