தோஷங்கள் போக்கும் மாசி மக தீர்த்தவாரி

மாசி மகத்தை முன்னிட்டு நாளைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் கிரக சாந்தி பூஜை

வேலைவாய்ப்பு, செல்வம், திருமண வாழ்க்கை, புத்திரப்பேறு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களில் பாதகங்கள் நீங்கி மேன்மையான நிலையை பெறுவதற்கும் இந்த கிரக சாந்தி பூஜை செய்யலாம்.
குடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா? அப்ப இந்த கோவிலுக்கு வாங்க

குடிபோதைக்கு அடிமையானவர்கள் மத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது.
உடல் நலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் காவடி

குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கவும், உடல் நலக்குறைவு நீங்கி நலம் பெறவும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து பழனிக்கு வருகின்றனர்.
கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய கோவில்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
குழந்தை பாக்கியம், வீடு-மனை யோகம் அருளும் கோவில்

பச்சைமலை முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வீடு-மனை வாங்கும் யோகம் கிட்டும்.
பில்லி சூனியம், நவக்கிரக தோஷங்களில் விடுபட உதவும் திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்

அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை.
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் தொடங்கியது

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் தடைப்பட்ட திருமணம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
தைரியமும், தன்னம்பிக்கை, வெற்றி தரும் எட்டு கோவில்கள்

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:
கடன் தொல்லையில் இருந்து நம்மை காப்பார் ருணவிமோசனேஸ்வரர்

திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து ருணவிமோசனேஸ்வரரையும் இங்கே சிவ துர்கையையும் விஷ்ணு துர்கையையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால் கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர்.
சொந்த வீட்டு கனவு, திருமண வரம் அருளும் செவ்வாய் பகவான்

சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானை வழிபடலாம்.
பில்லி, சூனியம் மற்றும் பெண்களின் குறைதீர்க்கும் கோவில்

திருவேடகம் ஏடகநாதர் கோவில் இறைவனை வழிபட்டால் பில்லி, சூனியம் நீங்கும் என்கிறார்கள். இத்தல இறைவியான ஏலவார்குழலி அம்மை, பெண்களின் குறைகளை நீக்கும் தாயுள்ளம் படைத்தவளாகத் திகழ்கிறாள்.
கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியரை ஒன்று சேர்க்கும் கோவில்

திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.
தீராத நோய் தீர்க்கும் வேம்படி சுடலை மாடன்

கோயம்புத்தூர் வேம்படி சுடலைமாடன் கோவில் வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீருவதுடன், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் திருகருக்காவூர்

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருகருக்காவூர் தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும்.
ராகு தோஷங்களை நிவர்த்தி செய்யும் திருத்தலம்

ராகு பகவான் இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் தன் இரு தேவியருடன் எழுந்தருளி தன்னை வழிபடுவோரின் ராகு தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்பாலிக்கின்றார்.
இழந்த செல்வங்களை பாண்டவர்களுக்கு மீண்டும் கிடைக்க செய்த தலம்

திருநாகேஸ்வரம் ராகுவை வழிபட்டு தோஷம் நீங்கி பெரும்பேறு பெற்றவர்கள் நிறைய பேர். அவர்களில் பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதோடு கார்த்திகை மாதத்தில் திருவிழாவினையும் நடத்தி வந்தனர் என்பது வரலாறு.
மாந்தி தோஷத்துக்கு ஒரே பரிகாரத் திருத்தலம்

இந்தியாவிலேயே மாந்தி தோஷத்துக்கு ஒரே ஒரு பரிகாரத் திருத்தலம் உள்ளது. இங்கு வழிபாடு செய்தால் ஜாதக ரீதியாக அனைத்துவித சனி தோஷங்களும் திருமணத்தடை புத்திர தோஷம் நீங்கும்.
இழந்த சொத்துகளைத் திரும்பப் பெற பரிகாரம்

திருப்பாச்சூரில் தங்காதலி உடனாய வாசீஸ்வரர் கோவிலில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாட்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம்.