search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகத் திருவிழா"

    • தருமபுரி மாவட்டத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை முதல் வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைக்கிறார்.
    • புத்தக கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

     தருமபுரி

    தருமபுரி வள்ளலார் திடலில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் தருமபுரி புத்தகத் திருவிழா 2023- னை வருகின்ற நாளை காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தொடங்கி வைத்து,கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்கள்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை முதல் வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது. தருமபுரி புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்ட இலட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இப்புத்தக திருவிழாவில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை புத்தகக் கடைகள் திறந்திருக்கும். நாள்தோறும் மாலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர்கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது.

    நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்தும் கலந்துரையாடல்களும், மாணவ. மாணவியர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்ககூடிய வகையில் நடைபெற உள்ள இம்மாபெரும் புத்தகத் திருவிழாவினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்.

    மேலும், இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், , பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • புத்தகத் திருவிழா மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது
    • பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழமை வாய்ந்த புத்தகங்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன.

    ஊட்டி,

    ஊட்டியில் முதல் முறையாக நடைபெற்ற புத்தகத் திருவிழா பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழமை வாய்ந்த புத்தகங்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற நிகழ்சியில், சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புத்தக திருவிழாவிற்க்கு சிறப்பான பங்களிப்பு வழங்கியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் அதிக நன்கொடை வழங்கிய ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    • புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தே தொடங்கியது.
    • மாணவிகள், சுற்றுலா பயணிகள் புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் "முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தேதி ஆ.ராசா எம்.பி தொடங்கி வைத்தார்.

    இன்று வரை நடைபெற்று வரும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதலாவது புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும் இந்த புத்தக திருவிழாவில் சிறப்பு அம்சங்களாக மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்ப டுத்தப்பட்டதை உள்ளுர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

    இந்நிலையில் இப்புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளின் கோரிக்கை களை ஏற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழா கண்காட்சி அரங்குகள் மட்டும் வருகிற 19-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    • மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வை யிட்டு, விருப்பமுள்ள புத்தகத்தினை தேர்வு செய்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா-2023 கண்காட்சியை ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    நாள்தோறும் பல் வேறு தலைப்புகளில் பேச்சாளர்களை கொண்டு சிறப்புரைகள், பட்டிமன்றங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை முன்னிட்டு ஸ்ரீமதி வரலாற்று நாவல் ஆசிரியர் வரலாற்று புதினங்கள் வற்றாத புதையல்கள் என்ற தலைப்பில் சிறப்புரையும், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் நிம்மதி நிறைந்தது கிராம வாழ்க்கையா? நகர வாழ்க்கையா? என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மணிஹட்டி சிவாவின் படுகா நடனம் ஆகிய நிகழ்சிகளும் நடைபெற்றது.

    இதில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வை யிட்டு, விருப்பமுள்ள புத்தகத்தினை தேர்வு செய்தனர்.

    இதயைடுத்து இன்று நாஞ்சில்நாடன் சாகித்திய அகாடாமி விருது பெற்ற எழுத்தாளர் 'பூனையும் பாற்கடலும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். பின்னர் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் 'காவல் பணியில் கடந்து வந்த தூரம்' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்க உள்ளார். இதயைடுத்து ஊட்டி அரசு தொழில்நுட்பக்கல்லூரி மாணவ, மாணவிகள் வழங்கும் கலை நிகழ்சிகளும் நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் 120 அரங்குகளுடன் 2-வது புத்தகத் திருவிழா நடக்கிறது.
    • வருகிற 27-ந் தேதி முதல் 11 நாட்கள் நடக்கிறது.

    சிவகங்கை

    சிவகங்கை நகரில் நடைபெற உள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத்திருவிழா தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 11 நாட்கள் புத்தக்கத்திருவிழா நடைபெற உள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இதில் கலந்து கொள்வதன் மூலம் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாகவும், வாசிப்புத்திறனை ஊக்குப்படுத்துவதற்கென அடிப்படையாகவும் இருக்கும்.

    மாணவ, மாணவிகள் சேமிப்பின் மூலம் தாங்கள் விரும்புகின்ற சிலவகையான புத்தகங்களை ஒரே இடத்தில் பெறுவதற்கும் உதவியாக இந்த புத்தகத் திருவிழா அமையும். மேலும், இதில் நடைபெறும் பல்வேறு போட்டிகளின் மூலம் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கும் விரும்பும் புத்தகமே பரிசாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு கல்லூ ரிகளில் இருந்து எளிதில் வந்து செல்வதற்கென போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்ட உணவு அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது. நாள்தோறும் பல்வேறு வகையான திறன்வளர்ப்புப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

    இந்த புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் 110 அரங்குகள் புத்தக விற்பனைக்கும், 10 அரங்குகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையிலும் அமைக் கப்படுகிறது.

    பண்டையகால தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள், கோட்டைகள், அரண்மனை மாதிரிகள் இடம்பெற்று சிவகங்கையில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவிற்கு சிறப்பு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத்திருவிழா நாளை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கே.ஜி.மஹாலில் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத்திருவிழா நாளை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கே.ஜி.மஹாலில் நடைபெறுகிறது.

    இது குறித்து விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெய காந்தன் கூறியதாவது:

    இளைய தலைமுறை மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா நாளை தொடங்கி 5 நாட்கள் கே.ஜி. மஹாலில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கிறார்கள். கண்காட்சியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்படுகிறது. அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    தினமும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாளை மாலை திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், 17-ந் தேதி திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், 18-ந் தேதி கவாலியர் மதிவாணன், 19-ந் தேதி திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ.மல்லூரி, 20-ந் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் திரைப்பட நடிகர் தாமு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மாண்ட பொது அறிவு திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயகாந்தன், வாணி தருமராசு, லோகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • விருதுநகரில் புத்தகத் திருவிழாவிற்கு நன்கொடை வழங்க வங்கி கணக்கு தொடக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 11 நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த புத்தகத் திருவிழாவை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கக் கூடிய வகையிலும், அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நன்கொடை அளிப்பதற்கு ஏதுவாக புத்தகக் கண்காட்சிக்கென்று கீழ்காணும் விவரப்படி தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கு பவர்கள் கலெக்டரிடம் நேரிலோ அல்லது வங்கி வரைவோலையாகவும் மற்றும் காசோலையாகவும் அளிக்கலாம்.

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கிக்கணக்கின் பெயர்: District Collector (Book Fair) வங்கிக்கணக்குஎண் - 174801000010896 MICR CODE : 626020304 IFSC CODE : IOBA0001748.

    மேலும் விவரங்களுக்கு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர். செல்போன் எண்.70108 02058, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், செல்போன் எண். 75502 46924 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர்:முதல் முறையாக புத்தக கண்காட்சி நடக்கிறது.
    • புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் ன்று உத்தரவிட்டார்.

    அதனடிப்படையில் விருதுநகரில் முதல்முறை யாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர்- மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை மாபெரும் புத்தக திருவிழா நடைபெற இருக்கிறது.

    இதில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்கு தனித்தனியாக 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சி படுத்தப்படுகின்றன. இந்த கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.

    இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் இடம் பெறுகின்றன.

    பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்த புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் போல வேறு எங்கும் புத்தகத் திருவிழா நடத்தப்படுவதில்லை என்று ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    • கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சிகள் கவின் கலைக்குழுவினரின் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

    இதில் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'இந்தியா எனும் மழைக்காடு' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    வாசிப்பு பழக்கத்துக்கு தமிழகத்தில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவை போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடத்தப்படுவதில்லை. உலகம் வசிப்பதற்கு மட்டுமல்ல வாசிக்கவும் உள்ளது. புத்தகம் வைக்க இடம் இல்லாத வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீடு.

    இந்தியா பன்முகத் தன்மை நாடா என்பதை அறிய வேண்டியது நிகழ்கால தேவையாக உள்ளது. இதற்கு விடைகாணும் விதமாக சங்க இலக்கியங்களில் கூறப்படும மானுடவியல் வாழ்க்கை உள்ளது.

    சிந்துசமவெளி நாகரிக காலம் முடிகின்ற இடம் சங்க கால இலக்கியத்தின் தொடர்ச்சியாக உள்ளது. இந்தியா சங்க இலக்கியத்தில் கூறப்படும் மழைக்காடுகளை போன்றது. பல்வேறு அடுக்குகளைக் கொண்டு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டை உணர்த்துகிறது என்றார். 

    • புத்தக கண்காட்சிகளுக்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழின் பெருமையை, சிறப்பை உணருவதற்கு புத்தகத் திருவிழாக்கள்தான் அடித்தளமாக அமைகின்றன

    ஈரோடு:

    மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் ஆண்டு தோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இந்த புத்தக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு புத்தக திருவிழாவை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 5 முதல் 16 -ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி புத்தக திருவிழா இன்று தொடங்கியது.

    இன்று மாலை துவக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து முதல் அமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொலி மூலம் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த ஊரில் - அறிவுத் திருவிழாவான புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தன்னைப் போன்ற எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, அறிஞர்களை, தமிழ்ப்புலவர்களை, படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்தத் தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாக தொய்வில்லாமல் நடத்தி வருகிறார் ஸ்டாலின் குணசேகரன். அவரது அயராத தமிழ் ஆர்வத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். இதுபோன்ற ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஸ்டாலின் குணசேகரன்கள் உருவாக வேண்டும்!

    புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வதும், புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதும் மகிழ்ச்சிக்குரியது. ஏனென்றால் இவை அறிவுத்திருவிழா! தமிழ்த் திருவிழா! தமிழாட்சி - தமிழர்களின் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது தமிழ்நாட்டில். இத்தகைய தமிழாட்சி நடக்கும் நாட்டில் தமிழ்த் திருவிழாக்களும் அதிகம் நடந்தாக வேண்டும்.

    சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றேன்.

    சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் தான் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்த முதலில் ஜனவரி மாதம் தேதி குறிக்கப்பட்டது. கொரோனா பரவிய காரணத்தால் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அரங்கம் அமைத்து விட்ட காரணத்தால் பதிப்பாளர்களுக்கு இழப்பும் ஏற்பட்டது. இதனை முன் வைத்து பதிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். உடனடியாக 50 லட்சம் ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!

    வழக்கமாக, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் 75 லட்சத்துடன் இந்த ஐம்பது லட்சத்தையும் சேர்த்து ஒன்றே கால் கோடி ரூபாயை வழங்கினோம். இதைத் தொடர்ந்து, பதிப்பாளர்களின் நெடுநாள் கோரிக்கையான நிரந்த புத்தகப் பூங்கா அமைப்பதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கி இருக்கிறது.

    தமிழின் பெருமையை, சிறப்பை தமிழர்கள் அனைவரும் உணருவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள்தான் அடித்தளமாக அமைகின்றன. பட்டங்கள் வாங்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவின் கூர்மைக்காக, நம்முடைய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக, நாம் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்வதற்காக, நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காக, அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.

    அதனால்தான் என்னைச் சந்திக்க வருபவர்கள் மாலைகள், சால்வைகள், போர்வைகள் அணிவிக்க வேண்டாம், புத்தகங்களைத் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ்நாட்டில் மாறி இருக்கிறது. இந்த இயக்கம் விரிவடைய வேண்டும், வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அறியாமை எனும் இருட்டில் தத்தளிப்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர்தான் புத்தகங்கள்! பொய்யும் புரட்டும் கலந்த பழமைவாதம் எனும் கடலில் சிக்கித் தவிக்காமல், நாம் கரை சேர உதவுகிற பகுத்தறிவுக் கப்பல்கள்தான் புத்தகங்கள்!

    'வீட்டுக்கு ஒரு நூலகம் அமைய வேண்டும்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் விரும்பினார்கள். அப்படி அனைவரும் தங்கள் வீட்டில் சிறு நூலகமாகவாவது அமைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்! வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! சிந்தனையில் தெளிவு ஏற்படும் புத்தகங்களை வாசிக்கத் தூண்டுங்கள்!

    புத்தகத் திருவிழா துவக்க விழாவில் பங்கேற்றவர்கள்

    புத்தகத் திருவிழா துவக்க விழாவில் பங்கேற்றவர்கள்

    இளைஞர்களே… நிறைய படியுங்கள்! ஏன்… எதற்கு… எப்படி? என்று கேளுங்கள்! ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால், அதனை உடனே முழுமையாக நம்பிவிடாதீர்கள்! அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்! எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்! இட்டுக்கட்டிக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுபவர்கள் – அந்தக் கலையில் தேர்ந்தவர்கள்! ஆண்டாண்டு காலமாக கட்டுக்கதைகளை நம்ப வைக்கும் திறனைப் பெற்றவர்கள்!

    ஆனால், தமிழ்ச்சமூகம் பகுத்தறிவுச் சமூகம்! பொய்களையும் – கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம்! தமிழகம் அறிவுப் புரட்சி மாநிலமாக - பகுத்தறிவுப் புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண். புத்தகங்களே புத்துணர்வு அமுதம். எல்லாவற்றுக்கும் ஈரோடு வழிகாட்டியது போல புத்தகத் திருவிழாவுக்கும் வழிகாட்டுகிறது ஈரோடு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நெகிழி பயன்பாட்டைத் தவிா்ப்பது பற்றியும், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் கண்காட்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
    • புத்தகத் திருவிழாவில் பல்வேறு சிறந்த பதிப்பதகத்தாரின் தலைசிறந்த எழுத்தாளா்கள் எழுதிய நூல்கள் இடம்பெறவுள்ளன.

    நாமக்கல்:

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் புத்தகத் திருவிழாவை நடத்துவது தொடா்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது-

    விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவா்களைப் போற்றும் வகையில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திர போராட்ட வீரா்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். நெகிழி பயன்பாட்டைத் தவிா்ப்பது பற்றியும், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் கண்காட்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

    கல்வி வளா்ச்சியில் புத்தகங்களின் பங்கு மிகு முக்கியமானதாகும். புத்தகங்கள்தான் சாதாரண குடிசை வீட்டில் பிறந்தவா்களை கூட உலகறிந்த அறிஞா்களாகவும், தலைவா்களாகவும், சிந்தனையாளா்களாகவும், உயா் அதிகாரிகள், ஆட்சியா்களாகவும் உருவாக்கி உள்ளன. தினந்தோறும் புத்தகங்களை வாசிப்பது வாழ்வின் முன்னேற்றத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன.

    அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் அமுத பெருவிழாவுடன் சோ்ந்து புத்தகத் திருவிழாவும் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் பல்வேறு சிறந்த பதிப்பதகத்தாரின் தலைசிறந்த எழுத்தாளா்கள் எழுதிய நூல்கள் இடம்பெறவுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்கியது
    • அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்

    அரியலூர் :

    அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் சார்பில் 6-ம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்கியது.

    விழாவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

    நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியதாவது:

    புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும். சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும். அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏன் உலகத் தலைவர்கள் அனைவரும், புத்தகங்களை வாசித்ததன் மூலம் தான் உயர்வான இடத்தினை அடைந்தார்கள்.

    பல்வேறு அறிஞர்கள் எல்லாம், தனித்து சிந்தித்ததால் தான், வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதிய பாதை படைத்தனர். அதற்கு, புத்தக வாசிப்பு தான். எனவே அனைத்து தரப்பினரும் புத்தகங்கள் வாசிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பொதுத் தேர்வில் மாநிலத்தில், மாவட்டத்தில் முதல் மதிப்பெண் என்பதை சொல்லக்கூடாது. இதனை பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். பள்ளி வளர்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு முக்கியமாக உள்ளது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் கீழ் ஊராட்சி தலைவருக்கு உரிய பயிற்சிகளும் வழங்கப்படும். தற்காலிகமாக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 13,300 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு காலதாமதமாகும் என்பதால் தற்காலிக அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களை வரும் 1-ந்தேதி முதல் நிரப்புவதற்கான பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×