search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தகத் திருவிழா கண்காட்சி அரங்கினை பள்ளி மாணவ, மாணவிகள், பார்வையிட்டனர்
    X

    புத்தகத் திருவிழா கண்காட்சி அரங்கினை பள்ளி மாணவ, மாணவிகள், பார்வையிட்டனர்

    • மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வை யிட்டு, விருப்பமுள்ள புத்தகத்தினை தேர்வு செய்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா-2023 கண்காட்சியை ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    நாள்தோறும் பல் வேறு தலைப்புகளில் பேச்சாளர்களை கொண்டு சிறப்புரைகள், பட்டிமன்றங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை முன்னிட்டு ஸ்ரீமதி வரலாற்று நாவல் ஆசிரியர் வரலாற்று புதினங்கள் வற்றாத புதையல்கள் என்ற தலைப்பில் சிறப்புரையும், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் நிம்மதி நிறைந்தது கிராம வாழ்க்கையா? நகர வாழ்க்கையா? என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மணிஹட்டி சிவாவின் படுகா நடனம் ஆகிய நிகழ்சிகளும் நடைபெற்றது.

    இதில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வை யிட்டு, விருப்பமுள்ள புத்தகத்தினை தேர்வு செய்தனர்.

    இதயைடுத்து இன்று நாஞ்சில்நாடன் சாகித்திய அகாடாமி விருது பெற்ற எழுத்தாளர் 'பூனையும் பாற்கடலும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். பின்னர் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் 'காவல் பணியில் கடந்து வந்த தூரம்' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்க உள்ளார். இதயைடுத்து ஊட்டி அரசு தொழில்நுட்பக்கல்லூரி மாணவ, மாணவிகள் வழங்கும் கலை நிகழ்சிகளும் நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×