search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பம்"

    • குடம் என்தற்குக் கும்பம் என்ற பெயரும் உண்டு.
    • கும்பம் உடைந்த பகுதி கோணாலானதால் கும்பகோணம் என்றாயிற்று.

    குடமூக்கு என்னும் பெயர் இடைக்காலத்தில் தான் கும்பகோணம் என மாறியுள்ளது என்பது அருணகிரியாரின் பாடல் வாயிலாக உணர முடிகிறது.

    குடம் என்தற்குக் கும்பம் என்ற பெயரும் உண்டு.

    கும்பம் உடைந்த பகுதி கோணாலானதால் கும்பகோணம் என்றாயிற்று.

    இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் ஆதிகும்பேஸ்வரர் ஆவார்.

    இவர் உலகத்திற்கு ஆதி காரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியமையால் ஆதிகும்ேபஸ்வரர் என்றும் நிறைந்த சுவை கொண்ட அமுதத்தில் இருந்து உதித்தமையால் அமுதேஸர் என்றும் அழைப்படுகின்றார்.

    இறைவன் வேடுவர் உருக்கொண்டு அமுத கும்பத்தை தம் அம்பினால் எய்தியமையால் கிராதமூர்த்தி என்னும் திருப்பெயரையும் பெற்றார்.

    மகா பிரளயத்திற்குப் பின் படைப்புத் தொழிலினை பிரம்மா தொடங்குவதற்கு இறைவன் இத்தலத்தில் எழுந்தருளிய லிங்கத்துக்குள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

    இதனால் இத்தலம் உயிர்ப்படைப்பின் தொடக்க இடமாததால் படைக்கப்பட்ட படைக்கப்படுகின்ற ஒவ்வொரு மனித உயிர்களும் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தை அடைதல் அவர்களின் பிறவிக் கடமையாகும்.

    எந்த ஒன்றிற்குமே மூலம் தான் சிறப்புடையது.

    உயிர்களின் தோற்ற மூலமான இத்தலம் பிற தலங்களுக்கு எல்லாம் புண்ணியம் நிறைந்த முதன்மைத் தலமானது.

    அது மட்டுமல்லாது புராணப்படி மகா பிரளயத்திற்குப் பின் நிலவுலகில் தோன்றிய முதல் தலமும் இதுவேயாகும்.

    இத்தலத்து அம்பிகை மங்கள நாயகி ஆவாள்.

    இவள் மந்திர பீடேஸ்வரி, மந்திர பீடநலத்தாள், வளர்மங்கை என்றும் போற்றப்படுகின்றாள்.

    தம்மை அன்புடன் தொழுவார்க்கு மங்களம் அருளும் தன்மையால் "மங்களநாயகி" என்றும் சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்கும் மந்திரபீடத்தில் அன்னை விளங்குவதால் மந்திரபீடேஸ்வாி என்றும்,

    தம் திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு மந்திர பீடத்திலிருந்து நலம் அருளுவதால் "மந்திரபீட நலத்தாள்" என்றும் போற்றப்படுகின்றாள்.

    தம் தேவாரப் பதிகத்தில் திருஞான சம்பந்தர் பெருமான், "வளர்மங்கை" என்று அன்னையைப் போற்றுகின்றார்.

    திருச்செங்கோடு தலத்தில் இறைவன் தம் இடபாகத்தை அம்பிகைக்கு அருளியமை போன்று இத்தலத்தில் இறைவன் தம் 36000 கோடி மந்திர சக்திகளையும் அன்னைக்கு வழங்கினார்.

    இதனால் அன்னை இத்தலத்தில் மந்திர பீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

    அம்மனின் உடற்பாகம் பாதநகம், முதற்கொண்டு, உச்சி முடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சி அளிக்கின்றன.

    இவற்றுள் பிற தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே சக்தி வடிவினை மட்டும் கொண்டதாகும்.

    இத்தலத்து அன்னை ஐம்பத்தோரு சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாக உள்ளடக்கியவளாய், சக்தி பீடங்கள் அனைத்திற்கும் பிரதானமானவளாய் விளங்குகிறாள்.

    இத்திருக்கோயிலில் காலையில் முதலில் சூரிய பகவானுக்கும், மாலையில் சந்திரனுக்கும் வழிபாடுகள் நிகழ்கின்றன.

    இத்திருக்கோயிலில் உள்ள 16 தூண் மண்டபம் மிக்க கலையழகுகளுடன் திகழ்கின்றது.

    • இந்நகரில் 100க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கோவில்கள் உள்ளன.
    • தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்களில் மூன்று கும்பகோணத்தில் அமைந்துள்ளது.

    தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்கள் 274ல் காவிரியாற்றின் தென்கரையில் 127 தலங்கள் அமைந்துள்ளன.

    இவற்றில் மூன்று கும்பகோணத்தில் அமைந்து உள்ளன.

    இவை மட்டுமல்லாது இந்நகரை சுற்றிலும் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் பத்துக்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் அமைந்துள்ளன.

    இந்நகரில் 100க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கோவில்கள் இருப்பதால் இந்நகரம் கோவில் நகர் என்றும் போற்றப்படுகின்றது.

    அவற்றில் முதன்மையானது கும்பேஸ்வரர் ஆலயம் ஈசன் தன் கரத்தினால் சிருஷ்டித்த தலம் என்பதால் சிறப்பைப் பெற்றது.

    முதல்வர், வானவர், மன்னவர் என அனைவரும் அவரை பூஜித்திருப்பதால் இத்தலம் மூர்த்தி சிறப்புடையது.

    தேவர்கள், திருமால், பிரம்மா, இந்திரன், தேவ மாதர்கள் என அனைவரும் தீர்த்தமாடிய திருக்குளமாக மகாமகக் குளம் அமைந்து இருப்பதால் இத்தலம் தீர்த்த சிறப்பு பொருந்திய தலமாக விளங்குகிறது.

    பிரளயத்தின் போது அதில் மிதந்து வந்த அமுதக் கலசமான குடத்தை இறைவன் அம்பை செய்து அதன் மூக்கை உடைத்தமையால் குடமூக்கு என்னும் பெயர் இத்தலத்திற்கு உரியதாயிற்று.

    சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் வைணவ ஆழ்வாரான பூதத்தாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடமூக்கு என்றும்,

    பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடந்தை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    இத்தலத்தை மலை தனி வந்து கும்பகோண நகர் வந்த பெருமானே! என்று அருணகிரியார் குறிப்பிடுகின்றார்.

    • அர்த்த ஜாம தரிசனம் மனிதன் வாழ்வில் தெய்வீக பலன்களை தருவதாகும்.
    • இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்

    ஒரு காலம் என்பது, நடராஜருக்காக ஸ்படிகலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து, பிறகு நடராஜர், சிவகாமசுந்தரிக்கு, தீபாராதனை செய்வது வரையிலும் ஆகும். இந்த முழு அமைப்பும் சேர்ந்துதான் ஒரு கால பூஜை எனப்படும். இவை எல்லாம் ஒரு கால பூஜையில் அடங்கும்.

    ஆறு காலங்கள்

    1. காலை சந்தி (முதல் கால பூஜை, காலை 7 மணி)

    2. இரண்டாங்காலம் (காலை 10 மணி)

    3. உச்சி காலம் (மூன்றாம் காலை பகல் 12 மணி)

    4. சாயங்காலம் (சாயரட்சை மாலை 6 மணி)

    5. 8 மணி காலம் (2-ம் காலம் இரவு 8மணி)

    6. அர்த்த ஜாமம் (6-ம் காலம் (இரவு 10 மணி)

    பரமானந்த கூபம்

    நடராஜர் அருள்பாலிக்கும் சிற்றம்பலத்துக்கும் கிழக்கு பாகத்தில் உள்ள பரமானந்த கூபம் என்னும் தீர்த்தமே (கிணறு) எப்போதும் அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஐப்பசி மாத வளர்பிறை நவமி திதியில் கங்கையே இத்தீர்த்தத்திற்க வருகின்றாள். இத்திருக்கோவிலினுள் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தம் பயன்படுத்தப்படுகிறது.

    முதற்காலம் (கால சந்தி)

    காலை 7 மணிக்கு பூஜாக்காரரால் கோபூஜை, கும்பம் வைத்து ஹோமம் செய்து, பஞ்சகவ்யம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து 9 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

    இரண்டாங்காலம் (ரத்தின சபாபதி தரிசனம்)

    காலை 10 மணிக்கு ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் கனக சபையில் செய்து, இச்சமயத்தில் ரத்தின சபாபதிக்கும் பால், தேன், சந்தன அபிஷேகம் செய்து, கற்பூர தீபாராதனைநடைபெறும். மாணிக்க நடராஜர் பின்புறம் தீபாராதனை காண்பிக்கும்போது ஜோதியாயும் (தங்கம் போல் ஜொலிக்கும்) தெரியும். இது மிக முக்கியமான தரிசனமாகும்.

    வாழ்வில் நல்ல பல மாற்றங்களை தந்தருளும். இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்தான் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே. வேறு எந்த கால புஜையிலும் இத்தரிசனம் காண முடியாது. இத்தரிசனம் காலை 10 மணி முதல் 10 மணிக்குள் காணப்பட வேண்டும்.

    உச்சிக்காலம் (மூன்றாம் காலம்)

    ரத்தினசபாபதி தரிசன தீபாராதனை முடிந்ததும், மீண்டும் அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 1 மணிக்குத் தீபாராதனை உடனே நடைசாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

    நான்காம் காலம் (சாயரட்சை)

    மாலை நடை திறந்தவுடன் அபிஷேகம் செய்து 6 மணிக்கு சோடசோபசார தீபாராதனை நடக்கும்.

    ஐந்தாம் காலம் (ரகசிய பூஜை காலம்)

    இரவு 7 மணிக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெறும். இந்த நேரத்தில்தான் அருவமான ரகசியத்திற்கு பூஜை நடைபெறும். கதவுகள் சாத்தப்பட்ட பூஜை செய்பவர். செய்விக்கின்றவர் ஆகிய இருவர் மட்டும் இருந்து பூஜை செய்து நைவேத்தியம் செய்து 8 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

    அர்த்த ஜாமம்

    இரவு 9 மணிக்கு அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 10 மணிக்கு தீபாராதனை செய்து, நடராஜரின் பாதுகையை வெள்ளி, தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து பள்ளியறையில் கொண்டு போய் வைத்து அங்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெற்று, பின்னர் பிரம சண்டிகேஸ்வரர்க்கும், பைவரருக்கும், அர்த்த சாம அழகருக்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெறும். இவையனைத்தும் அர்த்த ஜாமபூஜைகள் ஆகும்.

    பிரபஞ்சங்களில் உள்ள சிவகலைகள் அனைத்தும் இங்கு இருந்துதான் காலை 6 மணிக்கு புறப்பட்டு அங்கு நிகழ்த்தப்படுகின்ற பூஜைகளை ஏற்று இரவு அர்த்த ஜாம பூஜையில் மீண்டும் தில்லை திருக்கோவிலினுள் ஒடுங்குகிறது. அதாவது எல்லா கோவில் தெய்வங்களும் தில்லையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அர்த்த ஜாம பூஜையின்போது தில்லையிலேயே மீண்டும் ஒன்று சேர்ந்து ஐக்கியமாகிறது.

    எனவே அர்த்த ஜாம பூஜை தரிசனம் என்பது அன்று முழுநாள் சிவபூஜை செய்த சிவபுண்ணிய பலனையும், எல்லா கோவில்களின் தெய்வங்களின் அருளாசியையும் பெற்றுத் தருகிறது.

    அர்த்த ஜாம தரிசனம் மனிதனின் வாழ்வில் உன்னத தெய்வீக பலன்களை தருவதில் நிகரற்ற ஒன்றாகும். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் துதித்து வாழ்நாளில் ஒரே ஒருமுறை தில்லை திருக்கோவிலின் அர்த்தஜாம பூஜையை கண்டு தரிசிக்க வேண்டும். அர்த்தஜாம தரிசன பலன்கள் எண்ணிலடங்காதவை. வாழ்வில் எக்குறையும் நேராமல், இல்லாமல் வாழ விரும்புவோர் கண்டிப்பாக அர்த்தஜாம பூஜையை தரிசிக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம்.

    அர்த்தஜாம பூஜையில் வேண்டும் வரங்களை அள்ளித் தருகிறார் ஆடல்வல்லான். பக்தர்கள் வேண்டும் வரங்களை தருமாறு சிவகாமசுந்தரியே சாமி நடராஜரிடம் வேண்டிக் கொள்கிறாள். இங்கு பிரார்த்தனை செய்யுமிடம் பள்ளியறையில் தீபாராதனை நடக்கும் நேரம் ஆகும். அப்போது எல்லா கோவில் தெய்வங்களும் ஒருவித குளிர்ந்த காற்று ரூபத்தில் பள்ளியறைக்குள் செல்வதை பக்தர்கள் உணர முடியும் (பிராணாயாமம், வாசியோகம் செய்வோர் நன்கு உணர முடியும்)

    உதாரணமாக திருமணம் நடக்க வேண்டி திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இதையே தில்லையில் அர்த்தஜாம பூஜையில் பள்ளியறை தீபாராதனை வேளையில் அதே திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரனை தரிசித்த பலனால் திருமண பாக்கியம் கைகூடும்.

    • மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ் பெற்றது.
    • நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

    மணக்குள விநாயகர் ஆலயம் தொடர்பான 25 முக்கிய குறிப்புகள்...

    1. புதுச்சேரி நகரின் பழமையான வரலாற்று சம்பவங்களோடு மணக்குள விநாயகர் பின்னி பிணைந்துள்ளார். எனவே புதுச்சேரி வரலாற்றோடு மணக்குள விநாயகருக்கு முக்கிய பங்கு உண்டு.

    2. புதுச்சேரி நகரின் நம்பர்-ஒன் ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

    3. 1923-ம் ஆண்டு வாக்கில் புதுவையில் `அச்சுகாபி விருத்தினி' என்ற பத்திரிகையை ஒர்லையான்பேட்டையைச் சேர்ந்த வெங்கடாசல நாயக்கர் நடத்தி வந்தார். அந்த பத்திரிகையில் மணக்குள விநாயகர் பற்றி நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டன.

    4. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தையாபிள்ளை 1936-ம் ஆண்டு புதுச்சேரி வந்து மணக்குள விநாயகர் மீது பல பாடல்கள் பாடினார்.

    5. புதுச்சேரியைச் சேர்ந்த பெரியசாமி பிள்ளை, மாணிக்கப்பிள்ளை, ரத்தினப் பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க சுவாமிகள், சாமி பொன்னுப்பிள்ளை, பண்டிதர் சுப்புராய பக்தர், சோம சுந்தரம் பிள்ளை, கந்தசாமி உபாத்தியாயர், ராமானுஜ செட்டியார், பங்காரு பக்தர், நா.வேங்கடாசல நாயக்கர், வரதப்பிள்ளை உள்பட ஏராளமானவர்கள் மணக்குள விநாயகர் மீது பதிகங்களும், பாடல்களும் இயற்றியுள்ளனர்.

    6. மணக்குள விநாயகரை நெசவாளர்கள் எப்படியெல்லாம் போற்றி பாதுகாத்தனர் என்பதை சிவமதி சேகர் தனது புதுவையும் மணக்குள விநாயகரும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    7. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது.

    8. மணக்குள விநாயகர், டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டேனீஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என 5 வெளிநாட்டவர்களின் ஆட்சி முறைகளை கண்டவர் ஆவார்.

    9. புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

    10. கோவில் கொடி மரத்துக்கு 1957-ம் ஆண்டு வடநாட்டு தொழில் அதிபர் ஒருவர் தங்க முலாம் பூசிய தகடு போர்த்தினார்.

    11. நடேச குப்புசாமிபிள்ளை என்பவர் 1909-ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள் முதல் அபிஷேகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அவர் இந்த அபிஷேகத்தை தொடர்ந்து நடத்தினார். 100 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் அவர் மகன் நடேச.கு.அர்த்தநாதன் பிள்ளை இந்த அபிஷேக ஆராதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    12. மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது செங்குந்த மரபினர், ஆரிய வைசிய மரபினர், வேளாளர்கள், பிராமணர்கள், வன்னியர்கள், கவரா நாயுடுகள், விஸ்வகர்ம மரபினர், யாதவர்கள், சேனைத் தலைவர் மரபினர், சான்றோர் குல மரபினர், ரெட்டியார் மரபினர், நாட்டுக்கோட்டை நகரத்தார், வணிக வைசிய மரபினர் என அனைத்து இனத்தவர்களும் சுவாமி வாகன ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    13. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

    14. கருவறையில் உள்ள தொள்ளைக்காது சித்தருக்கு அரூப முறையில் பூஜைகள் செய்யப்படுகிறது.

    15. மணக்குள விநாயகரின் அருள் பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    16. மணக்குள விநாயகருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பழம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யலாம்.

    17. மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ் பெற்றிருந்தாலும் அதன் ராஜகோபுரம் இன்னமும் இரு நிலைகளிலேயே உள்ளது.

    18.மணக்குள விநாயகர் மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே தோன்றி விட்ட போதும், எந்த மன்னரும் பெரிய அளவில் திருப்பணி செய்யவில்லை. மக்களால் மட்டுமே இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    19. கடந்த ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தன்று காலையில் சுமார் 50 ஆயிரம் பேர் மணக்குள விநாயகரை வழிபட்டனர். இது அந்த ஆலய வரலாற்றில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

    20. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

    21. மணக்குள விநாயகர் ஆலய கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

    22. கோவில் உள்ளே இருக்கும் சுதை சிற்பங்களில் ஒன்றில் மயிலில் பறக்கும் முருகருடன் விநாயகரும் இருக்கிறார். இது போன்ற சிற்பம் அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் ஆலயத்திலும் உள்ளது.

    23. மணக்குள விநாயகர் ஆலயம் கானாபத்திய ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

    24. மணக்குள விநாயகரின் உற்சவ மூர்த்திக்கு தயாரிக்கப்பட்டுள்ள தங்க கவசத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும். 5 கிலோ எடையில் 91.66 தரத்தில் ஹால்மார்க் சான்றிதழுடன் இந்த கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    25. இத்தலத்தில் பக்தர்களுக்கு தினமும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    26. கடற்கரையை ஒட்டிய பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோவில் விநாயகரை `புவனேச கணபதி' என்றும் சொல்கிறார்கள்.

    27. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

    28.விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழவகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணா அபிசேகம், 108 கலசாபிசேகம், சங்காபிசேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

    29.உலகில் உள்ள எல்லா விதமான விநாயகர் ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பான அம்சம்.

    30. விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

    31. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தில் பிரம்மாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள். புதுவருடம் பிறக்கும் அந்த நாளில் மணக்குள விநாயகரின் திருமுகத்தை தரிசிக்க அவரின் ஆசியோடு அந்த புது வருடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆவலில் இத்திருத்தலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருக்கிறது.

    32. பிரம்மோற்சவம் ஆவணி 25 நாட்கள் திருவிழாவாக நடக்கிறது.

    33. பவித்திர உற்சவம் 10 நாட்கள் திருவிழா விழாவாக கொண்டாடப்படுகிறது.

    34. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிசேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

    35. வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேஷ அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

    36. சென்னையில் இருந்து 160 கி.மீ. விழுப்புரத்தில் இருந்து 40 கி.மீ கடலூரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் புதுச்சேரி உள்ளது.

    37. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பாண்டிச்சேரி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வசதி உள்ளது.

    38. பாண்டிச்சேரி நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர வசதி உள்ளது.

    39. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.

    40. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்ததி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

    ×