என் மலர்
உள்ளூர் செய்திகள்

புரட்டாசி 3-வது சனிக்கிழமை; ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக இந்த கோவிலில் உள்ள 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






