என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bank account"
- 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை.
- வங்கிகளில் ’ஜீரோ பாலன்ஸ்’ வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பாலன்ஸ்'கணக்கை தொடங்க வேண்டும்.
அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகரில் புத்தகத் திருவிழாவிற்கு நன்கொடை வழங்க வங்கி கணக்கு தொடக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 11 நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த புத்தகத் திருவிழாவை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கக் கூடிய வகையிலும், அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்கொடை அளிப்பதற்கு ஏதுவாக புத்தகக் கண்காட்சிக்கென்று கீழ்காணும் விவரப்படி தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கு பவர்கள் கலெக்டரிடம் நேரிலோ அல்லது வங்கி வரைவோலையாகவும் மற்றும் காசோலையாகவும் அளிக்கலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கிக்கணக்கின் பெயர்: District Collector (Book Fair) வங்கிக்கணக்குஎண் - 174801000010896 MICR CODE : 626020304 IFSC CODE : IOBA0001748.
மேலும் விவரங்களுக்கு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர். செல்போன் எண்.70108 02058, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், செல்போன் எண். 75502 46924 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
- போலீசார் 10 நாட்கள் தங்கியிருந்து இதில் சம்பந்தப்பட்ட ஜக்கி. கைலாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டறிந்து, அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் வங்கி கணக்குகள் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகள், அசையும், அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக நடப்பு ஆண்டில் 5 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் ரூ. 8 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 623 மதிப்புள்ள வங்கி கணக்கு மற்றும் அசையும்-அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் 136 வழக்குகளில் தொடர்புடைய 296 பேரின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.37 லட்சத்து 62 ஆயிரத்து 531 முடக்கப்பட்டு உள்ளது. கஞ்சா வழக்குகளில் மீண்டும் ஈடுபட்ட 22 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேரின் பிணை ஆணையை ரத்து செய்து மீண்டும் அவர்களை ஜெயிலில் அடைத்துள்ளோம். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 225 பேரிடம் 'மீண்டும் கஞ்சா விற்பணையில் ஈடுபட மாட்டோம்' என்று பிணை பத்திரம் பெறப்பட்டு, அவர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கட்டதேவன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார், முத்துராமன் ஆகியோரின் பிணை பத்திரம் ரத்து செய்யப்பட்டு, அவர்களை மேலும் 10 மாதம் ஜெயிலில் அடைக்க உத்தரவி டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 8 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கஞ்சாவை அழிப்பதற்கு மண்டல அளவிலான குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அவை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள ஒரு கிட்டங்கியில் வருகிற 17-ந் தேதி அழிக்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டம் செக்காணூரணியில் கஞ்சா விற்பனை செய்த கோவிலாங்குளம் முத்து (47) என்பவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 393 மதிப்புள்ள அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஒத்தக்கடையில் கஞ்சா வழக்கில் பிரகாஷ், நிஷந்தன், குணசேகரன் மற்றும் அவர்களின் உறவி னர்களின் ரூ.55 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகள், 5 வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
கஞ்சா கடத்தல்காரர்கள் மட்டுமின்றி அவர்களின் உறவினர்கள் சொத்துக்க ளும் சட்டப்படி முடக்கப்ப டும். கஞ்சா விற்பனை செய்யும் சிறுவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கூட அளவில் போதை பொருள் விழிப்புணர்வு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் கொரியர் மற்றும் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வெளியூர் போக்குவரத்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேரையூரில் 24 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்க ளுக்கு கஞ்சா சப்ளை செய்த சென்னை வாலிபரை தேடி வருகிறோம்.
மேலூரில் 95 பவுன் நகை கொள்ளை வழக்கில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கும்பல் ஈடுபட்டு உள்ளது. அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை, மத்திய பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அங்கு தனிப்படை போலீ சார் 10 நாட்கள் தங்கி யிருந்து இதில் சம்பந்தப்பட்ட ஜக்கி. கைலாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்படவில்லை. இது தவிர மேலும் 4 பேரை பிடிக்க வேண்டியுள்ளது. இதற்காக தனிப்படை போலீசார் மீண்டும் மத்திய பிரதேசம் செல்ல உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாராஷ்டிராவில் 3.16 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன.
- 37 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளன.
மும்பை :
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கும் வகையில், ஜன் தன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆதார் கார்டை வைத்து மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கி கொடுக்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட 12 சதவீத வங்கி கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என பேங்க் ஆப் மகாராஷ்டிரா பொது மேலாளர் விஜய் காம்ளே கூறியுள்ளார்.
அவுரங்காபாத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பாகவத் காரட் தலைமையில் நடந்த மாநில பேங்கர்ஸ் கமிட்டி கூட்டத்துக்கு பிறகு அவர் இதை கூறினார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் 3.16 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 37 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளன. அந்த கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை. எனவே அந்த கணக்கு வைத்த நபர்களை தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கணக்கை செயல்பாட்டில் வைக்க கூற வேண்டும்.
இதேபோல 18 வயது நிறைவடைந்த இளைஞர்களை கண்டறித்து ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கை தொடங்க வைக்க வேண்டும். மகாராஷ்டிராவில் ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் 10 ஆயிரத்து 938 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வங்கி சேமிப்பு கணக்கு காலாவதி ஆகி விட்டதாக வங்கியிலிருந்து அனுப்பியது போல் எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
- அடுத்த சில நிமிடங்களில் இவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
கொண்டலாம்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி இபி காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 65) .இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி சேமிப்பு கணக்கு காலாவதி ஆகி விட்டதாக வங்கியிலிருந்து அனுப்பியது போல் எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் எஸ்.எம்.எஸ்-ல் உள்ள லிங்கை திறந்து பார்த்தார். அதில் கேட்கப்பட்ட தகவல்களையும் தெரிவித்துள்ளார்.அடுத்த சில நிமிடங்களில் இவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் வங்கியில் சென்று கேட்டபோது அப்படி எந்த ஒரு தகவலும் அனுப்ப வில்லை என்று தெரிவித்தனர்.இதை தொடர்ந்து பிரபாகரன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனின் பணம் எந்த வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்து அந்த கணக்கில் இருந்து பணத்தை மீட்டு பிரபாகரன் கணக்கில் ஒப்படைத்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் கூறுகையில் இந்த மோசடி கும்பல் பெரும்பாலும் வெளி மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள். எனவே அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதில் சிரமமாக உள்ளது.எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வேலூரை அடுத்த காட்டுபுதூர் ஆவாரம்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி சாரதா (வயது 64). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘எனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எனது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி குறுந்தகவல் வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஆன்-லைன் மூலம் ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை எடுத்தவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை என்றும் கூறினார்கள்.
எனவே எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணத்தை பெற்றுத்தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #tamilnews
இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியில் இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளரின் உறவினர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக ராமதாஸ் அத்வாலே இன்று இங்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட செல்வாக்கு சரிவு தொடர்பாக கூட்டணி கட்சிகள் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை முன்வைத்து பா.ஜ.க. கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என குறிப்பிட்ட்ட அவர் பா.ஜ.க.வுடன் சிவசேனா மீண்டும் கைகோர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வெகு விரைவாக குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என நம்புகிறேன் என இன்றைய பேட்டியின்போது ராமதாஸ் அத்வாலே குறிப்பிட்டார்.
இதே மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ராம்தாஸ் அத்வாலேவை பிரவீன் கோசுவாமி என்பவர் கன்னத்தில் அறைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். #15lakh #15lakhinbankaccounts #RamdasAthawale
நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று கூறியது.
இதன்படி, புதிய செல்போன் இணைப்பு (சிம்கார்டு) பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை அளிக்கலாம். இது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது ஆகும். #AadhaarCard
இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் எனப்படும் தனிப்பட்ட 12 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்பு சார்பில் வழங்கப்படும் ஆதார் அட்டை பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
“எனது ஆதார், எனது அடையாளம்” என்ற முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் தங்கள் நலத்திட்டங்களையும், உதவிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது. ஆதார் சேவையை மேலும் வலுப்படுத்த ஆதார் எண்ணை பான்கார்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, சமையல் கியாஸ் வினியோகம் உள்பட பல்வேறு சேவைகளுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது.
பிறகு செல்போன் சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் ரகசிய தகவல்கள் கசிந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து ஆதார் ஆணையம் சில பரிந்துரைகளை கொண்டு வந்தது. அந்த பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. சட்ட அமைச்சகம் அதை பரிசீலித்து, “அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று திருத்தம் செய்தது.
தற்போது இந்த பரிந்துரை மத்திய அமைச்சரவையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
அந்த சட்ட திருத்தத்தில், ஆதார் கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். மேலும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுக்கும். #BankAccount #AadhaarCard
கடந்த 2015-ம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் மேற்கூரையில் ஓட்டை போட்டு கட்டுக்கட்டாக இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன. மொத்தம் 5.78 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர், இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முகர்சிங் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் கொள்ளையர்கள் வாங்கிய சொத்துகளையும், வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள பணத்தையும் முடக்க தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக கைதான 7 பேரின் வங்கி கணக்கை போலீசார் முடக்கம் செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவர்களது சொத்துகளை முடக்கம் செய்ய இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பல கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் சந்துருஜி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
தற்போது ஏ.டி.எம். மோசடி குறித்து ஏராளமானோர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த மோசடியில் புதுவை மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் அது போல் புதுவையில் பரபரப்பு மோசடி சம்பவம் நடந்துள்ளது. புதுவையை சேர்ந்த 2 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே ஸ்வைப் மிஷின் மூலம் ரூ.15 லட்சம் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள், புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்