search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னிட்டு"

    • ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்
    • ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூர் அருகில் உள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் தேவி முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் திருமணமான பெண்கள் கலந்துகொண்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமணமான சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைப்பதற்கும், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கும் பாடல்பாடி பூஜையில் ஈடுபட்டனர். பின்னர் கொலு பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ளது.
    • விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதே போல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர், கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வ ரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் ,பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் ,பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநா யகர், அய்யம்பாளையம் விநா யகர், பிலிக்கல்பா ளையம், கொந்தளம் வேலூர் வட கரையா்தூர், ஜேடர்பாளை யம்,சோழசிரா மணி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    ×