search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry lakh fraud"

    புதுவையை சேர்ந்த 2 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே ஸ்வைப் மிஷின் மூலம் ரூ.15 லட்சம் திருடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பல கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் சந்துருஜி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    தற்போது ஏ.டி.எம். மோசடி குறித்து ஏராளமானோர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த மோசடியில் புதுவை மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் அது போல் புதுவையில் பரபரப்பு மோசடி சம்பவம் நடந்துள்ளது. புதுவையை சேர்ந்த 2 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே ஸ்வைப் மிஷின் மூலம் ரூ.15 லட்சம் திருடப்பட்டுள்ளது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள், புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×