search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money problem"

    • ராஜபாளையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • பணப்பிரச்சினையில் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் சஞ்சீவி மலையின் பின்புறம் காட்டுப்பகுதி உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை ஆகியவை நட்டு விவசாயம் பார்த்து வரு கின்றனர்.

    இந்த நிலையில் விவசாய பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றவர்கள் நடந்து செல் லும் பகுதியில் அடையா ளம் தெரியாத நிலையில் ஆண் உடல் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    பின்னர் உடனடியாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் எரிந்த நிலையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்ட னர்.

    மேலும் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒருவர் மட்டும் அமர்ந்து மது அருந்தி யது போன்றும், சில் லறை காசுகள் சிதறிக் கிடப்பதையும் பார்த்த போலீசார் மது அருந்திவிட்டு பிணமாக கிடந்த நபர் உட லில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசார ணையை தொடங்கினர்.

    மேலும் அக்கம்பக்கத்தில் யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா அல்லது குடும்ப பிரச்சினை காரண மாக வெளியேறினார்களா என்றும் விசாரணை நடத் தப்பட்டது. அதில் சஞ்சீவி மலை அடிவாரப் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. காலனி சிரஞ்சீவி நகரில் வசித்து வரும் சரவணகுமார் (வயது 48) என்பவர் அதிக மன அழுத்தத்துடன் காலை வீட்டிலிருந்து வெளியேறி யது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்க ளுக்கு தகவல் தெரிவித்து அடையாளம் கூற அழைத்து வந்த நிலையில் இறந்தவர் குறித்த முழு விவரமும் தெரிய வந்தது. தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் சரவணகுமார் என்றும், அவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், சீதாலட்சுமி எனும் கல்லூரியில் படிக்கும் மகளும், விஜய் என்ற மக னும் உள்ளது தெரிய வந் தது.சரவணகுமார் ராஜபா ளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மம்சாபு ரம் விலக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மேற்பார்வையாள ராக பணியாற்றி வரவு, செலவு கணக்குகளை பார்த்து வந்துள்ளார். இதற் கிடையே கடந்த தீபாவளி தினத்தன்று பெட்ரோல் பங்கில் வரவு செலவு கணக் குகளை சரிபார்க்கும் பொழுது கணக்கில் குளறு படி ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை சரவணகுமார் பெட்ரோல் பங்கிற்கு கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக மன அழுத்தத்தில் இருந்த சரவணகுமார் தீபாவளி முடிந்த நாளிலிருந்து பணிக்கு செல்லாமல் பெட் ரோல் பங்கிற்கு கட்ட வேண் டிய தொகையை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

    வேலைக்கு செல்லாதது குறித்து குடும்ப உறுப்பினர் கள் கேள்வி எழுப்பிய போது ரூ.30 ஆயிரம் பணம் தர வேண்டும் என்பதை மட்டும் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் உதவியு டன் ரூ.30 ஆயிரம் பணத்தை பெட்ரோல் பங்க் நிறுவ னத்திலும் கட்டியுள்ளார். மீதம் கட்ட வேண்டிய ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை எப்படி தயார் செய்வது என நண்பர்களிடம் கூறி புலம்பி யுள்ளார்.

    இந்தநிலையில் அதிக மன அழுத்தத்தில் இருந்த சரவணகுமார் நேற்று காலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவி மலை பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

    பணப்பிரச்சினையில் தற் கொலை செய்த கணவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.

    • கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது.
    • அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 32). இவருக்கும் பிரம்மதேசம் அடுத்த பழமுக்கலை சேர்ந்த பாபுவிற்கும் (38) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது. இந்நிலையில் முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்ப ரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.

    அப்போது முரளிதாஸ் ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாபு, முரளிதாசிடம் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளிதாசின் வலது காலில் வெட்டினார். இதனால் பலத்த காயமடைந்த முரளிதாஸ், கீழே விழுந்து கூச்சலிட்டு கதறினார். இதனைப் பார்த்த பாபு, தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார். அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முரளிதாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு முரளிதாசிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்ட காலில் இருந்து ரத்தம் நிற்கவில்லை. இந்நிலையில் முரளி தாஸ் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முரளிதாசை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய பாபு மற்றும் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதகடிப்பட்டில் வட்டிக்கு பணம் வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தந்தை- மகன் தற்கொலை செய்து கொண்டனர்.

    திருபுவனை:

    மதகடிப்பட்டு புது நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர், கடலூர் செல்லும் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி. அவர் 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பவித்ரா (24), சவுந்தர்யா (20) ஆகிய மகள்களும், சவுந்தர் (19) என்ற மகனும் உள்ளனர்.

    இதில், பவித்ராவுக்கு திருமணமாகி விட்டது. ஆனந்தனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சமீப காலமாக குடிப்பழக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் ஓட்டலை சரியாக கவனிக்க வில்லை. மகள் சவுந்தர்யா, மகன் சவுந்தர் ஆகியோர் தான் ஓட்டலை கவனித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஆனந்தன் ஒரு நபரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். ஆனால், அதை சரியாக செலுத்தவில்லை. அவர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்.

    இதனால் தந்தை வாங்கிய கடனை நான் செலுத்துகிறேன் என கூறி சவுந்தர் அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்தி வந்தார்.

    இந்த வி‌ஷயம் ஆனந்தனுக்கு தெரியாது. நேற்று அவரது கவனத்துக்கு தெரிய வந்தது. இதனால் மகன் மீது கோபம் அடைந்தார்.

    கடைக்கு வந்த ஆனந்தன் மகனிடம் எனக்கு தெரியாமல் எப்படி பணம் கொடுக்கலாம்? என தகராறு செய்தார். அங்கிருந்த மரக் கட்டையை எடுத்து அடிக்க போனார். அதை சவுந்தர் பிடுங்கி எறிந்தார்.

    அப்போது ஆனந்தன் கை பிசகி விட்டது. இதில் கடும் கோபம் அடைந்த அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். இந்த சம்பவத்தால் வேதனை அடைந்த சவுந்தர் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது யாருக்கும் தெரியாது.

    சிறிது நேரம் கழித்து ஆனந்தன் ஓட்டலுக்கு வந்தார். மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலைதான் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட வி‌ஷயம் வெளியே தெரியவந்தது.

    இதுபற்றி திருபுவனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ் பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×