search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nnegotiation"

    • ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் தடுப்பு வேலிகளை அகற்றும் பணி நடைபெற்றது வருகிறது.
    • மண்பாண்ட தொழிலாளர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் உள்ளனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு பகுதியில் கோரையாறு கரையோரமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் நீர்நிலை ஆக்கிரமிப்பு சம்பந்தமான கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கடந்த மாதம் 31-ம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பெயரில் முதல்கட்டமாக திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் குடியிருப்புகளை தவிர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் தடுப்பு வேலிகளை அகற்றும் பணி ஜே.சி.பி. எந்திரம் கொண்டு நடைபெற்றது வருகிறது. இதில் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் உள்ளனர். தற்போது அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆலங்காடு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் பெற்றோருடன் பள்ளி எதிரே அமர்ந்து பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட னர்.

    பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசாாரிடம் மாணவிகள் எங்கள் இருப்பிடத்தை இடித்து மின் இணைப்பை துண்டித்தால் எங்கள் எதிர்காலம் என்னாவது என கண்ணீருடன் கேட்டனர்.

    எனவே, மாவட்ட நிர்வாகம் தங்கள் குழந்தை களின் எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×