என் மலர்
நீங்கள் தேடியது "தீபாராதணை"
- ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
- முருகப்பெருமானுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இம்மாத புரட்டாசி கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு 4 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு வீதியுலா காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு வசந்த
மண்டபத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மேளதாளத்துடன் வீதியுலாவிற்கு புறப்பாடான முருகப்பெருமானை திரளான பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து முருக பெருமானை வழிபாடு செய்தனர்.






