search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abhishekam"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ளது.
    • விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதே போல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர், கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வ ரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் ,பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் ,பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநா யகர், அய்யம்பாளையம் விநா யகர், பிலிக்கல்பா ளையம், கொந்தளம் வேலூர் வட கரையா்தூர், ஜேடர்பாளை யம்,சோழசிரா மணி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • ஆடி மாதம் அனுசம் நட்சத்திரத்தன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கண்ணகிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினிக் சீர்கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனுசம் நட்சத்திரம் அன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 51 ஆம் ஆண்டு கண்ணகி வீடு பேறு நாள் வழிபாடும் சிலம்புபொழிவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்பு கண்ணகி பெருமாட்டிக்கு பால், இளநீர், தயிர், சந்தனம், மஞ்சல், உள்ளிட்ட பலவிதமான திரவியப்பொடிகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரமும், மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

    பத்தினிக் கோட்டம் அறங்காவலர் ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நகரத்தார்கள், பொதுமக்கள், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • அர்த்த ஜாம தரிசனம் மனிதன் வாழ்வில் தெய்வீக பலன்களை தருவதாகும்.
    • இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்

    ஒரு காலம் என்பது, நடராஜருக்காக ஸ்படிகலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து, பிறகு நடராஜர், சிவகாமசுந்தரிக்கு, தீபாராதனை செய்வது வரையிலும் ஆகும். இந்த முழு அமைப்பும் சேர்ந்துதான் ஒரு கால பூஜை எனப்படும். இவை எல்லாம் ஒரு கால பூஜையில் அடங்கும்.

    ஆறு காலங்கள்

    1. காலை சந்தி (முதல் கால பூஜை, காலை 7 மணி)

    2. இரண்டாங்காலம் (காலை 10 மணி)

    3. உச்சி காலம் (மூன்றாம் காலை பகல் 12 மணி)

    4. சாயங்காலம் (சாயரட்சை மாலை 6 மணி)

    5. 8 மணி காலம் (2-ம் காலம் இரவு 8மணி)

    6. அர்த்த ஜாமம் (6-ம் காலம் (இரவு 10 மணி)

    பரமானந்த கூபம்

    நடராஜர் அருள்பாலிக்கும் சிற்றம்பலத்துக்கும் கிழக்கு பாகத்தில் உள்ள பரமானந்த கூபம் என்னும் தீர்த்தமே (கிணறு) எப்போதும் அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஐப்பசி மாத வளர்பிறை நவமி திதியில் கங்கையே இத்தீர்த்தத்திற்க வருகின்றாள். இத்திருக்கோவிலினுள் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தம் பயன்படுத்தப்படுகிறது.

    முதற்காலம் (கால சந்தி)

    காலை 7 மணிக்கு பூஜாக்காரரால் கோபூஜை, கும்பம் வைத்து ஹோமம் செய்து, பஞ்சகவ்யம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து 9 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

    இரண்டாங்காலம் (ரத்தின சபாபதி தரிசனம்)

    காலை 10 மணிக்கு ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் கனக சபையில் செய்து, இச்சமயத்தில் ரத்தின சபாபதிக்கும் பால், தேன், சந்தன அபிஷேகம் செய்து, கற்பூர தீபாராதனைநடைபெறும். மாணிக்க நடராஜர் பின்புறம் தீபாராதனை காண்பிக்கும்போது ஜோதியாயும் (தங்கம் போல் ஜொலிக்கும்) தெரியும். இது மிக முக்கியமான தரிசனமாகும்.

    வாழ்வில் நல்ல பல மாற்றங்களை தந்தருளும். இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்தான் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே. வேறு எந்த கால புஜையிலும் இத்தரிசனம் காண முடியாது. இத்தரிசனம் காலை 10 மணி முதல் 10 மணிக்குள் காணப்பட வேண்டும்.

    உச்சிக்காலம் (மூன்றாம் காலம்)

    ரத்தினசபாபதி தரிசன தீபாராதனை முடிந்ததும், மீண்டும் அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 1 மணிக்குத் தீபாராதனை உடனே நடைசாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

    நான்காம் காலம் (சாயரட்சை)

    மாலை நடை திறந்தவுடன் அபிஷேகம் செய்து 6 மணிக்கு சோடசோபசார தீபாராதனை நடக்கும்.

    ஐந்தாம் காலம் (ரகசிய பூஜை காலம்)

    இரவு 7 மணிக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெறும். இந்த நேரத்தில்தான் அருவமான ரகசியத்திற்கு பூஜை நடைபெறும். கதவுகள் சாத்தப்பட்ட பூஜை செய்பவர். செய்விக்கின்றவர் ஆகிய இருவர் மட்டும் இருந்து பூஜை செய்து நைவேத்தியம் செய்து 8 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

    அர்த்த ஜாமம்

    இரவு 9 மணிக்கு அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 10 மணிக்கு தீபாராதனை செய்து, நடராஜரின் பாதுகையை வெள்ளி, தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து பள்ளியறையில் கொண்டு போய் வைத்து அங்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெற்று, பின்னர் பிரம சண்டிகேஸ்வரர்க்கும், பைவரருக்கும், அர்த்த சாம அழகருக்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெறும். இவையனைத்தும் அர்த்த ஜாமபூஜைகள் ஆகும்.

    பிரபஞ்சங்களில் உள்ள சிவகலைகள் அனைத்தும் இங்கு இருந்துதான் காலை 6 மணிக்கு புறப்பட்டு அங்கு நிகழ்த்தப்படுகின்ற பூஜைகளை ஏற்று இரவு அர்த்த ஜாம பூஜையில் மீண்டும் தில்லை திருக்கோவிலினுள் ஒடுங்குகிறது. அதாவது எல்லா கோவில் தெய்வங்களும் தில்லையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அர்த்த ஜாம பூஜையின்போது தில்லையிலேயே மீண்டும் ஒன்று சேர்ந்து ஐக்கியமாகிறது.

    எனவே அர்த்த ஜாம பூஜை தரிசனம் என்பது அன்று முழுநாள் சிவபூஜை செய்த சிவபுண்ணிய பலனையும், எல்லா கோவில்களின் தெய்வங்களின் அருளாசியையும் பெற்றுத் தருகிறது.

    அர்த்த ஜாம தரிசனம் மனிதனின் வாழ்வில் உன்னத தெய்வீக பலன்களை தருவதில் நிகரற்ற ஒன்றாகும். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் துதித்து வாழ்நாளில் ஒரே ஒருமுறை தில்லை திருக்கோவிலின் அர்த்தஜாம பூஜையை கண்டு தரிசிக்க வேண்டும். அர்த்தஜாம தரிசன பலன்கள் எண்ணிலடங்காதவை. வாழ்வில் எக்குறையும் நேராமல், இல்லாமல் வாழ விரும்புவோர் கண்டிப்பாக அர்த்தஜாம பூஜையை தரிசிக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம்.

    அர்த்தஜாம பூஜையில் வேண்டும் வரங்களை அள்ளித் தருகிறார் ஆடல்வல்லான். பக்தர்கள் வேண்டும் வரங்களை தருமாறு சிவகாமசுந்தரியே சாமி நடராஜரிடம் வேண்டிக் கொள்கிறாள். இங்கு பிரார்த்தனை செய்யுமிடம் பள்ளியறையில் தீபாராதனை நடக்கும் நேரம் ஆகும். அப்போது எல்லா கோவில் தெய்வங்களும் ஒருவித குளிர்ந்த காற்று ரூபத்தில் பள்ளியறைக்குள் செல்வதை பக்தர்கள் உணர முடியும் (பிராணாயாமம், வாசியோகம் செய்வோர் நன்கு உணர முடியும்)

    உதாரணமாக திருமணம் நடக்க வேண்டி திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இதையே தில்லையில் அர்த்தஜாம பூஜையில் பள்ளியறை தீபாராதனை வேளையில் அதே திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரனை தரிசித்த பலனால் திருமண பாக்கியம் கைகூடும்.

    • மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ் பெற்றது.
    • நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

    மணக்குள விநாயகர் ஆலயம் தொடர்பான 25 முக்கிய குறிப்புகள்...

    1. புதுச்சேரி நகரின் பழமையான வரலாற்று சம்பவங்களோடு மணக்குள விநாயகர் பின்னி பிணைந்துள்ளார். எனவே புதுச்சேரி வரலாற்றோடு மணக்குள விநாயகருக்கு முக்கிய பங்கு உண்டு.

    2. புதுச்சேரி நகரின் நம்பர்-ஒன் ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

    3. 1923-ம் ஆண்டு வாக்கில் புதுவையில் `அச்சுகாபி விருத்தினி' என்ற பத்திரிகையை ஒர்லையான்பேட்டையைச் சேர்ந்த வெங்கடாசல நாயக்கர் நடத்தி வந்தார். அந்த பத்திரிகையில் மணக்குள விநாயகர் பற்றி நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டன.

    4. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தையாபிள்ளை 1936-ம் ஆண்டு புதுச்சேரி வந்து மணக்குள விநாயகர் மீது பல பாடல்கள் பாடினார்.

    5. புதுச்சேரியைச் சேர்ந்த பெரியசாமி பிள்ளை, மாணிக்கப்பிள்ளை, ரத்தினப் பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க சுவாமிகள், சாமி பொன்னுப்பிள்ளை, பண்டிதர் சுப்புராய பக்தர், சோம சுந்தரம் பிள்ளை, கந்தசாமி உபாத்தியாயர், ராமானுஜ செட்டியார், பங்காரு பக்தர், நா.வேங்கடாசல நாயக்கர், வரதப்பிள்ளை உள்பட ஏராளமானவர்கள் மணக்குள விநாயகர் மீது பதிகங்களும், பாடல்களும் இயற்றியுள்ளனர்.

    6. மணக்குள விநாயகரை நெசவாளர்கள் எப்படியெல்லாம் போற்றி பாதுகாத்தனர் என்பதை சிவமதி சேகர் தனது புதுவையும் மணக்குள விநாயகரும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    7. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது.

    8. மணக்குள விநாயகர், டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டேனீஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என 5 வெளிநாட்டவர்களின் ஆட்சி முறைகளை கண்டவர் ஆவார்.

    9. புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

    10. கோவில் கொடி மரத்துக்கு 1957-ம் ஆண்டு வடநாட்டு தொழில் அதிபர் ஒருவர் தங்க முலாம் பூசிய தகடு போர்த்தினார்.

    11. நடேச குப்புசாமிபிள்ளை என்பவர் 1909-ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள் முதல் அபிஷேகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அவர் இந்த அபிஷேகத்தை தொடர்ந்து நடத்தினார். 100 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் அவர் மகன் நடேச.கு.அர்த்தநாதன் பிள்ளை இந்த அபிஷேக ஆராதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    12. மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது செங்குந்த மரபினர், ஆரிய வைசிய மரபினர், வேளாளர்கள், பிராமணர்கள், வன்னியர்கள், கவரா நாயுடுகள், விஸ்வகர்ம மரபினர், யாதவர்கள், சேனைத் தலைவர் மரபினர், சான்றோர் குல மரபினர், ரெட்டியார் மரபினர், நாட்டுக்கோட்டை நகரத்தார், வணிக வைசிய மரபினர் என அனைத்து இனத்தவர்களும் சுவாமி வாகன ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    13. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

    14. கருவறையில் உள்ள தொள்ளைக்காது சித்தருக்கு அரூப முறையில் பூஜைகள் செய்யப்படுகிறது.

    15. மணக்குள விநாயகரின் அருள் பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    16. மணக்குள விநாயகருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பழம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யலாம்.

    17. மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ் பெற்றிருந்தாலும் அதன் ராஜகோபுரம் இன்னமும் இரு நிலைகளிலேயே உள்ளது.

    18.மணக்குள விநாயகர் மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே தோன்றி விட்ட போதும், எந்த மன்னரும் பெரிய அளவில் திருப்பணி செய்யவில்லை. மக்களால் மட்டுமே இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    19. கடந்த ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தன்று காலையில் சுமார் 50 ஆயிரம் பேர் மணக்குள விநாயகரை வழிபட்டனர். இது அந்த ஆலய வரலாற்றில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

    20. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

    21. மணக்குள விநாயகர் ஆலய கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

    22. கோவில் உள்ளே இருக்கும் சுதை சிற்பங்களில் ஒன்றில் மயிலில் பறக்கும் முருகருடன் விநாயகரும் இருக்கிறார். இது போன்ற சிற்பம் அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் ஆலயத்திலும் உள்ளது.

    23. மணக்குள விநாயகர் ஆலயம் கானாபத்திய ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

    24. மணக்குள விநாயகரின் உற்சவ மூர்த்திக்கு தயாரிக்கப்பட்டுள்ள தங்க கவசத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும். 5 கிலோ எடையில் 91.66 தரத்தில் ஹால்மார்க் சான்றிதழுடன் இந்த கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    25. இத்தலத்தில் பக்தர்களுக்கு தினமும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    26. கடற்கரையை ஒட்டிய பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோவில் விநாயகரை `புவனேச கணபதி' என்றும் சொல்கிறார்கள்.

    27. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

    28.விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழவகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணா அபிசேகம், 108 கலசாபிசேகம், சங்காபிசேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

    29.உலகில் உள்ள எல்லா விதமான விநாயகர் ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பான அம்சம்.

    30. விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

    31. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தில் பிரம்மாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள். புதுவருடம் பிறக்கும் அந்த நாளில் மணக்குள விநாயகரின் திருமுகத்தை தரிசிக்க அவரின் ஆசியோடு அந்த புது வருடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆவலில் இத்திருத்தலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருக்கிறது.

    32. பிரம்மோற்சவம் ஆவணி 25 நாட்கள் திருவிழாவாக நடக்கிறது.

    33. பவித்திர உற்சவம் 10 நாட்கள் திருவிழா விழாவாக கொண்டாடப்படுகிறது.

    34. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிசேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

    35. வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேஷ அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

    36. சென்னையில் இருந்து 160 கி.மீ. விழுப்புரத்தில் இருந்து 40 கி.மீ கடலூரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் புதுச்சேரி உள்ளது.

    37. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பாண்டிச்சேரி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வசதி உள்ளது.

    38. பாண்டிச்சேரி நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர வசதி உள்ளது.

    39. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.

    40. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்ததி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

    • ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
    • கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-

    சந்தன தைலம்- சுகம் தரும்

    திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்

    பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்

    அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்

    நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்

    வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்

    பால் - மனக்கவலை தீரும்

    தயிர் - மனநோய் அகலும்

    தண்ணீர்- சாந்தி உண்டாகும்

    நெய் - தொழில் சிறக்கும்

    தேன் - குரல் இனிமை பெறும்

    வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்

    கரும்புச்சாறு - மன அமைதிபெறும்

    இளநீர் - பக்தி பெருகும்

    எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்

    சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்

    திருநீறு - துன்பம் நீங்கும்

    சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்

    நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்

    பழவகை - திருவருள் பெறலாம்

    வாழைப்பழம் - வறுமை ஒழியும்

    கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்

    எள் - சனி பயம் நீங்கும்

    மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்

    பூ மாலை- உடல் பிணி தீரும்

    பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்

    பச்சரிசி- தீராக்கடன் தீரும்

    மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்

    தேங்காய்- பொன்பொருள் சேரும்

    பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்

    கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.

    முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

    ஏலம்- தீமைகள் நீங்கும்

    உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்

    எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்

    எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்

    எள்ளு சாதம் - பகை நீங்கும்

    பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்

    கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்

    • பக்தர்கள் 5 ஆயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சுவாமிக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆடி சுவாதி திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கருடனுக்கு திருமஞ்சனம், திருவாய்மொழி சேவாகாலத்துடன் நடைபெற்று வந்தது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் ஆடி சுவாதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    காலையில் பெருமாளுக்கு கலச திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஏராளமான பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. கோவில் வடக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு 2 ஆயிரம் லிட்டா் பால் அபிஷேகம் செயப்பட்டது. தொடா்ந்து மாவுப்பொடி, மஞ்சள், திரவியம், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தனம் கொண்டு நவ கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.

    பக்தர்கள் 5 ஆயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னா் சுவாமிக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து பிரபந்தகோஷ்டியாரின் திருவாய்மொழி சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த விநியோகம் நடைபெற்றது.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருடாழ்வாரை தாிசனம் செய்தனா்.

    • அம்மனுக்கு பால், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆலய த்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு குறிச்சி அபிராமி அம்மன் ஆலயத்தில் இருந்து விரதம் இருந்த 108 பெண்கள் கஞ்சி கலையங்களை சுமந்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

    அதனைதொடர்ந்து அம்மனுக்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பி க்கப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதமாக வழங்க ப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அனைத்து பரிவார தெய்வங்கள் என 456 சாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
    • பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    தஞ்சை பெரியகோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஆண்டுதோறும் எல்லா சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அதன்படி நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தண்ணீர், எண்ணெய், இளநீர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நுழைவுவாயில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார்கள், நடராஜர், 108 சிவலிங்கங்கள், நந்தி, முருகன், வருணபகவான், சண்டீகேஸ்வரர், அய்யனார் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்கள் என 456 சாமிகளுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சை வடக்குஅலங்கத்தில் உள்ள வடபத்ர காளியம்மன், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன்கோவில், வல்லம் ஏகவுரியம்மன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    • காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    வடமதுரை காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேக பூஜை நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேக பூஜை நடத்தப்பட்டது. அதன்பின்னர் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிமாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ராஜாங்க கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித நீராடி நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் மாரியம்மன், கைலாசநாதர், பகவதி, காளியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

    • சந்திராயன்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
    • சந்திரன் தலத்தில் சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து யாகமும் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    அப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திங்களூர் கைலாசநாதர் சுவாமி கோயில் சந்திரன் ஸ்தலத்தில் சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்துயாகமும் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பொது செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், முதன்மை செயலாளர் ஆதி நெடுஞ்செழியன், துணை தலைவர் துரை கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன், மைய்யகுழூ உறுப்பினர் காசிராஜன், ரவிக்குமார், லயன்ஸ் கிளப் பொருளாளர் தண்டபாணி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமை ப்பு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அன்னப்பசாமிக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் பூரணா, புஷ்களாம்பிகா சமேத அன்னப்பசாமி கோவில் உள்ளது.

    இக்கோ விலில் அன்னப்பசாமிக்கு பால், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், சுவாமிக்கு விபூதி அலங்காரமும், அம்பாளுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிப ட்டனர்.

    முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. அபிஷேக ஏற்பாடு களை சென்னை மடிபாக்கம் குருமூர்த்தி அய்யர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு யாகம் நடந்தது.
    • பைரவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைகாடர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி ஆனந்த் சிவச்சாரியர்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின், கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து பைரவருக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×