என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
- ஒவ்வொரு ஆண்டும் நடராஜருக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
- நடராஜருக்கு மஞ்சள்,பால்,தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவாரூர்:
புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்குகிறது.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி ஆகிய நாட்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நடராஜருக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் நடராஜருக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர்.






