என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் மீண்டும் ஸ்வைப் மிஷின் மூலம் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் மோசடி
புதுச்சேரி:
புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பல கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் சந்துருஜி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
தற்போது ஏ.டி.எம். மோசடி குறித்து ஏராளமானோர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த மோசடியில் புதுவை மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் அது போல் புதுவையில் பரபரப்பு மோசடி சம்பவம் நடந்துள்ளது. புதுவையை சேர்ந்த 2 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே ஸ்வைப் மிஷின் மூலம் ரூ.15 லட்சம் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள், புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்