search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deeparathana"

    • மாசித் திருவிழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், உருகு சட்ட சேவை நடந்தது.

    பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    காலை 8.30 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார்.

    தொடர்ந்து சுவாமி- அம்பாள்களுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று (புதன்கிழமை) பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    10-ம் திருநாள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம்.
    • திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின்முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் தை அமாவாசை நாளான இன்று அதிகாலை 4 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியா குமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

     அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    தை அமாவாசையை யொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • ராமேஸ்வரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது.
    • கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளாய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.

    காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது.

    மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது.

     தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ராமேசுவரத்திற்கு நள்ளிரவில் இருந்து ஆயிரக்கனக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அமர்ந்து தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்த கடல், கோவில் பகுதிகளை சுற்றிலும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்ட னர்.

    கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்க ளுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தொடங்கி, நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டிங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

     திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    மேலும் கரூர் மாவட்டத் தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

     மதுரையில் வைகை கரையோர பகுதிகள், சோழ வந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மதுரை இம் மையிலும் நன்மை தருவார் கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியாத சுவாமி கோவில், திருமுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தை அமாவாசையை முன்னிட்டு திரளானோர் குவிந்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வனத்துறை யினரின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை வழிபட்டனர்.

    • புனிதநீர் 1008 சங்குகளில் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
    • வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வர சுவாமி திருக்கோவில் மூர்த்தி தளம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தந்த இடம்.

    வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கோவில் திருக்கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி கதவு திறந்த வரலாற்று சிறப்பு பெற்ற இடம் இந்த கோவிலில் கார்த்திகை 2-வது சோம வார்த்தை முன்னிட்டு நேற்று மாலை புனித நீர் அடங்கிய கலசங்கள் மற்றும் 1008 சங்குகள் புனித நீரால் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    வேதாரண்யம் விளக்கு அழகு என்ற பெருமைக்கேற்ப சாமி சன்னதியில் உள்ள தோரண விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது பின்பு வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை உபயதாரர் மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.

    • கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகே ஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

    பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதைப்போல வேதாரண்யம் வேதமிருத ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோ மநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    ஆங்காங்கே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • ஒன்பத்துவேலி வான்மீகிநாதருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ ஆபத்சகேஸ்வரசாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சுவாமிக்கு அன்னா பிஷேகம் நடைபெற்றது.கோவிலின் மூலவரான ஆபத்சகேஸ்வரசாமிக்கு அன்னம் வடித்து அன்னத்தை(சோறு) கொண்டும் பக்தர்கள் வழங்கிய காய்கறிகளை கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

    பூஜைகளு க்கு பிறகு தீபாரதனை காண்பி க்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதே போல திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரசாமி திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ அக்னீஸ்வரசாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி வான்மீகி நாத சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில்களை புனரமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.
    • விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழைமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் புதிய கோபுரம் கட்டி புனரமைக்கவும், இதேபோல் அருகில் உள்ள விநாயகர், முருகன், பெருமாள் ஆகிய கோவில்களை புனரமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்கள் புனரமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து கோவில்க ளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொ ட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    மேலும் நேற்று காலை பிம்பசுத்தி, ரக்ஸாபந்தனம், நாடி சந்தானம் ஆகிய பூஜைகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கலசங்கள் புறப்பட்டு விநாயகர், முருகன், பெருமாள், மாரியம்மன் ஆகிய கோவில்களின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இதனையடுத்து மூலவர் சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குடியநல்லூர், தியாகை, கொங்கராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவி ற்கான ஏற்பாடுகளை அறநி லையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
    • அம்மனுக்கு கலசநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்யில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு சூரியமூர்த்தி சுவாமிகள் கோவில் அமைந்து ள்ளது.

    இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதற்காக கோவில் திருப்பணிகள் நிறைவுற்ற 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனுஞக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி , கோ பூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடை ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    சிவாச்சாரியார் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீசூரியமூர்த்தி சுவாமிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    இக்கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூரில் தேவதுர்கை அம்மன் கோவில் உள்ளது.

    நவராத்திரியை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் புறப்பட்ட பால்குட ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • நவராத்திரி விழா கடந்த 13-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.
    • அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் தேவதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் நவராத்திரி பெருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லலிதா சகஸ்ர பாராயணம் நடைபெற்றது.

    முன்னதாக தேவதுர்க்கை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஒரு லிட்டர் 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டி ஹோமம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.

    • மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் சக்தி தலமான புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடக்க விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அம்மன் படி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புற்றடி மாரியம்மன் சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி பிரகார உலா நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • சண்டியாகம் 23-ந் தேதி, ஊஞ்சல் உற்சவம் 25-ந் தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் பிரசித்திப் பெற்ற தேவ துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா அம்மனுக்கு பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    முன்னதாக பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    அம்மனுக்கு மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீ பாரதனை காண்பிக்க ப்பட்டது.

    நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பால்குட ஊர்வலம் மற்றும் ரதக்காவடி ஊர்வலம் வரும் 22 தேதியும் , மகா சண்டியாகம் 23ஆம் தேதி, ஊஞ்சல் உற்சவம் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

    இவ்விழாவில் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி விஜயேந்திர சுவாமிகள் செய்திருந்தார்.

    ×