search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்
    X

    சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னப்பசாமி.

    அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

    • அன்னப்பசாமிக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் பூரணா, புஷ்களாம்பிகா சமேத அன்னப்பசாமி கோவில் உள்ளது.

    இக்கோ விலில் அன்னப்பசாமிக்கு பால், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், சுவாமிக்கு விபூதி அலங்காரமும், அம்பாளுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிப ட்டனர்.

    முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. அபிஷேக ஏற்பாடு களை சென்னை மடிபாக்கம் குருமூர்த்தி அய்யர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×