search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோனியம்மன் கோவில்"

    • ஆண்டுதோறும் மாசி தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.
    • தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    கோவை:

    கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும் வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    8-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு உற்சவர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர்நிலை திடலான ராஜவீதியில் இன்று காலை முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் தேரில் எழுந்தருளிய கோனியம்மனை வழிபட்டுச் சென்றனர். மதியத்துக்கு பிறகு ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரோட்டத்தை கண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கையாக ரத வீதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

    • கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்ட காட்சி.

    கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு.

    • ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
    • கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-

    சந்தன தைலம்- சுகம் தரும்

    திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்

    பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்

    அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்

    நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்

    வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்

    பால் - மனக்கவலை தீரும்

    தயிர் - மனநோய் அகலும்

    தண்ணீர்- சாந்தி உண்டாகும்

    நெய் - தொழில் சிறக்கும்

    தேன் - குரல் இனிமை பெறும்

    வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்

    கரும்புச்சாறு - மன அமைதிபெறும்

    இளநீர் - பக்தி பெருகும்

    எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்

    சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்

    திருநீறு - துன்பம் நீங்கும்

    சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்

    நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்

    பழவகை - திருவருள் பெறலாம்

    வாழைப்பழம் - வறுமை ஒழியும்

    கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்

    எள் - சனி பயம் நீங்கும்

    மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்

    பூ மாலை- உடல் பிணி தீரும்

    பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்

    பச்சரிசி- தீராக்கடன் தீரும்

    மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்

    தேங்காய்- பொன்பொருள் சேரும்

    பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்

    கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.

    முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

    ஏலம்- தீமைகள் நீங்கும்

    உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்

    எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்

    எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்

    எள்ளு சாதம் - பகை நீங்கும்

    பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்

    கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்

    • கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
    • எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. அதில் எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்:

    2 விளக்கு- குடும்பம் மேன்மைபெறும்.

    3 விளக்கு- எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.

    4 விளக்கு- நற்கல்வி, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

    5 விளக்கு- விநாயகர் அருள் கிடைக்கும்.

    6 விளக்கு- நோய்கள் குணமாகும்.

    7 விளக்கு- திருமணத்தடை நீங்கும்.

    8 விளக்கு- மாங்கல்ய பலம் கூடும்.

    9 விளக்கு- நவக்கிரக பிணிகள் நொடியில் அகலும்.

    10 விளக்கு- தொழில் மேன்மை பெறும். கடன் தொல்லைகள் அகலும்.

    11 விளக்கு- செய்தொழிலில் லாபம் கிட்டும். போட்டியில் வெற்றி வசப்படும்.

    12 விளக்கு- ஜென்மராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

    13 விளக்கு- பில்லிசூனியபாவம் விலகும்.

    14 விளக்கு- குலதெய்வபலம், சந்தான பலன் கிடைக்கும்.

    15 விளக்கு- வழக்கில் வெற்றி வசப்படும்.

    16 விளக்கு- வாழ்வில் 16 செல்வங்களும் கிட்டும்.

    17 விளக்கு- வாகனம், வண்டி யோகம் கிடைக்கும்.

    27 விளக்கு- நட்சத்திர தோஷம் நீங்கும்.

    48 விளக்கு- தொழில் வளரும், பயம் நீங்கும்.

    108 விளக்கு- நினைத்த காரியம் நடக்கும்.

    508 விளக்கு- தீராத திருமண தோஷங்கள் அகலும்.

    1008 விளக்கு- சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

    • கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.
    • கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக விளங்குகின்றாள்.

    ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் வழிகாட்டுதலில் தான் ஒருவரது வெற்றி- தோல்வி அமையும். எனவே குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.

    அந்த வகையில் கோவை நகரின் காவல் தெய்வமான கோனியம்மன் 60-க்கும் மேற்பட்ட இனத்தவர்களுக்கு குலதெய்வமாக திகழ்கிறார். குறிப்பாக கவுடர்கள், இருளர்கள், போயர்கள், சோழிய வேளாளர்கள் கோனியம்மனை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    எந்தவொரு விஷயமாக இருந்தா லும் இவர்கள் கோனியம்மனிடம் வந்து பூ கட்டிப்போட்டு பார்த்து உத்தரவை பெற்ற பிறகே செயல்படுவார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள நெசவுத்தொழில் செய்யும் மக்களுக்கும் கோனியம்மன் தான் குலதெய்வமாக உள்ளாள். மைசூர், பெங்களூரில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனை மனதார குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    சேலம், திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தவறாமல் வந்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இப்படி கோனியம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட வருபவர்களில் வால்பாறையில் இருந்து வருபவர்கள் அனைவரையும் கவரும் வகையில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வசதி வாய்ப்பு பெற்றவர்கள் அல்ல. தினக்கூலி ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் நடக்கும் பெருவிழாவின்போது இவர்கள் வால்பாறையில் இருந்து புறப்பட்டு வந்து விடுவார்கள்.

    குறைந்தபட்சம் 100 பக்தர்கள் மொத்தமாக குழுவாக வருவார்கள். எவ்வளவு நேரமானாலும் அவர்கள் காத்திருந்து வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி அவ ர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வமான கோனியம்மனுக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட தவறுவதில்லை. இந்த வழிபாட்டை அவர்கள் மிகவும் பயபக்தியுடன் செய்து வருகிறார்கள்.

    இதுபற்றி வால்பாறையில் இருந்து வரும் மூத்த பக்தர் ஒருவர் கூறுகையில் ஒரு ஆண்டு நாங்கள் கோனியம்மனை வழிபட வராவிட்டால் எங்கள் உறவுகளிடையே ஏதாவது சண்டை வந்து பிரச்சினை ஆகி விடுகிறது. இல்லையெனில் யாருக்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுகிறது. எனவே நாங்கள் ஆண்டுதோறும் மொத்தமாக வந்து வழிபட்டு விடுவோம். எங்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுவது வழக்கம் என்றார்.

    • சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர்.
    • துர்க்கை வழிபாடு என்பது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது.

    துர்க்கை வழிபாடு என்பது தற்பொழுது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது. ஆனால் கோனியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் ராகு காலத்தில் ஆதிகோனியம்மன் சன்னதிக்கு பக்கத்தில் உள்ள மேடையில் எலுமிச்சம் பழத்தில் விளக்கு வைத்து வழிபடுவர்.

    திருமண தடைகள், காரிய தடைகள், தொழிலில் நஷ்டம், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் நோய் தீர்க்க வேண்டியும் 48 வாரம், 18 வாரம், 9 வாரம் போன்ற கணக்குகள் வைத்து துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.

    அவர்கள் நினைத்த வாரம் வரை வந்து விட்டால் இறுதி யில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், திருமண தடைகளுக்காக வேண்டியவர் அம்மனுக்கு பொட்டு மாங்கல்யம் செய்து அம்மன் கழுத்தில் அணிவித்து அதை காணிக்கையாக செலுத்துவர்.

    உடல்நிலை சரியில்லாத வர்கள் வெள்ளியாலேயோ அல்லது அதுபோன்ற வேறு உலோகத்தாலேயோ செய்யப்பட்ட கண்ணடக்கம், கை, கால் போன்றவை வாங்கி பூஜை செய்துபின் அதை காணிக்கையாக செலுத்துவர்.

    சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர். காரியத்தடை ஏற்படுபவர்கள் பல தானங்களை செய்கின்றனர். இவ்வாறு செய்வதனால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த வேண்டுதல் உள்ளூர் மக்கள் மட்டும் வேண்டுவது இல்லை. வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பம்பாய், கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து வேண்டுதல் செய்கின்றனர். மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கோனியம்மனுக்கு தீவிர பக்தர்கள் உண்டு. அவர்கள் வேண்டுதலுக்கு காணிக்கைகளை அஞ்சலில் அனுப்புவதும் உண்டு.

    • கோனியம்மனின் உருவ அமைப்பு வித்தியாசமான கோலத்துடன் உள்ளது.
    • கோனியம்மன் கழுத்தில் ஆரம் அணிந்துள்ளாள்.

    கோவை நகரில் ஆட்சி செய்யும் கோனியம்மன் கருவறையில் மிகவும் சிறப்பான கோலத்தில் காட்சி தருகிறார். 3½ அடி உயரம் உள்ள கோனியம்மன் விக்ரகம் 8 கரங்களுடன் காட்சியளிக்கிறது. அந்த 8 கரங்களிலும் சூலம், உடுக்கை, வாள், சங்கு, கபாலம், தீ, சக்கரம், மணி ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். அதோடு அவள் இடது காதில் தோடு அணிந்துள்ளாள். வலது காதில் குண்டலம் அணிந்துள்ளாள்.

    இந்த உருவ அமைப்பை அர்த்தநாரீஸ்வர சக்தியாக கருதுகிறார்கள். இடதுபாகம் அம்மையின் பாகம் என்பதால் தோடு காணப்படுகிறது. வலது பாகம் ஈசன் பாகம் என்பதால் குண்டலம் உள்ளது.ஒரு பாகம் ஈசன் அம்சமும், மற்றொரு பாகம் அம்பிகை அம்சத்துடன் உள்ளதால் கோனியம்மன் அர்த்தநாரீஸ்வர சக்தியாக திகழ் கிறாள்.

    இந்த வடிவம் சிவமும், சக்தியும் வேறு, வேறு இல்லை ஒன்றுதான் என்பதை பக்தர்களுக்கு உணர்த்துகிறது.

    கோனியம்மன் சிலை அமைப்பை கவனித்தால் அவள் வலது பாதத்தை மடித்து பீடத்தின் மீது வைத்திருப்பது தெரியும். இடது காலை கீழே தொங்க விட்டபடி அமர்ந்துள்ளாள். அவள் காலடியில் துஷ்ட அரக்கன் வீழ்ந்து கிடக்கிறான். மகிஷா சுரமர்த்தினி யுடன் போரிட வந்த அந்த அரக்கன் வாளுடன் கீழே விழுந்து கிடக்கிறான்.

    கோனியம்மன் கழுத்தில் ஆரம் அணிந்துள்ளாள். தலையை மணி மகுடம் அலங்கரித்துக் கொண்டி ருக் கிறது. இதனால் கோனியம்மனின் உருவ அமைப்பு வித்தியாசமான கோலத்துடன் உள்ளது. அவளது பார்வை மிகவும் உக்கிரமாக உள்ளது. என்றாலும் அவள் பக்தர்களை பார்க்கும்போது உக்கிரம் தணிந்து அருள் மழை தரும் குளிர்ச்சியான தென்றலாக வருவது குறிப்பிடத்தக்கது.

    • குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.
    • ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு.

    ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் வழிகாட்டுதலில் தான் ஒருவரது வெற்றி- தோல்வி அமையும். எனவே குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.

    அந்த வகையில் கோவை நகரின் காவல் தெய்வமான கோனியம்மன் 60-க்கும் மேற்பட்ட இனத்தவர்களுக்கு குலதெய்வமாக திகழ்கிறார். குறிப்பாக கவுடர்கள், இருளர்கள், போயர்கள், சோழிய வேளாளர்கள் கோனியம்மனை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    எந்தவொரு விஷயமாக இருந்தா லும் இவர்கள் கோனியம்மனிடம் வந்து பூ கட்டிப்போட்டு பார்த்து உத்தரவை பெற்ற பிறகே செயல்படுவார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள நெசவுத்தொழில் செய்யும் மக்களுக்கும் கோனியம்மன் தான் குலதெய்வமாக உள்ளாள். மைசூர், பெங்களூரில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனை மனதார குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    சேலம், திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தவறாமல் வந்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இப்படி கோனியம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட வருபவர்களில் வால்பாறையில் இருந்து வருபவர்கள் அனைவரையும் கவரும் வகையில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வசதி வாய்ப்பு பெற்றவர்கள் அல்ல. தினக்கூலி ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் நடக்கும் பெருவிழாவின்போது இவர்கள் வால்பாறையில் இருந்து புறப்பட்டு வந்து விடுவார்கள்.

    குறைந்தபட்சம் 100 பக்தர்கள் மொத்தமாக குழுவாக வருவார்கள். எவ்வளவு நேரமானாலும் அவர்கள் காத்திருந்து வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி அவ ர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வமான கோனியம்மனுக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட தவறுவதில்லை. இந்த வழிபாட்டை அவர்கள் மிகவும் பயபக்தியுடன் செய்து வருகிறார்கள்.

    இதுபற்றி வால்பாறையில் இருந்து வரும் மூத்த பக்தர் ஒருவர் கூறுகையில் ஒரு ஆண்டு நாங்கள் கோனியம்மனை வழிபட வராவிட்டால் எங்கள் உறவுகளிடையே ஏதாவது சண்டை வந்து பிரச்சினை ஆகி விடுகிறது. இல்லையெனில் யாருக்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுகிறது. எனவே நாங்கள் ஆண்டுதோறும் மொத்தமாக வந்து வழிபட்டு விடுவோம். எங்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுவது வழக்கம் என்றார்.

    • கோனியம்மனுக்கு தினமும் காலையில் மட்டும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
    • இத்தலத்து பஞ்ச முக விநாயகர் 10 கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

    1. கோனியம்மன்கோவில் 13-ம் நூற்றாண்டில் உருவானதாகும். ஆனால் 600 ஆண்டுகளுக்கு முன்பு தான் அங்கு ஆலயம் கட்டப்பட்டது.

    2. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    3. ஆடி மாதம் முழுவதும் இத்தலத்தில் நடத்தப்படும் ஊஞ்சல் உற்சவம் மிகவும் விசேஷமாகும்.

    4. மாசி மாதம் 14 நாட்கள் பெரிய விழா நடத்தப்படும். அப்போது தேரோட்டம் நடத்தப்படும். கோவையில் இத்தலத்தில் மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

    5. பக்தர்கள் தாம்வேண்டுதல் நிறைவேறியதும் சாமிக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    6. மாவிளக்கு போடுவது, பொங்கல் வைத்து வழிபடுவதும் இத்தலத்தில் அதிகம் நடக்கிறது. ஆனால் பொங்கல் பிரசாதத்தை கோவில் வளாகத்தில் வைத்து பக்தர்களுக்கு கொடுக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    7. பராசக்தியின் கோப ஆவேச கூறு என்று அழைக்கப்படும் துர்க்கா தேவியின் அம்சமாக கோனியம்மன் கருதப்படுகிறார்.

    8. இத்தலத்தில் வேப்பமரம், வன்னிமரம் , நாகலிங்க மரம், அரச மரம் ஆகியவைஉள்ளன. இம்மரங்கள் தேவ மரங்களாக கருதப்படுகின்றன . இதில் வன்னிமரம் தல விருட்சமாக உள்ளது.

    9. மனஅமைதி பெற விரும்பும் பெண்கள், இத்தலத்தில் உள்ள நாகலிங்கம் மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் இருப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    10. மாசித் திருவிழாவின் போது தீ குண்டம் இட்டு விட்டால் யாரும் ஊரைவிட்டு வெளியே செல்ல மாட்டார்கள்.

    11. இத்தலத்து கோனியம்மனுக்கு தினமும் காலையில் மட்டும் அபிஷேகம் நடத்தப்படுகிறது. 7 மணி முதல் 7.30 மணிக்குள் அபிஷேகம் நடந்து விடும். இந்த அபிஷேக தீர்த்தங்கள் நோய்களை தீர்க்கும் மருந்து என்று கருதி பக்தர்கள் வாங்கி அருந்துகிறார்கள்.

    12. அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை புகழ்ந்து பாடல் எழுதியுள்ளார். அந்த பாடல் முருகப்பெருமான் சன்னதி வாயிலில் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது.

    13. தினமும் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும் போது பக்தர்கள் பூ கட்டி போடும் உத்தரவு கேட்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது. சிவப்பு, வெள்ளை கலரில் பூ கட்டி அம்மன் பாதத்தில் போடுவார்கள். பிறகு ஒரு பொட்டலத்தை பிரித்து பார்ப்பார்கள். வெள்ளை பூ வந்தால் நினைத்த காரியம் செய்ய கோனியம்மன் உத்தரவு கொடுத்து விட்டாள் என்று அர்த்தமாகும்.

    14. நவராத்திரி திருவிழா இத்தலத்தில் சிறப்பாக நடத்தப்படுகிறது.விஜய தசமி அன்று கூப்பிடு விநாயகர் ஆலயத்தில் இருந்து சென்று அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். கோட்டை சென்ற கலிய வரத பெருமாள், தண்டுமாரியம்மன் ஆகியோருடன் கோனியம்மன் அணிவகுப்பாள். மற்ற தெய்வங்கள் புடை சூழ அம்பு போடுவது கோனியம்மன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    15. துர்க்கை சன்னதியில் செவ்வாய் தோறும்ராகு காலத்தில் நடத்தப்படும் பூஜை மிக சிறப்பான தாக கூறப்படுகிறது.

    16. கோனியம்மனுக்கு தினமும் காலை நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், மதியம் தயிர் சாதம், இரவுவெண் பொங்கல் படைக்கப்படுகிறது.

    17. சத்ரு சம் ஹாரத்துக்காக இத்தலத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

    18. இத்தலத்து உற்ச வர் சிலை மிகவும் பழமை யானது. ஐம்பொன் னால் செய்யப்பட்ட இந்த சிலையில் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து பள்ளமே விழுந்து விட்டது இதன் மூலம் இந்த உற்சவரின் பழமை சிறப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

    19. நவக்கிரகங்களும் இங்கு தம்பதியருடன் வீற்றிருப்பதால் அவர்களை சுற்றி வந்தால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகமாகும்.

    20. இத்தலத்து நவக்கிரகங்களில் சூரியபகவான் மேற்கு நோக்கி இருப்பது தனிச்சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

    21. இக்கோவில் கோவை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.

    22. இத்தலத்து வாகனங்களில் புலி வாகனம், வெள்ளை யானை வாகனம், கிளி வாகனம், சிம்மவாகனம் வித்தியாசமானவை.

    23. இத்தலத்து பஞ்ச முக விநாயகர் 10 கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

    24. கோனியம்மனை கொங்கு நாட்டு இளவரசி என்று கொங்கு நாட்டு மக்கள் அன்போடு சொல்கிறார்கள்.

    25. கோனியம்மன் ஆலயத்தில் காமிக ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது.

    • கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
    • கோனி எனில் அரசர்கரசி அல்லது அரசிக்கரசி எனவும் பொருள் கொள்ளலாம்.

    கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். கோனி அம்மன் என்றால் அரசர்களால் வழிபடப்படும் தெய்வம் எனவும் தெய்வங்களுக்கு எல்லாம் அரசி எனவும் பொருள்படும். தமிழில் கோ என்றால் மன்னர் மன்னர் என்றும் வடமொழியில் ராஜாதிராஜன் எனவும் கூறுவர். இவ்வாறு கோன் திரியும்போது கோனி எனில் அரசர்கரசி அல்லது அரசிக்கரசி எனவும் பொருள் கொள்ளலாம்.

    கோவையைப் போலிதழ் வாயினைக் கொண்ட குலப்பிடிபூக்

    கோவையைப் பூண்டருள் கோமதி ஸ்ரீமதி குண்டலியென்

    கோவையைப் பூணணி கொற்றவை நற்றவர் கூட்டுறவால்

    கோவையைக் காத்தருள் கோமகளாகிய கோனம்மையே

    சீர்வளரும் கல்வியோடு செல்வநிறை ஆயுள்புகழ்

    ஏர்வளரும் மக்கட்பே றெய்துங்கான் - பார்மிசை நல்

    வாழ்வு வரும் வன்கோவைக் கோனியம்மன்மாணடிகள்

    தாழ்ந்து தொழும் அன்பர்க்கே தான்

    • ஆதி கோனியம்மனுக்கு தலை மட்டுமே உள்ளது.
    • உடல் பகுதி மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    கோனியம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் ஆதிகோனியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதியில் துர்க்கையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். சப்தமாதர்களும் உள்ளனர்.

    இவர்களுக்கு அருகில் உக்கிர வீரபத்திரர், கருப்பர், முனீஸ்வரரும் உள்ளனர். இந்த சன்னதியில் பக்தர்களை மிகவும் கவர்வது ஆதி கோனியம்மன் விக்ரக மாகும். இங்கு ஆதி கோனியம்மனுக்கு தலை மட்டுமே உள்ளது. உடல் இல்லை. இதன் பின்னணியில் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

    கோவையில் கோசர்கள் கோனியம்மனை வழிபட்டு வந்த காலக்கட்டத்தில் அதற்குரிய மூலவரை உருவாக்கி வைத்திருந்தனர்.

    அவர்களுக்கு பிறகு கோவை நிலப்பகுதியை ஆண்ட மைசூர் மன்னர்கள் கோனியம்மனை மகிஷாசூரமர்த்தினியாக வடிவமைத்து வழிபட்டனர். இந்தநிலையில் திப்புசுல்தான் படையெடுத்து வந்து கோவையில் உள்ள ஆலயங்களை எல்லாம் சூறையாடினான். அப்போது இந்த தலமும் பலத்த சேதத்தை சந்தித்தது. சிலைகளில் பெரும்பாலானவை உடைக்கப்ப ட்டன.

    மகிஷாசூரமர்த்தினி சிலையும் திப்புசுல்தான் படைகளால் உடைக்கப்பட்டது. அப்போது சிலையின் தலையும் உடலும் இரண்டு துண்டாக உடைந்தது. தலையை இந்த தலத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    உடல் பகுதி மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தலை இல்லா முண்டத்தை அங்குள்ளவர்கள் இன்றும் வழிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    • காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி பெண்கள் வழிபடுவர்.
    • இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும். இதேபோல கோனியம்மன் கோவிலிலும் ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. அந்த நாட்களில் வழக்கத்தை விட பெண்கள் ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

    மேலும் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த ஆடி மாதம் முழுவதும் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். காலை வேளையில் உற்சவ அம்மனை சிறப்பு அலங்காரத்தில் சன்னதி முன்புள்ள மகா மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்வார்கள். அங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி பெண்கள் வழிபடுவர். இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து உற்சவ அம்மன் சன்னதிக்குள் எழுந்தருளுவார். மறுநாள் காலை மீண்டும் மகா மண்டபத்துக்கு வருவார். இப்படி அந்த ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது விசேஷமானது ஆகும். ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு கூழ்படைத்து வழிபடுவது வழக்கம். இந்த கோவிலில் நேர்ச்சை கடன் செலுத்தும் பக்தர்கள் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவர்.

    இதேபோல நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும்.

    ×