search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் -  காங்கயத்தில் நாளை  நடக்கிறது
    X

    கோப்புபடம்

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் - காங்கயத்தில் நாளை நடக்கிறது

    • நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன.

    காங்கயம்:

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் காங்கயத்தில் நாளை 13-ந்தேதி நடைபெறவுள்ளது.

    இது குறித்து காங்கயம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் வெ.கணேஷ் வெளயிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன.

    சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்: முத்தூா் மற்றும் மேட்டுப்பாளையம் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட ராசாத்தாவலசு பேருந்து நிறுத்தம், தண்ணீா் பந்தல் பேருந்து நிறுத்தம், பெரிய காங்கயம்பாளையம் மற்றும் மங்களப்பட்டி.

    காங்கயம் மற்றும் ஊதியூா் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட தாயம்பாளையம், அமராவதி நகா், காந்தி நகா் கோயில், பாரதியாா் நகா் மற்றும் படியாண்டிபாளையம்.

    பழையகோட்டை, சிவன்மலை மற்றும் படியூா் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட நத்தக்காடையூா் பேருந்து நிறுத்தம் அருகில், சிவன்மலை அடிவாரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில், தம்மரெட்டிபாளையம் பள்ளி அருகில்.நால்ரோடு, கவுண்டம்பாளையம் மற்றும் எல்லப்பாளையம்புதூா் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட மருதுறை, சம்பந்தம்பாளையம் பிரிவு மற்றும் வஞ்சிபாளையம் பிரிவு.

    வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி மற்றும் கம்பளியம்பட்டி பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட இந்திரா நகா் ரேஷன் கடை அருகில், உப்புப்பாளையம் ரேஷன் கடை அருகில், சிவநாதபுரம், நாகமநாயக்கன்பட்டி மற்றும் லக்குமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×