search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "torture"

    • குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், தாடி பத்திரி, சி.பி.ஐ காலனியை சேர்ந்தவர் ராம குறவைய்யா. கடந்த மாதம் 25-ந் தேதி ராம குறவைய்யாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் காயம் அடைந்த நண்பர் இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அமீத்கான் வழக்கு பதிவு செய்து குறவைய்யாவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார்.

    பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தார். இதில் குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து குறவைய்யா அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜனிடம் புகார் செய்தார். மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    விசாரணையில் இன்ஸ்பெக்டர் அமித்கான் என்பவர் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது தெரிய வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பு ராஜன் தெரிவித்தார்.

    • ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து வக்கிரம்
    • கூலித்தொழிலாளி மீது போக்சோ வழக்கு

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுவன் கடந்த 7-ந் தேதி தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வீட்டிற்கு வெளியே சிறுவன் விளையாடி கொண்டருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ராமராஜ் என்பவர் சிறுவனிடம் வந்து நைசாக பேச்சு கொடுத்தார். அவர் சிறுவனிடம் வா நாம் விளையாட போகலாம் என அழைத்தார்.

    சிறுவனும் விளையாட தானே என நினைத்து அவருடன் சென்றார். ராமராஜ் அந்த பகுதியில் உள்ள பள்ளியின் பின்புறம் ஆட்கள் நடமாட்டம் இல் லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து சிறுவ னுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்தார். மேலும் இதனை வெளியில் கூறி னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.இதனால் பயந்து போன சிறுவன் யாரிடமும் இதனை கூறாாமல் இருந்து வந்தான். இந்த நிலையில் சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்படவே அவரது தாயார் விசாரித்தார்.

    அப்போது சிறுவன் தனக்கு நடந்த சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ராமராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது.
    • வாலிபர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 22 வயது பட்டதாரி இளம்பெண். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மேட்டுப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த திருமணமான பிரதீப் (வயது 28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    பிரதீப் இளம்பெண்ணுடன் திருமணமானதை மறைத்து அவருடன் பழகி வந்தார். 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது. இது குறித்து இளம்பெண் கேட்ட போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தார்.

    ஆனால் வாலிபர் இளம்பெண்ணை தினசரி பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். தொல்லை தாங்க முடியாத இளம்பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிரதீப்பை அழைத்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க கூடாது என எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர்.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிரதீப் மீண்டும் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்தார். அவர் இளம்பெண்ணிடம் நீ எனக்கு மட்டும் தான். நான் உன்னை காதலித்து கொண்டே தான் இருப்பேன் என கூறி தகராறு செய்தார். பின்னர் அவர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து இளம்பெண் மீண்டும் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த பிரதீப் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 2 வயது சிறுமி பிரீத்தி உள்ளிட்டவர்களை தெருநாய் துரத்தி கண்டித்துள்ளது.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை நாய் கடித்து தாக்கியதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

    சிங்கை:

    விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பகுதியில் சேக்கிழார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி பிரீத்தி, 6 வயது சிறுவன் மிதில், 13 வயது சிறுவன் சிவசங்கர் ஆகியோரை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் துரத்தி சென்று கண்டித்துள்ளது.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 43), காந்திமதி நாதன் (76), வேலம்மாள் (61) ஆகியோரையும் நாய்கள் கடித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நாய் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை கடித்து தாக்கியதாக அப்பகுதி யினர் புகார் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இது சாலையில் செல்லும் சிறுவர்கள் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரையும் கடித்து வருகிறது. நாய் கடித்து காயமடைந்தவர்கள் எங்கள் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் சிவந்திபுரம் ஊராட்சி இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவே இல்லை. எனவே சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 22). இவர் சிறு வயது முதலே மும்பையில் சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மகாவிஷ்ணு (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட முத்தம்பட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை மகா விஷ்ணு, மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மகேஸ்வரி கர்ப்பம் தரித்தார்.

    இதை அறிந்த மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அங்கிருந்து தப்பி வந்த மகேஸ்வரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மகாவிஷ்ணு அவருடைய தந்தை ரவிச்சந்திரன், தாயார் சிவகாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • யுவராஜாவுக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
    • யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    வள்ளியூர்:

    பழவூர் அருகே யாக்கோபுரத்தைச் சேர்ந்த யுவராஜா (வயது 31) இவருக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சனையாக 30 பவுன் நகை போடுவதாக கூறியுள்ளனர்.

    திருமணத்தின்போது பெண் வீட்டார் 16 பவுன் நகை போட்டதாகவும், மீதி நகையை வாங்கி வர சொல்லி யுவராஜா கொடுமைப்படுத்தியதாக வும், யுவராஜாவின் மனைவி வள்ளியூர் நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு வழக்கு தொடுத்தார். வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி உத்தரவிட்டார்.அதன்படி வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருமங்கலம்,

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எட்டுநாழி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது31). இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2009-ம் ஆண்டு எனக்கும், சோழவந்தானை சேர்ந்த சின்னதுரை மகன் கவியரசு என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 35 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. எனது கணவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    கடந்த சில மாதங்களாக கூடுதல் பணம், நகை கேட்டு கவியரசு துன்புறுத்தி வருகிறார். இதற்கு உடந்தை யாக அவரது தாயார் காளியம்மாள் உள்ளார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப் படையில் ராணுவ வீரர், அவரது தாயார் மீது போலீ சார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

    • தேவகோட்டையில் தொடர்ந்து நடந்து வரும் கொலை-கொள்ளை சம்பவங்களை போலீசார் குற்றவாளிகளை பிடிக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய்-மகள் இறந்து விட்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாட்டார்கள், நகரத்தார்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதற்கு சான்றாக பழங்கால வீடுகள் அரண்மனை போல் காட்சியளித்து வருகிறது.

    கடந்த சில மாதங்களாக தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் பூட்டி கிடக்கும் வீடு களை குறிவைத்து கொள்ளையிலு ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டுக்கு தீ வைத்து சென்று விடுகின்றனர்.

    ஆறாவயல் கிராமத்தில் உள்ள முதல்-அமைச்சரின் உறவினர் வீட்டில் கதவை உடைத்து தங்கம் மற்றும் வைர நகைகள் திருடிய சம்பவம் நடந்தது. மேலும் அடுத்தடுத்த வீடுகளிலும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. கோட்டூர் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 90 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

    தேவகோட்டை நகரில் அண்ணா சாலையில் பேராசிரியர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. அண்ணா சாலை பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உறவினர் வீட்டில் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. அருகில் உள்ள வீடுகளின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டது.

    மனைவியை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றபோது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற்றி விட்டு வந்து பார்த்தபோது வீட்டில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவரங்காடு பகுதி யில் வங்கி பணியாளர் வீட்டில் பகல் நேரத்தில் 48 பவுன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது. மேலும் இடையன்காளி கோவில், முத்து பெரியநாயகி கோவில், இரவுசேரி காளியம்மன் கோவில், கற்படை அய்யனார் கோவில் உள்பட சில கோவில்களில் கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளது. இங்கு கண்காணிப்பு காமிரா இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது மர்மமாக உள்ளது.

    தேவகோட்டை நகரில் வளர்ந்து வரும் பகுதியான ராம் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டது. அவ்வாறு பொருட்கள் இல்லாத ராணுவ வீரர் வீடு உள்பட பல வீடுகளுக்கு கொள்ளையர்கள் தீ வைத்து சென்ற சம்பவம் நடந்தது.இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்க படாமல் உள்ளனர். இதற்கு போலீ சாரின் மெத்தனமே முக்கிய காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்ற னர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் தாய், மகள், பேரன் ஆகியோரை அரிவாளால் வெட்டி வீட்டில் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள் உட்பட 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய்-மகள் இறந்து விட்டனர். பேரன் ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

    இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இனிமேல் இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அதில் குற்றவாளிகளை வருகிற 31-ந்தேதிக்குள் போலீசார் கைது செய்யாவிட்டால் 1-ந்தேதி கிராம மக்கள் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இருந்தபோதிலும் கொலை யாளிகள் இன்னும் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை.

    இது கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    • வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
    • இந்த வாலிபர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி குடும்பத்திற்கு கண்ணீர் மல்க வீடியோ அனுப்பி உள்ளனர்.

    சுவாமிமலை:

    மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐ.டி நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இது போன்ற நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில்வெளி யான தகவலின்அடிப்படை யில் 60-க்கும்மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பி த்தனர்.

    தற்போது வேலைவாங்கி தருவதாக கூறியதை நம்பி சென்ற இந்தியர்கள், தாய்லா ந்து அழைத்து செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்ப ட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்த ராமல் பணத்தை பெற்று க்கொண்டு மோசடி செய்து ள்ளனர். தற்போது தென்கிழக்கு மியான்மரின் கயின்மாகாணம், மியாவடி பகுதியில் அங்குள்ள இந்தியர்கள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.

    இது மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி என்றும், பூர்வகுடியை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கீழக்கோட்டையூர் மேலதெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஹரிஹரன் (21) மற்றும் கும்பகோணம் பாணாதுறை கள்ளர் தெருவை சேர்ந்த கருப்பையன் மகன் விக்னேஷ் (22) ஆகிய 3 பேர் மியான்மரில் சிக்கி தவிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

    இது குறித்து இந்த வாலிபர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி குடும்பத்திற்கு கண்ணீர் மல்க வீடியோ அனுப்பி உள்ளனர். அதில் எங்களை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். இங்கு நடக்கும் கொடுமைகளை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. தினம் தினம் அதிக நேரத்துக்கு வேலை வாங்கி சித்ரவதை செய்கின்றனர். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எங்களை போல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் சித்ரவதைக்கு உள்ளாகி உள்ளனர் என்று குறிப்பிடப்ப ட்டிருந்தது.இந்த வீடியோவை பார்த்த அவர்களது பெற்றோர் உடனடியாக தங்களது பிள்ளைகளை மீட்டு பத்திரமாக கொண்டு வர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து மியான்மர் நாட்டில் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழக வாலிபர்கள் சிக்கி சித்ரவதை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருவதால் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது,

    • சேலம்-கோவை புறவழிச்சாலையில் விலங்கு–களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
    • அப்போது பட்டினி, தண்ணீர் தாகம் ஏற்படுத்தியும், மிக நெருக்கமாவும் துன்புறுத்தியதால், இதையடுத்து அந்த வாகன டிரைவர்கள் மீது வதை தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்–பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் விலங்கு–களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

    அப்போது பட்டினி, தண்ணீர் தாகம் ஏற்படுத்தியும், மிக நெருக்கமாவும் துன்புறுத்தல் செய்து 4 வாகனங்களில் மாடுகள் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அந்த வாகன டிரைவர்கள் மீது வதை தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்–பட்டது. பின்னர் 4 பேரும் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அதில் சேலத்தை சேர்ந்த குமாருக்கு ரூ.2,200, பொள்ளாச்சி சுரேஷ்-க்கு ரூ.3000, தாராபுரம் தண்டபாணிக்கு ரூ.3000, ஒட்டன்சத்திரம் செல்லதுறைக்கு ரூ.2,800 என அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    • கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அல்லிகுண்டத்தை சேர்ந்தவர் மகாராணி (வயது 32). இவருக்கும், குமாரலிங்கபுரத்தை சேர்ந்த டிரைவர் செல்லக்காளை என்பவருக்கும் 2019-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தந்தை வீட்டு வந்து விட்டார்.

    இந்த நிலையில் மகா ராணி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும், செல்ல க்காளைக்கு திருமணம் நடந்தபோது 23 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடு க்கப்பட்டன.

    இந்த நிலையில் பணம் கேட்டு அடிக்கடி கணவர் தொந்தரவு செய்து வந்தார். இதன் காரணமாக தந்தையிடம் இருந்து ரூ.80 ஆயிரம் வாங்கி கொடுத்தேன். ஆனால் மீண்டும் பணம் கேட்டு துன்புறுத்துகின்றனர்.

    இதற்கு உடந்தையாக கணவரின் பெற்றோர் செல்வராஜ்-லிங்க ம்மாள், சகோதரர் சுந்தரபாண்டி, அவரது மனைவி ஆனந்தவல்லி ஆகியோர் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடி ப்படையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செல்லக்காளை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறிப்பிட்ட ஜாதி பற்றி எழுதிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
    • அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அருணாச்சலம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதை வாழ்த்தி பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வாழ்த்தி கவிதை எழுதியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை.

    ஆனால் தமிழகத்தின் ஒரு ஜாதியை ஒப்பிட்டு எழுதி உள்ளார்.

    இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×