search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திங்களூர் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு யாகம்
    X

    திங்களூர் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    திங்களூர் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு யாகம்

    • சந்திராயன்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
    • சந்திரன் தலத்தில் சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து யாகமும் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    அப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திங்களூர் கைலாசநாதர் சுவாமி கோயில் சந்திரன் ஸ்தலத்தில் சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்துயாகமும் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பொது செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், முதன்மை செயலாளர் ஆதி நெடுஞ்செழியன், துணை தலைவர் துரை கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன், மைய்யகுழூ உறுப்பினர் காசிராஜன், ரவிக்குமார், லயன்ஸ் கிளப் பொருளாளர் தண்டபாணி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமை ப்பு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×