என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
தேர்த்திருவிழாவையொட்டி கோனியம்மன் கோவிலில் கொடியேற்று விழா
- 28-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- தேர்த்திரு விழா மார்ச் 1-ந்தேதி நடக்கிறது.
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹாலில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மாத தேர்த்திரு விழா அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த மாதம் தேர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. கடந்த 14-ந் தேதி பூச்சாட்டு, 20-ந் தேதி கிராம சாந்தி நடந்தது.
அதைத்தொடர்ந்து தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்று விழா, அக்னிசாட்டு நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இதை யொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விநாயகர், அம்மன் எழுந்தருளி அக்னிசாட்டு கம்பத்தை மேளதாளத்தோடு எடுத்து கோவிலை சுற்றி வந்து இரவு 8 மணியளவில் கோவில் வளாகத்தில் அக்னிசாட்டு கம்பம் வைக்கப் பட்டது. அப்போது பக்தர்கள் சிலர் பக்தி பரவசத்தில் சாமியாடினர்.
இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங் கேஸ்வரர் சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரிய சாமி, முன்னாள் அறங்காவலர் ராம்கி, ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர்த்திருவிழாவையொட்டி கோவில் கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று (புதன்கிழமை) புலிவாகனத்தில் அம்மன் வீதி உலா, நாளை (வியாழக்கிழமை) கிளி வாகனத்திலும், 24-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி காமதேனு வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
28-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 1-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு நடக்கிறது. வருகிற 2-ந் தேதி பரிவேட்டை-குதிரை வாகனம், 3-ந் தேதி தெப்பத் திருவிழா, 4-ந் தேதி தீர்த்தவாரி கொடியிறக்கம், 6-ந் தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்