search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadhar number"

    • நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன.

    காங்கயம்:

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் காங்கயத்தில் நாளை 13-ந்தேதி நடைபெறவுள்ளது.

    இது குறித்து காங்கயம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் வெ.கணேஷ் வெளயிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன.

    சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்: முத்தூா் மற்றும் மேட்டுப்பாளையம் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட ராசாத்தாவலசு பேருந்து நிறுத்தம், தண்ணீா் பந்தல் பேருந்து நிறுத்தம், பெரிய காங்கயம்பாளையம் மற்றும் மங்களப்பட்டி.

    காங்கயம் மற்றும் ஊதியூா் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட தாயம்பாளையம், அமராவதி நகா், காந்தி நகா் கோயில், பாரதியாா் நகா் மற்றும் படியாண்டிபாளையம்.

    பழையகோட்டை, சிவன்மலை மற்றும் படியூா் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட நத்தக்காடையூா் பேருந்து நிறுத்தம் அருகில், சிவன்மலை அடிவாரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில், தம்மரெட்டிபாளையம் பள்ளி அருகில்.நால்ரோடு, கவுண்டம்பாளையம் மற்றும் எல்லப்பாளையம்புதூா் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட மருதுறை, சம்பந்தம்பாளையம் பிரிவு மற்றும் வஞ்சிபாளையம் பிரிவு.

    வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி மற்றும் கம்பளியம்பட்டி பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட இந்திரா நகா் ரேஷன் கடை அருகில், உப்புப்பாளையம் ரேஷன் கடை அருகில், சிவநாதபுரம், நாகமநாயக்கன்பட்டி மற்றும் லக்குமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது
    • விடுமுறை நாளான நாளை ஞாயிற்றுக்கிழமையும் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர் வோர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தர விட்டுள்ளது.

    சிறப்பு முகாம்

    இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் சிரமமின்றி ஆதார் எண்ணை இணைக்கும் பொருட்டு மின் வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு அங்கு மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் இப்பணிகள் கடந்த சில நாட்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 58 ஆயிரத்து 934 மின் இணைப்புகள் உள்ளது. இதில் இன்று காலை 11 மணி வரை 1 லட்சத்து 86 ஆயிரத்து 217 வாடிக்கையாளர்கள் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இப்பணிகளை மேலும் விரைவு படுத்தும் வகையில் 2-ம் சனிக்கிழமையான இன்றும் விடுமுறை நாளான நாளை ஞாயிற்றுக்கிழமையும் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    • ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் நாளை சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை விரைவாக முடிக்கவும், பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

    எனவே சிறப்பு முகாமில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அவரவர் வாக்குசாவடியில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் 6பி படிவத்தினை பூர்த்தி செய்து தருவதன் மூலம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு பகுதிகளில் இடம்பெறுவதையும் தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 01.08.2022 முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது
    • ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை முதல் நடைபெற உள்ளது.

    தென்காசி:

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையிலும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு பகுதிகளில் இடம்பெறுவதையும் தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 01.08.2022 முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை முதல் நடைபெற உள்ளது.

    அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் VHA(voter Help line Mobile App) என்ற செயலியின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் https://tenkasi.nic.in/ இணையதளத்தின் மூலம் படிவம் 6பி- ஐ பதிவிறக்கம் செய்தும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

    அனைத்து வாக்காளர் களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க 1.8.2022 முதல் பணி நடைபெறவுள்ளது
    • இணையவழியில் 6B-படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலிலுள்ள வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், ஒரு வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம்பெற்றுள்ளதா அல்லது ஒரு வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதா என்பதையும் கண்டறியவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியானது 1.8.2022 முதல் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயருள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண் விபரங்களை தன்விருப்பத்தின் அடிப்படையில் (Voluntary Basis) தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் தன்விருப்பத்தின் அடிப்படையில் பயன்பாட்டு இணைய தளங்களான www.nvsp.in, Voters Portal என்ற இணையதளங்கள் மூலமாகவும், Voter Helpline App என்ற மொபைல் செயலி மூலமாகவும் இணையவழியில் 6B-படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் அல்லது வாக்குச்சவாடி நிலை அலுவலர்கள் இப்பணிக்கு வரும்போது தன்விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6B - யினை பூர்த்தி செய்து சமர்ப்பித்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

    வாக்காளர்களுக்கு ஆதார் எண் இல்லை என்ற அடிப்படையில், ஆதார் எண் தெரிவிக்க இயலாத இனங்களுக்கு படிவம் -6B -ல் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து அதன் நகலினை படிவம் 6B உடன் அளிக்கலாம்.

    1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அடையாள அட்டை 2. வங்கி-அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குபுத்தகம் 3. தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை 4. ஓட்டுநர் உரிமம் 5. நிரந்தர கணக்கு அட்டை (Pan Card) 6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாள சான்று 7. இந்திய கடவுச்சீட்டு 8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் 9. மத்திய, மாநில அரசு,பொதுத்துறை நிறுவனங்கள்,வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை 10. நாடாளுமன்ற,சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்அலுவலக அடையாள அட்டை 11. இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால்வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை (UDID).

    எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலினை மேம்படுத்திட ஏதுவாக, வாக்காளர்கள் அனைவரும் தன்விருப்பத்தின் அடிப்டையில் ஆதார் எண்ணை அளித்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
    • மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் - சிறுமியர் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில், கூட்டுறவு சங்கம் சார்பில் 22 கடைகள், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 773 முழு நேரம் மற்றும் 326 பகுதி நேர கடைகள், மகளிர் குழுவினர் நடத்தும் 14 கடைகள், 77 நகரும் ரேஷன் கடைகள் என 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 769 முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகள்,5லட்சத்து 23 ஆயிரத்து 814 முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் என, 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 449 பேர் பயன்பெற்று வருகின்றனர்.

    பொது வினியோக திட்டத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள, அனைவரும்ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். குழந்தைகள் இருந்தாலும் பிறப்பு சான்றிதழை கொண்டு, பெயர் சேர்த்துவிடலாம். ஆனால் அடுத்த ஓராண்டுக்குள், ஆதார் பதிவு செய்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் - சிறுமியர் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது. விரைவில் ஆதார் இணைக்காதபட்சத்தில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்கள் ரத்தாகும் அபாயம் உருவாகியுள்ளது.

    இந்நிலையில்குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்து, அந்த விவரங்களை பொது வினியோக திட்டத்தில் இணைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஆதார் எண் இணைக்கப்படாத சிறுவர் -சிறுமியர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வெகுவிரைவாக ஆதார் விவரங்களை இணைக்காவிட்டால் பெயர்கள் ரத்தாகும் அபாயம் உருவாகியுள்ளது.

    இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் 15 ஆயிரம் சிறுவர் -சிறுமியர் ஆதார் இல்லாமல்ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ளனர். 7 வயது வரையில் பெற்றோரின் 'பயோமெட்ரிக்' அடிப்படையில் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறலாம். அதற்கு பிறகு குழந்தைகளின் 'பயோமெட்ரிக்' பதிவு செய்யப்படும்.இதுவரை விடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மையத்தில் சிறுவர் -சிறுமியருக்கு ஆதார் பதிவு செய்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றனர்.

    அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #BankAccount #AadhaarCard
    புதுடெல்லி:

    இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் எனப்படும் தனிப்பட்ட 12 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்பு சார்பில் வழங்கப்படும் ஆதார் அட்டை பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    “எனது ஆதார், எனது அடையாளம்” என்ற முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் தங்கள் நலத்திட்டங்களையும், உதவிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது. ஆதார் சேவையை மேலும் வலுப்படுத்த ஆதார் எண்ணை பான்கார்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, சமையல் கியாஸ் வினியோகம் உள்பட பல்வேறு சேவைகளுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது.

    பிறகு செல்போன் சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் ரகசிய தகவல்கள் கசிந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    ஆதார் ரகசிய தகவல்கள் அம்பலமாவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது.


    வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவை இல்லை என்று கூறப்பட்டது. அதுபோல சிம் கார்டுகள் வாங்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் கோர்ட்டு அறிவித்தது. ஆதாரை மற்ற சேவைகளுக்கு கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதையடுத்து ஆதார் ஆணையம் சில பரிந்துரைகளை கொண்டு வந்தது. அந்த பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. சட்ட அமைச்சகம் அதை பரிசீலித்து, “அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று திருத்தம் செய்தது.

    தற்போது இந்த பரிந்துரை மத்திய அமைச்சரவையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

    அந்த சட்ட திருத்தத்தில், ஆதார் கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். மேலும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுக்கும். #BankAccount #AadhaarCard
    ரே‌ஷன் கார்டில் ஆதார் விவரங்களை பதிவு செய்யாதவர்கள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். #Aadhaar #Rationcard
    சென்னை:

    போலி ரே‌ஷன் கார்டுகளை தடுப்பதற்காக ரே‌ஷன் கார்டுகளில் ஆதார் கார்டு எண் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

    2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் ரே‌ஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இதில் உள்ள விவரங்கள் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    ஆதார் அட்டையில் தனி நபரின் விழி, விரல் ரேகை ஆகியவை பதிவாகி உள்ளன. எனவே ரே‌ஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கப்பட்டதன் மூலம் போலி ரே‌ஷன் கார்டுகள் தடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் முன்பு 2.01 கோடி ரே‌ஷன் கார்டுகள் இருந்தன. அதில் 6 கோடியே 77 லட்சம் உறுப்பினர்கள் விபரம் இடம் பெற்றிருந்தன. தற்போது 1 கோடியே 96 லட்சம் ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. இதில் 6 கோடியே 48 லட்சம் உறுப்பினர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    ஆதார் கார்டு இருந்தும் பலர் ரே‌ஷன் கார்டுகளுடன் அதை இணைக்கவில்லை. ஒரு ரே‌ஷன் கார்டில் 6 உறுப்பினர்கள் இருந்தால் அதில் 3 அல்லது 4 பேர் மட்டுமே ஆதார் எண் பதிவு செய்துள்ளன.

    ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண்களை இணைத்தவர்கள் பெயர்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. விரைவில் விரல் ரேகை பதிவு செய்து ரே‌ஷன் பொருட்களை வழங்கும் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    எனவே ரே‌ஷன் கார்டில் குடும்பத்தில் உள்ள அனைவருடைய பெயர்களும் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே ரே‌ஷன் கார்டில் ஆதார் விவரங்களை பதிவு செய்யாதவர்கள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ரே‌ஷன் கடைகளில் ஒட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Aadhaar #Rationcard
    ×