search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggression"

    • சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது.
    • ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும்.

    கடலூா:

    புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதால் சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் ஒரே நாளில் 2 விபத்துகளில்2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது               இது சம்பந்தமாக நெடு ஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்ப டையில் ஆக்கிர மிப்புகள் தான் காரணம் என்று உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர்.

    எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து அனைத்து கடைக்கா ரர்களும் அவரவர்கள் கடைக்கு முன்பு வைத்திருந்த ஆக்கிரமி ப்புகளை தானாக முன்வந்து அகற்றினர். இதனால் சாலை அகலமாக காட்சி அளிக்கிறது.

    • ஆக்கிரமிப்புகளினால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் கடை வீதிகளில் சாலையின் இருமருங்கிலும் ஆக்கிரமிப்புகள் அதிக ரித்து வருவதாகமாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    இந்த ஆக்கிர மிப்புகளால் கடைவீதி பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது.

    பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக அதனை அகற்றி பொதுமக்கள் இடையூறின்றி வந்து செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்–பட்டதை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் அறிவிப்பு செய்திருந்தார்.

    ஆனாலும் கடைவீதிகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.

    அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு ஆங்கிருப்புகளை அகற்றினர்.

    ஆக்கிரமிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் நகராட்சி அலுவலக வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்புகளை முன்னிட்டு கடைவீதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்–பட்டிருந்தது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றியதற்கு பிறகு திருவாரூர் கடைவீதி விசாலமான அகலத்தில் காணப்பட்டது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப ட்டதால் பொது மக்கள் இடையூறின்றி பொருட்களை வாங்கி வர செல்ல முடிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டது.

    • சோழவந்தான் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வாடிப்பட்டி உட்கோட்ட நெடுஞ்சாலைதுறை பராமரிப்பில் உள்ள மேலக்கால் -பேரணை சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் 120 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதையெடுத்து ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலக்கால்-பேரணை சாலையை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலையோர பகுதியில் குடியிருந்து வருகிறோம். மேலும் இருக்கும் இடத்திற்கு பட்டா, , சொத்து வரி, மின் கட்டணம் கட்டி வருகிறோம் இப்போது காலி செய்ய சொன்னால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    • தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார்.
    • இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெரிய குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ரத்தினபிள்ளை. இவரது மகன் சேதுராமன். இந்நிலையில் ரத்தின பிள்ளைக்கு அதே பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துரைராஜ்கும் அவரது அண்ணன் தம்பிகளுக்கும் கொடுத்தார். அந்த நிலத்தில் துரைராசும் அவரது அண்ணன் தம்பியும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார். இதனால் துரைராஜின் அண்ணன் தம்பி அந்த இடத்தை விட்டு சென்றனர். ஆனால் பெட்டிகடை நடத்தி வரும் துரைராஜ் மட்டும் காலி செய்ய மறுப்பு தெரிவித்து கோர்ட்டில் மனு அளித்தார்.

    ஆனால் கோர்ட்டில் நிலம் உரிமையாளருக்கு சொந்தம் என்று தீர்ப்பானது. இதனால் இன்று கோர்ட் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் வருவாய்த்துறையினர் போலீசாரின் முன்னிலையில் துரைராஜை அந்த இடத்தில் உள்ள வீட்டில் இருந்து அப்புறப்படுத்தினர். உடனே துரைராஜ் நான் காலி செய்ய மாட்டேன் என்று கூறி தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது. 

    • பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அண்ணா பஸ்நிலையத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல கோடிக்கணக்கில் செலவு செய்து பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பஸ் நிலையம் முழு வதும் 150 -க்கும் மேற்பட்ட தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவை பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது.தள்ளு வண்டியில் போட்டி போட்டுக் கொண்டு பஸ் நிலையம் முழுவதையும் தள்ளுவண்டி வியாபாரிகள் தங்கள் வசம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள், திட்டக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறு குரு விவசாயிகள், வணிகர்கள் பல தரப்பினரும் திட்டக்குடி பஸ்நிலையம் உள்பகுதியில் செல்ல முடியாமல் அன்றாடம் தள்ளுவண்டிகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பலமுறை திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசார் மாலை நேரத்தில் 15 அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்கு வருகை தந்து விட்டு சென்று விடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. போலீசார் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தால் மட்டும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மாலை நேரங்க ளில் அரசு பள்ளி மாணவ, மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாண வர்கள் அதிக அளவில் பஸ் நிலையத்திற்கு வருகை தருவ தால் மாணவிகள், மாண வர்கள் நின்று பஸ் ஏற முடியாத சூழ்நிலை அன்றாட காட்சி பொருளாக உள்ளது. பஸ்நிலையத்தில் அன்றாடம் பயணிக்கும் பெண்களிடம் பையில் உள்ள பொருட்கள் திருடுவது அவர்கள் போலீசில் புகார் அளிப்பது தொடக்கதையாக உள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பஸ் நிலையத்தில் தினந்தோறும் குறைந்தது மாலை நேரத்தில் 3 மணி நேரம் போலீசார் பணியில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலைய த்தில் உள்ள தள்ளுவண்டி அகற்றி வேறு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.
    • அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ஜவுளிகுப்பம் கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் சங்கரா புரம் தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்து றை அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் நரசிம்மஜோதி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.

    அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு மகன் பச்சையப்பன் அதிகாரிகளை திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பெரியார் கொடுத்த புகாரின்பேரில் பச்சையப்பன் உள்ளிட்ட 14 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சார் ஆய்வாளர் சுஜாதா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் தனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
    • இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் எஸ்.ஆர்.சி. நகர் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காரில் வந்தவர் அவரை பார்த்து போ என சொன்னதாகவும், அதற்கு ரோட்டில் சென்றவர் தகாத வார்த்தையால் பேசியதாகவும், இதனால் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதற்குள் ரோட்டில் நடந்து சென்றவர் தரப்பில் இருந்து வந்த நபர்கள், காரில் வந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து காரில் வந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு திரண்டனர். மோதல் ஏற்படும் சூழ்நிலையில் அங்கு வந்த பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

    இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து கலைந்து போக சொன்னார்கள். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அந்தப் பகுதிக்கு நேரில் வந்தார் அப்போது அவரிடம் ஒரு தரப்பினர், எதிர்த் தரப்பினர்,சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களால் சமூகவிரோதச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகவும், தட்டி கேட்பவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதன் பின்னர் இரு தரப்பினரும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    • ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவியுடன் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேகம் 150 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. தருமபுர ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீனம், வேலாக்குறிச்சி ஆதீனம் மடாதிபதிகள் பங்கேற்றனர்.

    மயிலாடுதுறை காவிரி நதியின் கரையில் அமைந்த மிகவும் பழமையான நகரம். மயிலாடுதுறை சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

    துலா கட்ட விஸ்வநாதர், திருவழந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பெரிய கோயில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆகிய ஏழு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன.

    இவற்றில் துலா கட்டம் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது.

    தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவி உடன் புதிதாக கோயில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது.

    தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியர் தலைமையில் 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மகா பூர்ணாகுதி உடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    புனித நீர் அடங்கிய கரங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஏழுநிலை ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் கோபுர கலசங்கள் உள்ளிட்டவற்றிற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் பரிவார தெய்வங்களின் மூலவர் சிலைகளுக்கு மகா கும்பாபிபிஷேகம் செய்யப்பட்டது.

    தருமபுர ஆதீன மடாதிபதிஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரி யார் சுவாமிகள், வேளாகுறிச்சி ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீன மடா திபதி, மற்றும் திருப்பனந்தாள் ஆதீன கட்டளை தம்புரான் சுவாமிகள், ராஜகுமார் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் குண்டாமணி, கவுன்சிலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

    • பொதுப்பாதையை ஆக்கிரமித்ததாக கூறி ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு பா.ஜனதா பிரமுகருக்கு மதுரை துணைமேயர் நோட்டீசு அனுப்பினார்.
    • இவர் மீது மதுரை விளாங்குடியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் சிவாஜி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார்மனு அளித்தார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன். இவர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது மதுரை விளாங்குடியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் சிவாஜி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார்மனு அளித்தார்.

    அதில் ஜெய்ஹிந்துபுரத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து துணை மேயர் நாகராஜன் வீடு கட்டியிருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது அரசியல் ரீதியாக என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு என்று மறுத்துள்ள துணை மேயர் நாகராஜன், இது தொடர்பாக அவரது வக்கீல்கள் மூலம் பா.ஜ.க. பிரமுகர் சிவாஜிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது-

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் மாநகராட்சி 80-வது வார்டில் எனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளேன். கவுன்சில ராகவும், துணை மேயரா கவும் இருந்து வரும் என் மீது அரசியல் எதிரிகள் சிலரின் தூண்டுதல் காரணமாக தாங்கள் எனது பெயரையும் புகழையும் கெடுக்கும் நோக்கில் நான் அதிகார துஷ்பிரயோகம் செய்து பொதுபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறீர்கள்.

    இந்த குற்றச்சாட்டு காரணமாக தாங்க முடியாத மன வருத்தமும் அவமான மும் ஏற்பட்டுள்ளது. தாங்கள் செய்த இந்த செயல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 499, 500 மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளில் தண்டனைக்குரிய செயலா கும்.

    எனவே இந்த சட்ட விரோத செயலால் எனக்கு ஏற்பட்டுள்ள அசிங்கத்திற்கும் அவமா னத்திற்கும் இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். மேலும் நேரில் சந்தித்து நிபந்தனை யற்ற எழுத்துப்பூர்வமான மன்னிப்பையும் பெற வேண்டும். தவறும் பட்சத்தில் தங்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் தடுப்பு வேலிகளை அகற்றும் பணி நடைபெற்றது வருகிறது.
    • மண்பாண்ட தொழிலாளர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் உள்ளனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு பகுதியில் கோரையாறு கரையோரமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் நீர்நிலை ஆக்கிரமிப்பு சம்பந்தமான கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கடந்த மாதம் 31-ம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பெயரில் முதல்கட்டமாக திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் குடியிருப்புகளை தவிர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் தடுப்பு வேலிகளை அகற்றும் பணி ஜே.சி.பி. எந்திரம் கொண்டு நடைபெற்றது வருகிறது. இதில் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் உள்ளனர். தற்போது அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆலங்காடு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் பெற்றோருடன் பள்ளி எதிரே அமர்ந்து பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட னர்.

    பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசாாரிடம் மாணவிகள் எங்கள் இருப்பிடத்தை இடித்து மின் இணைப்பை துண்டித்தால் எங்கள் எதிர்காலம் என்னாவது என கண்ணீருடன் கேட்டனர்.

    எனவே, மாவட்ட நிர்வாகம் தங்கள் குழந்தை களின் எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தேர் ஓடும் வீதிகளில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபுறமும் பேவர்பிளாக் அமைக்கவேண்டும்.
    • தீயணைப்பு வாகனம் எளிதில் சென்று வர நகர் பகுதியிலிருந்து பிரதான நெடுஞ்சாலை வரை 40 அடி அகலம் கொண்ட சாலை அமைத்து தரவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு,

    ராஜசேகரன் (தே.மு.தி.க) சீர்காழி நகரில் சாலையோரம் உள்ள பல உணவகங்கள் கழிவுநீர் பாதையின் மேல் வைத்து கடை நடத்தப்படுகிறது. இங்கு சமைக்கப்படும் உணவின் சுகாதாரத்தினை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்திடவேண்டும்.

    காந்திமதி (தி.மு.க) எனது பகுதியில் உள்ள குளத்தினை தூர்வாரவேண்டும். 2-வது, 4-வது குறுக்கு தெருவில் மின்கம்பங்கள் அமைக்கவேண்டும். பொதுகழிப்பிடம் அமைக்கவேண்டும்.

    சூரியபிரபா (பா.ம.க): கழிப்பிட கட்டிடம் கட்டும் பணியை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்யவேண்டும். வாய்க்கால் தூர்வார வேண்டும்.

    ரம்யாதனராஜ் (தி.மு.க) சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தேர் ஓடும் வீதிகளில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபுறமும் பேவர்பிளாக் கல் அமைக்கவேண்டும்.

    ஜெயந்திபாபு, பிடாரி வடக்குவீதியில் வாணி விலாஸ் பள்ளியிலிருந்து கழுமலையம்மன் கோயில் வரை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் திறந்து கிடப்பதால் அதற்கு சிமென்ட் சிலாப் அமைத்து மூடவேண்டும். பாலமுருகன், ஈசானியதெருவில் கொசுதொல்லை அதிகமாக இருப்பதால் கொசுமருந்து அடிக்கவேண்டும்.கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணமூர்த்தி, தனது வார்டில் சாலைகளை சீரமை க்கவேண்டும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தவேண்டும்.

    வேல்முருகன், சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தீயணைப்பு வாகனம் எளிதில் சென்று வர நகர் பகுதியிலிருந்து பிரதான நெடுஞ்சாலை வரை 40அடி அகலம் கொண்ட சாலை அமைத்துதரவேண்டும். முழுமதிஇயமவரம்பன், பனமங்கலத்தல் உள்ள குளத்தை தூர்வார வேண்டும்.

    முபாரக், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே பாரத வங்கி அமைந்துள்ள தேர்வடக்குவீதி சாலையில் மழைகாலத்தில் குளம்போல் சாலையில் தண்ணீர் தேங்கி சுகாதாரசீர்கேடு ஏற்படுவதை தடுக்க சீரமைப்பு பணிகளை தொடங்கவேண்டும். நித்தியாதேவி, எனது வார்டில் சாலையில் மழைநீர் தேங்காதவாறு சாலை அமைத்துதரவேண்டும் என்றார்.

    பழனி அருகே எரமநாயக்கன்பட்டியில் உள்ள பட்டிகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விவசாயிகள் போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
    பழனி:

    பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்ட பகுதியில் பட்டிகுளம் உள்ளது. இக்குளம் சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், இக்குளத்தில் உள்ள நீரின் மூலம் எரமநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, பச்சள நாயக்கன்பட்டி, பொட்டம் பட்டி, ராசாபுரம்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இக்கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் இக்குளத்தில் உள்ள நீரின் அளவை பொறுத்ததே ஆகும்.

    குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு அடிப்படையாக விளங்கும் இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று பட்டிகுளம் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்குளத்தின் மேல் ஏறிநின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கூறியதாவது, பட்டிகுளம் 6 கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்திற்கு அடிப்படையானது. இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்குநாள் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×