search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • நேற்று இரவு ஏழுமலையான் தங்க குதிரை வாகனத்தில் பவனி வந்தார்.
    • திருப்பதியில் நேற்று 71,443 பேர் தரிசனம் செய்தனர். 26,948 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 8-ந்தேதி நடந்தது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார். ஒரே நாளில் 4 லட்சம் பக்தர்கள் கருட சேவையில் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கடல் அலையைப் போல் குவிந்து இருந்த பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி பரவசம் பொங்க விண்ணதிரும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

    நேற்று இரவு ஏழுமலையான் தங்க குதிரை வாகனத்தில் பவனி வந்தார். இன்று காலை வராக சாமி கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்கியவாறு சக்கரத்தாழ்வாரை புஷ்கரணிக்கு கொண்டு சென்று தீர்த்தவாரி செய்தனர்.

    சக்கரத்தாழ்வாருக்கு 1,200 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான மலர்கள் கொண்டு மலர் அபிஷேகம் நடந்தது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, நீச்சல் வீரர்கள் 20 மீட்டருக்கு ஒருவர் என நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    புஷ்கரணியில் நீராட செல்லும் பக்தர்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீராட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இன்று இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    பிரம்மோற்சவ விழா தொடக்க நாளில் இருந்து நேற்று வரை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை முதல் இரவு வரை 404 பஸ்கள் 13,566 தடவை இயக்கப்பட்டது.

    8 லட்சத்து 50 ஆயிரத்து 85 பக்தர்கள் பயணம் செய்தனர். இதன் மூலம் ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.6.81 கோடி வருவாய் கிடைத்தது. நேற்று குறைந்த அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து இருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,443 பேர் தரிசனம் செய்தனர். 26,948 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ.2.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • குபேர மூலையில் பீரோவை வைத்தால் செல்வம் பெருகும்.
    • தங்களுடைய வாழ்க்கை மற்றும் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வடக்கு திசை நோக்கி பயணம் செய்யுங்கள்.

    வடக்கு திசை நோக்கிய குபேர மூலையாகியது குபேரர் கடவுளுக்கு உகந்தது. உதாரணத்திற்கு உங்கள் வீடு கிழக்கு நோக்கி இருந்தால் நீங்கள் கிழக்கு பார்த்து நின்று கொள்ளுங்கள். உங்களுக்கு இடப்பக்கமாக உள்ளது வட கிழக்கு மூலை மற்றும் உங்களுக்கு வலப்பக்கமாக உள்ளது தென் கிழக்கு மூலையாகும்.

    வடகிழக்கு மூலை ஈசானி மூலை, தென்கிழக்கு மூலை அக்னி மூலை, தென்மேற்கு மூலை கன்னி மூலை என்றும், வடமேற்கு மூலை வாயு மூலை என்றும் கூறுவார்கள்.

    குபேரரை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அது போல குபேர மூலையில் பீரோவை வைத்தால் செல்வம் பெருகும்.


    மேலும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தங்களது பணத்தை (காசோலையை) குபேர மூலையில் வைப்பதன் மூலம் தொழில் நன்கு வளர்ச்சி அடையும் செல்வமும் பெருகும்.

    தொழிலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் லாபம் பன்மடங்கு அதிகரிக்க குபேரற்கு பாலபிஷேகம் செய்வது சிறந்தது. வியாபாரம் தொய்வு பெறாமல் இருப்பதற்கு வருடத்தில் ஒருமுறை திருவண்ணாமலையில் உள்ள குபேர லிங்கத்தை வழிபடுவது நல்லது.


    தங்களுடைய வாழ்க்கை மற்றும் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வடக்கு திசை நோக்கி பயணம் செய்யுங்கள்.

    வீடு அல்லது மனை எது வாங்குவதாக இருந்தாலும் அதை வடக்கு திசை பார்த்து வாங்குங்கள். குபேரர் கடவுளை வியாழக்கிழமையில் வழிபடுவது சிறந்தது. அப்படி வழிபட்டால் பண பற்றாக்குறை வராது. மேலும் ஈசானி மூலை மற்றும் குபேர மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஈசானி மூலையை காலியாக வைத்திருக்க வேண்டும். வற்றாத செல்வம் பெருகுவதற்கு குபேர மூலை சிறந்தது.

    • மாமியார் ராசிக்கு மருமகள் ராசியானது 6, 8-வது ராசியாக வந்தால் தம்பதியினரை தனி குடும்பம் வைப்பது நல்லது.
    • பெண்ணிற்கு 22வது நட்சத்திரத்தில் உள்ள ஆண் மகனை திருமணம் செய்தால் அந்த ஆணிற்கு ஆயுள் குறைந்துவிடும்.

    திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்றாகும். திருமணம் என்றாலே திருமணம் செய்ய போகும் தம்பதியினருக்கு ஜாதக பொருத்தம் பார்த்து செய்வது பாரம்பரிய வழக்கமாகும். இப்போது ஒரே ராசி நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்யலாமா என்பதை முழுமையாக தெரிந்துக்கொள்ளுவோம்..

    திருமணம் என்பது கணவன் மனைவியாக அமையும் தாம்பத்தியினரின் மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தை பேறு, ஆயுள், செல்வநிலை, சுபிட்சமான எதிர்கால நிலை போன்ற எதிர்கால அம்சங்களை இருவரின் ஜாதகங்களை வைத்து அவர்களுடைய ராசி, நட்சத்திரம் கிரகங்களை வைத்து ஜோதிடர்கள் கணித்து கூறுவது வழக்கம்.

    திருமணம் செய்ய போகும் இருவருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு பொருத்தம் பார்க்கும் போது தம்பதியினரின் பிறந்த நட்சத்திரத்தினை வைத்து 10 பொருத்தங்கள் மற்றும் கிரகங்களை வைத்து திருமணம் முடிவு செய்யப்படுகிறது.

    திருமணம் செய்யும் ஆண் மற்றும் பெண் தம்பதியினருக்கு ஒரே நட்சத்திரம் இருந்தால் நட்சத்திர பொருத்தத்தில் 10 பொருத்தத்திற்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும் திருமணத்தில் முக்கியமான பொருத்தம் என்று சொல்லக்கூடிய மாங்கல்ய பொருத்தம் அவர்களுக்கு இருக்காது.

    அதனால் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது.

    ஒரு ராசிக்கு ஏழரை சனி, அஷ்டம சனி வரும்பொழுது தம்பதியினர் இடையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தில் அதிக கருத்து வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது.

    ஒரே ராசி இருந்தால் சரி, திருமணம் ஆக போகும் பெண்ணிற்கு இருக்கும் நட்சத்திரத்திற்கு பின் உள்ள நட்சத்திரம் அந்த ஆணுக்கு இருந்தால் நன்மை அமையும். தம்பதியினருக்கு ஒரே ராசி, நட்சத்திரம் இருந்தால் ஒரே மாதிரியான ரசனைகள் தான் இருக்கும்.

    கிரகநிலைகள் மாறும்போது இருவரின் வாழ்க்கையும் மிக பாதிப்படைய செய்யும். இதனால் ஒரே ராசியாக இருந்தாலும் நட்சத்திரம் மட்டும் வேறு இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    திருமணம் செய்ய போகும் ஆண், பெண் இருவருக்கும் பகையோனி நட்சத்திரம் இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதனை மீறி திருமணம் செய்பவர்களுக்கு வாழ்வில் எப்போதும் சண்டைகள் இருந்துகொண்டே இருக்கும்.

    பெண்ணிற்கு 7 ஆம் நட்சத்திரத்தினை சேர்ந்த ஆண் மகனை திருமணம் செய்து வைத்தால் வீட்டில் தினமும் சித்திரவதை நடக்கும். பெண்ணிற்கு 12,17-வது நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களை மணம் செய்து வைத்தால் வீட்டில் துரதஷ்டமும், தர்த்தரியம் ஏற்படும்.

    பெண்ணிற்கு 22–வது நட்சத்திரத்தில் உள்ள ஆண் மகனை திருமணம் செய்தால் அந்த ஆணிற்கு ஆயுள் குறைந்துவிடும்.

    மாமியார் ராசிக்கு மருமகள் ராசியானது 6, 8-வது ராசியாக வந்தால் தம்பதியினரை தனி குடும்பம் வைப்பது நல்லது. இதனால் பல வித பிரச்சனைகள் குறையும்.


    திருமணம் செய்ய போகும் ஆண் / பெண் இருவருக்கும் ரோகினி, திருவாதிரை, மகம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி, விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான நட்சத்திரம் இருந்தது என்றால் திருமணம் முடிப்பது நல்லது.

    அஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூரம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒரே நட்சத்திரங்கள் கொண்டவர்களாக இருந்தால் பரிகாரத்திற்கு பின்பு திருமணம் செய்து கொள்ளலாம்.

    திருமணம் செய்யக்கூடாத ஒரே நட்சத்திரம்:

    பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி போன்ற நட்சத்திரம் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.

    பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, சித்திரை, விசாகம், மகம், ஸ்வாதி போன்ற 12 நட்சத்திர தினங்களில் பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது. மீறி செய்தால் பணம் திரும்ப வராது. பணத்தினை திரும்ப செலுத்துவதில் கஷ்டம் ஏற்படும். இந்த நட்சத்திரங்களில் பிரயாணம் செய்தால் சிக்கல்கள் ஏற்படும். அடுத்து உடலில் நோய்வாய்பட்டால் குணமடைவதற்கு நீண்ட நாள் ஆகும்.

    • இம்முறையில் தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிப்பார்கள்.
    • இந்த மந்திரங்களை கூறி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் திருஷ்டி அனைத்தும் விலகும்.

    திருஷ்டி என்பது மிகவும் பொல்லாதது என்று கூறுவார்கள். கல்லடி பட்டாலும் படலாம். ஆனால் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள். ஒருவர் இயல்பாக பார்ப்பதற்கும் பொறாமை எண்ணத்துடன் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. எவர் ஒருவர், தம்மை பார்த்து தீய எண்ணத்துடனும் பொறுமையுடனும் கண் இமைக்காமல் பார்க்கிறாரோ அப்போது நமக்கு திருஷ்டி என்பது ஏற்படும். இதனை போக்குவதற்கு தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிக்கும் முறை என்று செய்து வந்தார்கள். கல் உப்பு, வர மிளகாய், கடுகு, எலுமிச்சை பழம் என பல பொருட்களை கொண்டு மந்திரம் திருஷ்டி கழிப்பார்கள். அப்படி திருஷ்டி கழிக்கும் போது ஒரு மந்திரத்தை கூறுவார்கள்.

    அந்த மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்கும் போது எந்த விதமான திருஷ்டியாக இருந்தாலும் நம்மை விட்டு நீங்கி விடும்.

    திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய தமிழ் மந்திரம்:

    பாம்பு கண்ணு, பல்லி கண்ணு பல்லியோட போ

    பேய் கண்ணு பிசாசு கண்ணு பேயோட போ

    பிச்சை கண்ணு திரிச்ச கண்ணு தீயோட போ

    உங்கள் குடும்பத்தில் திருஷ்டி அதிகமாக உள்ளவர்களை கிழக்கு பார்க்க உட்கார வைத்து உப்பு, வர மிளகாய் மற்றும் கடுகு கொண்டு தலையை இடது புறமாக மூன்று முறையும், வலது புறமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். அப்படி சுற்றும்போது இந்த மந்திரத்தை மூன்று கூற வேண்டும். அதன் பிறகு, திருஷ்டி கழித்த பொருட்களை தீயில் போட்டு விட வேண்டும். இம்முறையில் தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிப்பார்கள்.

    மேலும், நீங்கள் எலுமிச்சைப்பழம் கொண்டு திருஷ்டி கழிக்கும்போது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்க வேண்டும்.

    மஞ்சள் வர்ண புளித்த மாரி!

    ரத்த வீர ராசா கன்னி,

    மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா!வா!

    இவ்வாறு நீங்கள் திருஷ்டி கழிக்கும்போது இந்த மந்திரங்களை கூறி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் திருஷ்டி அனைத்தும் விலகும்.

    • கண்ணாடி டம்ளர் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
    • கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும்.

    அனைவருடைய வாழ்விலும் சரி ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும். பிரச்சனை இல்லாத வாழ்கை யாருக்குமே கிடையாது. அப்படிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு அற்புதமான பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

    பொதுவாக உப்பு என்பது ஒரு ஆன்மிகம் பொருளாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் இந்த கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும் இதன் காரணமாக தான் கல் உப்பை ஆன்மிக பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    பரிகாரத்தை செய்யும் முறை: இரவு உறங்குவதற்கு முன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அதாவது ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கல் உப்பு ஒரு கைப்பிடியளவு மற்றும் அந்த கண்ணாடி டம்ளர் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.

    இந்த டம்ளரை நீங்கள் படுக்கும் இடத்திற்கு அருகாமையில் வைத்து உங்கள் மனதில் நிறைவேற வேண்டிய விஷயங்களை மனதில் நினைத்து அந்த விஷயம் நிறைவேற வேண்டும் என்று பிராத்தனை செய்துவிட்டு உறங்க செல்லுங்கள்.

    பின் மறுநாள் இரவு இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் அல்லது நீரோட்டம் உள்ள இடத்தில் ஊற்றிவிட்டு மீண்டும் இது போன்று செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் நம்பிக்கையுடன் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் மனதில் நினைத்த காரியம் வெற்றிபெறும்.

    • சிலருக்கும் பல விதமான காரணங்கள் திருமண தள்ளி கொண்டே இருக்கும்.
    • 12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமண தடை நீக்குவதற்கான மந்திரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

    திருமணம், குழந்தை பேறு இல்லாத வாழ்க்கை முழுமை பெறாது என பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் சிலருக்கும் பல விதமான காரணங்கள் திருமண தள்ளி கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் பலவிதமான மன வருத்தத்திற்கு ஆளாக நேரிடும். பார்க்க கூடியவர்கள் அனைவரும் ஏன் இன்னும் வரன் அமையவில்லையா என்று கேட்டு மனதை புண்படுத்துவார்கள். இன்னும் சிலர் ஜாதகத்தை பார்ப்பார்கள். ஒவ்வொரு ஜாதக காரரை பார்த்து இதற்கு ஏதும் பரிகாரம் செய்யலாமா அல்லது ஏதும் கோவிலுக்கு செல்லலாமா என்று கேட்பார்கள்.இதற்கு பதிலாக வீட்டிலேயே ஒரு மந்திரத்தை கூறுவதன் மூலம் திருமண வரன் கிடைக்கும். அவை என்ன மந்திரம் என்று இந்த பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். 12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமண தடை நீக்குவதற்கான பரிகாரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

    மேஷம், விருச்சிகம்

    மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் திருமண தடை நீங்க தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

    ரிஷபம், துலாம்

    ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

    மிதுனம், கன்னி

    மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வர திருமண தடை நீங்கும்.

    கடகம், சிம்மம்

    கடகம், சிம்மம் ராசிக்காரர்கள் தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வரவும்.

    தனுசு, மீனம்

    தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் திருமண தடை நீங்க தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

    மகரம்

    தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கும்பம்

    தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    • ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
    • செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டு, அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம். இதனால் பணம் வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.

    சுத்திப்போடுவது, திருஷ்டி கழிப்பது போலவே, காலில் கயிறு கட்டுதலையும், நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்தபடியே வந்திருக்கிறார்கள்.. ஆண்கள் வலது கால்களிலும், பெண்கள் என்றால் இடது காலிலும் இப்படி கயிறு கட்டுவார்கள். இதற்கும் அறிவியல் காரணமும் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு.

    அறிவியல் காரணம்: பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்ற இந்த 3 பொருட்களையும் கயிறு போல திரித்து கையில் அணிந்து கொள்வது பல பலன்களை பெற்றுத்தரும்.. குறிப்பாக, அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டது இந்த 3 பொருட்களுக்கு உண்டு.. அதுபோலவே, நவக்கிரகத்தின் கதிர் வீச்சுகளை, ஈர்க்கும் தன்மை இதுபோன்ற கயிறுகளுக்கும் உண்டு.. காப்புகளுக்கும் உண்டு என்பதால்தான், கைகளில் இவைகளை கட்டுகிறார்கள்..


    அதுமட்டுமல்ல, கருப்பு கயிறு மனதில் நேர்மறை சக்தியை அதிகரிக்கக்கூடியது... இந்த தன்மை , சிவப்பு நிறகயிறுகளுக்கு கிடையாது என்பதாலேயே கருப்பு கலரிலேயே கைகள், மற்றும் கால்களில் கயிறு கட்டுகிறார்கள்.

    உடல்நல கோளாறு: பெரும்பாலும், கருப்பு நிறங்கள், சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது.. இந்த கறுப்பு கயிறு கட்டுவதால் நீண்ட காலமாக குணமடையாத தீராத நோய், உடல் நல கோளாறுகள் போன்றவையும் குணமாகும்.

    நம்முடைய உடலில் பல்வேறு முடிச்சுகள் உள்ளன. இந்த ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் ஒவ்வொரு இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய கணுக்கால் பகுதி. நமது எண்ணங்கள் மற்றும் மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல்பாடும் அமைகின்றன. எனவேதான், கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினாலும் நாடியின் இயக்கம் சீராவதுடன், எண்ணங்களும், மனநிலையும் சரிநேர்க்கோட்டில் அலைபாயாமல் இருக்கும்.

    நிதிநிலைமை: ஜோதிடப்படி, கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவதிலும் நிறைய நன்மைகள் சொல்லப்படுகின்றன. கணுக்காலில் கருப்பு கயிறு கட்டினால் நிதிநிலைமை பலப்படும் என்பார்கள். காரணம், சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களை தான் பற்றுவாராம். ராகு, கேது பாதிப்புகள் ஏற்படாது. கயிறு கட்டும் முன் சனி தேவ மந்திரத்தை 21 முறை ஜபிக்க வேண்டுமாம். அதிலும், பொருளாதார பிரச்சனை இருப்பவர்கள், செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டு, அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம். இதனால் பணம் வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.


    எனவே, சனி கிரகத்தின் தாக்கம் குறைவாக இருப்பதுடன், ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, கருப்பு கலர் என்றாலே, கெட்ட விஷயங்களை தடுக்கும் ஒரு நிறமாக கருதப்பட்டு வருகிறது. எனவே, கருப்பு கயிறுகளை அணிவது எதிர்மறை ஆற்றல் மற்றும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆவிகளை விலக்கி வைக்குமாம். கணுக்காலில் கயிறு கட்டுவது, தடைபட்ட வாழ்க்கையையும் வலுவாக்க உதவுகிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலக்கி பாதுகாப்புத்தன்மையை உணரவைக்கிறது. பெண்கள் காலில், கருப்பு கயிறை கட்டுவதானால் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டிக்கொள்ளலாம். அதிலும், சனிக்கிழமைகளில் கட்டுவது இன்னும் நல்லது. இந்த 9 முடிச்சுகளும் தனித்தனியாக இருப்பது நல்லது.

    ராசிகள்: கருப்பு தவிர வேறு எந்த நிறக்கயிறும் கட்டக்கூடாதாம். கறுப்புக் கயிற்றை கட்டியதுமே, தினமும் ருத்ர காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வரும்போது, இந்த கயிறுகள், அதிக சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்கிறார்கள். தனுசு, துலாம், கும்பம், ராசி போன்றவர்களுக்கு கருப்பு கயிறு மிகவும் நல்லது என்றும், விருச்சிகம், மேஷ ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிறத்தை அணிவது உகந்தது கிடையாது என்றும் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இப்படியே 7 நாட்களுக்கு ஒருமுறை இலையை எரித்துவிட வேண்டும்.
    • நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடியது.

    அதிர்ஷ்டம் அபாரமாக கிடைக்க வேண்டுமானால் அதற்கு பிரியாணி இலை பரிகாரம் மிகவும் கை கொடுப்பதாக நம்பப்படுகிறது.

    குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கவும், பணக்கஷ்டம் நீங்கவும், வேண்டுமானால் சில பரிகாரங்கள் அவசியமாகிறது.. ஆனால் நிறைய பணம் செலவு செய்து, பரிகாரங்களை செய்யும் அளவுக்கு பலருக்கும் முடியாது.

    ஆனால், எளிமையான முறையில் செய்யக்கூடிய பரிகாரங்கள் குறித்தும் முன்னோர்கள் எழுதிவைத்துள்ளனர்.. இந்த பரிகாரங்கள் பெருத்த பலனை தருவதாகவும் நம்பப்படுகிறது. அதில் ஒன்றுதான் பிரியாணி இலை பரிகாரம். சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரியாணி இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. சிறுநீரக கற்களை போக்குவது முதல் உடல் எடை குறைப்பது வரை பிரியாணி இலைகள் உதவியாக உள்ளன.. இந்த இலையின் நறுமணமானது, டென்ஷன், பதற்றத்தை போக்கி மனதுக்கு அமைதி தரக்கூடியது.. நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடியது.


    இந்த பிரியாணி இலைகள் பரிகாரத்துக்கும் உதவி செய்கின்றன. அதாவது, இரவில் தூங்குவதற்கு முன்பு, ஒரேயொரு பிரியாணி இலையை தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு படுத்தால், உங்களை துர்சக்திகள் நெருங்காது, கெட்ட கனவுகளும் வராது

    கடன் தொகை அதிகமாக இருந்தால், பிரியாணி இலையில், கடன் தொகை எவ்வளவு என்பதை எழுதி, உங்களுடைய பீரோவில் வைத்துவிட வேண்டும். ஆனால், பீரோவில் வைத்து அந்த இலையை 7 நாட்கள் கழித்து எடுத்து நெருப்பில் பொசுக்கி, அந்த சாம்பலை நீரிலோ அல்லது காற்றிலோ கரைத்துவிட வேண்டும். மறுபடியும் புதியதாக ஒரு இலையை எடுத்து கடன்தொகை அடைய வேண்டும் என்று எழுதி பீரோவுக்குள் வைக்க வேண்டும். இப்படியே 7 நாட்களுக்கு ஒருமுறை இலையை எரித்துவிட வேண்டும்.

    • ஆசைகளை நிறைவேற்றும் சக்தி கற்பூரத்திற்கு உண்டு.
    • திருமண உறவில் சிக்கல் இருந்தால் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் கற்பூரத்தை எரிக்கவும்.

    வாஸ்து சாஸ்திரத்தின்படி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர பல வழிகள் உள்ளன. வருமானம் பெருக, வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க, வேலை கிடைக்க, பல சுப பலன்கள் கிடைக்க சிறு விசயம் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாஸ்து படி கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது பல பிரச்சனைகளை சமாளிக்கும்.

    இரவில் கிராம்பு வைத்து கற்பூரம் கொளுத்துங்கள். ஆசைகளை நிறைவேற்றும் சக்தி கற்பூரத்திற்கு உண்டு. உங்கள் விருப்பம் நன்றாக இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

    பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, சனிக்கிழமை இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், கிராம்பு மற்றும் கற்பூரத்தை வெள்ளிக் கிண்ணத்தில் எரிக்கவும். இப்படிச் செய்தால் பணப் பற்றாக்குறையைப் போக்கலாம்.


    வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட கற்பூரம், கிராம்பு மற்றும் ஏலக்காய் நன்றாக வேலை செய்கிறது. இவை தீய சக்திகளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கும். கற்பூரம், ஐந்து ஏலக்காய், ஐந்து கிராம்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து எரிக்கவும். முதலில் பூஜையறையில் வைத்து எரித்துவிட்டு அந்த புகையை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் அமைதி உண்டாகும், கண் தோஷம் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் அகற்றப்படும். வீட்டில் இருப்பவர் மீது தீய பார்வை இருந்தால் அது நீங்கும். இவற்றை எரிப்பதன் மூலம் வீட்டில் உள்ள எந்த நோய்வாய்ப்பட்ட நபரின் உடலில் இருந்தும் அந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

    சனிக்கிழமை மாலை வீட்டில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும் அன்பையும் தருகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எதிரிகளிடமிருந்து விடுபடுங்கள். இந்த பரிகாரம் எதிரிகளை விட மேலான கையைப் பெற உதவுகிறது. மேலும் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரித்து வர வீட்டில் உள்ள பிணக்குகள் நீங்கும்.


    சில சமயங்களில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் தொழிலில் வெற்றி பெற முடியாது. இது போன்ற சமயங்களில் கற்பூரத்துடன் இந்த தீர்வை முயற்சிக்கவும். இந்த அணுகுமுறை நீங்கள் விரும்பிய வெற்றியைத் தரும். வேலை நேர்காணலுக்குச் செல்லும்போது கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது நல்லது. மேலும் இரண்டு கிராம்புகளை வாயில் போட்டுவிட்டு வெளியே செல்லவும். நேர்காணலுக்குச் செல்வதற்கு முன் அவற்றை அசைக்கவும். இப்படி செய்தால் வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம். கடுகு எண்ணெயில் இரண்டு கிராம்புகளைப் போட்டு, காலையில் கடவுளுக்கு அருகில் தீபம் ஏற்றவும். அதன் பிறகு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.

    திருமண உறவில் சிக்கல் இருந்தால் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் கற்பூரத்தை எரிக்கவும். அறையின் மூலையில் இரண்டு கற்பூரங்களை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் இரவில் கற்பூரம் மற்றும் கிராம்புகளை எரிப்பதால் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும். ஆறு கற்பூரம் மற்றும் 36 கிராம்புகளை எடுத்து வீட்டில் தூவி உங்கள் திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும்.

    • ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும்.
    • சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.

    கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

    சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

    சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.

    ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும்.
    • செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.

    நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.

    பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது.

    குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும்.

    ஆனால் அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுவதாக கூறப்படுகிறது.

    எனவே, செவ்வாய், முருக கடவுளுக்கு உகந்தது. செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.

    • எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள்.
    • வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை ஈசியாக சமாளித்து விடுவார்கள்.

    குழந்தை பிறப்பது என்பதே ஒரு அற்புதமான நிகழ்வு, ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் என்ன குழந்தை பிறக்கும் என்பதில் அதீத ஆர்வத்தில் இருப்பார்கள். அப்படி குழந்தை பிறந்தவுடன் பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஜாதகம் எழுதுவதற்கும் ராசி நட்சத்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள குழந்தை பிறந்த பின்பு அதை எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது மூலம் அவர்களின் தலையெழுத்து எப்படி இருக்கும் என்பதை கண்டறிய முடியும்.

    அப்படி இருக்க செவ்வாய் கிழமை கிழமைகளில் குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு அந்த குழந்தைக்கு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பயம் அதிகமாக இருக்கும். அப்படி செவ்வாய் கிழமை ஆண் குழந்தை பிறந்தால் பிள்ளைகளின் வாழ்நாள் பற்றிய பலன்களை பார்ப்போம்.

    செவ்வாய் கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகள் மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்தையும் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

    எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள். இவர்களிடம், கற்பனை திறன் அதிகமாக காணப்படும். மேலும் இவர்கள் சிறந்த தலைவர்கள் அல்லது விளையாட்டு துறையில் பணிபுரிபவராக இருப்பார்கள்.

    அவர்கள் எழுத்து, இசை, கலை அல்லது சுய வெளிப்பாட்டின் பிற வடிவங்களில் திறமை பெற்றிருக்கலாம்.

    இந்த கிழமையில் பிறந்தவர்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய காதல் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை ஈசியாக சமாளித்து விடுவார்கள். எவ்வளவு தான் பிரச்சனை வந்தாலும் அவர்களுடைய அன்பின் மூலம் ஜெயித்து விடுவார்கள்.

    செவ்வாய் கிழமை பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் இரத்தம் தொடர்பான பிரச்சனை ஏற்படும். மேலும் வாழ்க்கையில் காயங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் வண்டியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.

    இவர்களிடம் பொறுமை என்பது இருக்காது. இதனால் அவர்கள் செய்ய கூடிய செயல்களை அவசரமாக செய்து விட்டு அதன் பிறகு அதனை பற்றி சிந்திப்பார்கள். இவர்களிடம் கோபம் குணமானது அதிகமாக காணப்படும். இதனால் நிறைய உறவுகளை இழக்க நேரிடும். வெளிப்படையாக மனதில் உள்ள விஷயத்தை மற்றவர்களிடம் பேசுபவர்களாக இருப்பார்கள். இதனால் நிறைய நபர்களிடம் மோதல்கள் ஏற்படும்.

    ×