search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    120 அரங்குகளுடன் 2-வது புத்தகத் திருவிழா
    X

    புத்தகத்திருவிழா தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    120 அரங்குகளுடன் 2-வது புத்தகத் திருவிழா

    • சிவகங்கையில் 120 அரங்குகளுடன் 2-வது புத்தகத் திருவிழா நடக்கிறது.
    • வருகிற 27-ந் தேதி முதல் 11 நாட்கள் நடக்கிறது.

    சிவகங்கை

    சிவகங்கை நகரில் நடைபெற உள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத்திருவிழா தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 11 நாட்கள் புத்தக்கத்திருவிழா நடைபெற உள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இதில் கலந்து கொள்வதன் மூலம் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாகவும், வாசிப்புத்திறனை ஊக்குப்படுத்துவதற்கென அடிப்படையாகவும் இருக்கும்.

    மாணவ, மாணவிகள் சேமிப்பின் மூலம் தாங்கள் விரும்புகின்ற சிலவகையான புத்தகங்களை ஒரே இடத்தில் பெறுவதற்கும் உதவியாக இந்த புத்தகத் திருவிழா அமையும். மேலும், இதில் நடைபெறும் பல்வேறு போட்டிகளின் மூலம் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கும் விரும்பும் புத்தகமே பரிசாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு கல்லூ ரிகளில் இருந்து எளிதில் வந்து செல்வதற்கென போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்ட உணவு அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது. நாள்தோறும் பல்வேறு வகையான திறன்வளர்ப்புப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

    இந்த புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் 110 அரங்குகள் புத்தக விற்பனைக்கும், 10 அரங்குகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையிலும் அமைக் கப்படுகிறது.

    பண்டையகால தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள், கோட்டைகள், அரண்மனை மாதிரிகள் இடம்பெற்று சிவகங்கையில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவிற்கு சிறப்பு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×