search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் புத்தகத் திருவிழா 19-ந்தேதி வரை நீட்டிப்பு-கலெக்டர் அம்ரித் தகவல்
    X

    நீலகிரியில் புத்தகத் திருவிழா 19-ந்தேதி வரை நீட்டிப்பு-கலெக்டர் அம்ரித் தகவல்

    • புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தே தொடங்கியது.
    • மாணவிகள், சுற்றுலா பயணிகள் புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் "முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தேதி ஆ.ராசா எம்.பி தொடங்கி வைத்தார்.

    இன்று வரை நடைபெற்று வரும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதலாவது புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும் இந்த புத்தக திருவிழாவில் சிறப்பு அம்சங்களாக மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்ப டுத்தப்பட்டதை உள்ளுர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

    இந்நிலையில் இப்புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளின் கோரிக்கை களை ஏற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழா கண்காட்சி அரங்குகள் மட்டும் வருகிற 19-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×