search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி அருகே பட்டிகுள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விவசாயிகள் போராட்டம்
    X

    பழனி அருகே பட்டிகுள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விவசாயிகள் போராட்டம்

    பழனி அருகே எரமநாயக்கன்பட்டியில் உள்ள பட்டிகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விவசாயிகள் போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
    பழனி:

    பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்ட பகுதியில் பட்டிகுளம் உள்ளது. இக்குளம் சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், இக்குளத்தில் உள்ள நீரின் மூலம் எரமநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, பச்சள நாயக்கன்பட்டி, பொட்டம் பட்டி, ராசாபுரம்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இக்கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் இக்குளத்தில் உள்ள நீரின் அளவை பொறுத்ததே ஆகும்.

    குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு அடிப்படையாக விளங்கும் இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று பட்டிகுளம் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்குளத்தின் மேல் ஏறிநின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கூறியதாவது, பட்டிகுளம் 6 கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்திற்கு அடிப்படையானது. இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்குநாள் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×