search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்கொடுமை"

    • காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
    • மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்டன.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகளிடமிருந்து 31 மனுக்களும்என மொத்தம் 546 மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப் பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்ட லம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்கி 1 கிலோ மீட்டர் முட்டி போட்டுக் கொண்டு12.36 நிமிடத்தில் 2 கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து, வேல்ட் புக் ஆப்ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனை விருது வழங்கியதை தொடர்ந்து, மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    சின்னசேலம் வட்டம் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா 14.9.2021 அன்று ஆதிதிராவிடர் அல்லாத பிற இனத்தவரால் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டு இறந்ததை தொடர்ந்து, அவருடைய மனை விபிரியா வுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995 திருத்தவிதிகள் 2016 பிரிவு 46(1)ன் கீழ் மேல்வாழப்பாடி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளி யில் காலியாக உள்ள சமை யலர் பணிக்கான ஆணை யினையும், மாற்றுத்திற னாளிநலத்துறை சார்பில் செவித்திறன் குறை யுடை யோருக்கு காதொலி கருவி 3 ேபர்களுக்கு தலா ரூ.4ஆயிரம் மதிப்பீட்டிலும் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) விஜயராக வன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணைகலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை கேட்டு சிலா் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனா்.
    • பட்டியலின பெண் சமைக்கும் உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூரில் அரசுப் பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட விடாமல் தடுத்தவா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதில், பட்டியலினத்தைச் சோ்ந்த பெண் உணவு சமைத்ததால், அதனை சாப்பிட விடாமல் தடுத்து குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை கேட்டு சிலா் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனா்.

    பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக அவா் சத்துணவு சமைக்கக் கூடாது என்றும், அவா் சமைக்கும் உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றும் சிலா் பிரச்சினைகள் செய்வது ஏற்புடையதல்ல.

    எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உணவை சாப்பிட விடாமல் தடுத்தவா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இதுதான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேள்வி.
    • வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்தனர்.

    மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என அவர் கூறியுள்ளார்.

    மேலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் டேக் செய்துள்ள அவர், "இது தான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? இதை காட்டு தர்பார் என்று அழைக்கவேண்டும். ஏன் பாஜக தலைவரை கைது செய்யவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதேபோல் பிரவேஷ் சுக்லா பாஜக எம்எல்ஏக்களுடன் இருந்த புகைப்படங்களை மற்றொரு டுவிட்டர் பதிவில் ஷேர் செய்திருந்தார்.

    டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பால்யனும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை டேக் செய்து இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

    வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்ததுடன், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    வீடியோ வைரலாக பரவிய நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதலமைச்சர் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • முதுமை காலத்தில் ஆண்களைவிட பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
    • உடல்ரீதியான வன்முறை 52 சதவீதமும், வார்த்தை வன்முறை 51 சதவீதமும் நிகழ்த்தப்படுகிறது.

    சென்னை:

    உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு "ஹெல்பேஜ் இந்தியா" தயாரித்த 'பெண்கள் மற்றும் முதுமை: அறியாமையா அல்லது அதிகாரமா' என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

    அப்போது வெளி அறிக்கையில் வெளியிடப்பட்ட குறிப்பிட்டுள்ளதாவது:-

    இந்தியாவில் பாலின விகிதம் 948/1000. ஆனால், முதியோருக்கான பாலின விகிதம் 1065/1000. இதன்மூலம் முதுமைப்பருவத்தில் பெண்களே அதிகம் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    முதுமை காலத்தில் ஆண்களைவிட பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர்.

    இந்திய மக்கள் தொகை 2021-ன் படி பெண்கள் 66 கோடிபேர் உள்ளனர். இதில் வயதான பெண்கள் 7 கோடி பேர் உள்ளனர். 2031-ல் மக்கள் தொகையில் 72 கோடி பெண்கள் இருப்பார்கள். இதில் வயதான பெண்கள் 10 கோடிக்கும் மேல் இருக்க வாய்ப்புள்ளது.

    54 சதவீத பெண்கள் இன்றளவும் கல்வியறிவில்லாமல் உள்ளனர். 75 சதவீதப் பெண்கள் எந்த சேமிப்பும் இல்லாமலும், 66 சதவீதப் பெண்கள் எவ்வித சொத்துகளும் இல்லாமல் பொருளாதார ரீதியாக பிறரை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர்.

    தமிழகத்தைப் பொருத்தவரை வயதான பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. உடல்ரீதியான வன்முறை 52 சதவீதமும், வார்த்தை வன்முறை 51 சதவீதமும் நிகழ்த்தப்படுகிறது. இது போன்ற வன்முறைகளை பாதிக்கப்பட்டவரின் மகன் 33 சதவீதமும், உறவினர்கள் 33 சதவீதமும், 12 சதவீதம் மருமகள்களும் நிகழ்த்துகிறார்கள்.

    பாதிக்கப்பட்ட வயதான பெண்களில் 20 சதவீதம் பேர் தங்களுக்கான சட்டங்கள் மற்றும் குறைதீர் மையங்கள் குறித்த விழிப்புணர்வின்றி காணப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.விமலா வெளியிட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை போலீஸ் கமிஷனர் பெற்றுக் கொண்டார்.

    • பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது இதன் நோக்கம்.
    • பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ஆணையர் பிரதான் பாபு தலைமையில், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பெண் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது, பாலின சமத்துவத்தை உறுதிபடுத்துவது, பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது என பெண்களுக்கான கோட்பாடுகளை நிலைநாட்டவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்வதே பிரசாரத்தின் நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சிற்றரசு, கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், கவுன்சிலர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நடத்தப்பட்டு வருகிறது.
    • பள்ளி தலைமை ஆசிரியர் தேவகிருபா, ஊராட்சி செயலர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் : 

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிரான பாலின சமத்துவத்தை வளர்ப்போம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் ஆகிய கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    பேரணியில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்திகோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் தேவகிருபா, ஊராட்சி செயலர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில்தஞ்சாவூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சின்ன கடை தெரு மாணவ-மாணவிகளை தஞ்சாவூர் ரெயில் நிலையம் அழைத்து வந்து ரெயில் நிலையங்களை சுற்றி காண்பித்தனர்.
    • விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு தொடர்பான சர்வதேச தின விழா நடைபெற்றது.

    இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சப்இ ன்ஸ்பெக்டர்கள் செந்தி ல்வேலன், ராமநாதன் , ரெயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் விஜயகுமார், தனிபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் ஜோதிலட்சுமி, கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சின்ன கடை தெரு மாணவ-மாணவிகளை தஞ்சாவூர் ரெயில் நிலையம் அழைத்து வந்து ரெயில் நிலையங்களை சுற்றி காண்பித்தனர்.

    பின்னர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு ‌அவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

    இதையடுத்து அனைவருக்கும் திருக்குறள் புத்தகம், பரிசு வழங்கப்பட்டது.

    • போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.
    • இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கினர்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி காவல் நிலையம் சாா்பில் உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக திட்டச்சேரி காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிரு ஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.

    இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன், பள்ளியின் ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது
    • கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வாய்பேச முடியாத பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஆண்டிமடம் அடுத்த சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் செந்தில்(வயது 43). இவர், அதே பகுதியைச் சேர்ந்த வாய்பேச முடியாத 32 வயது பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இதேபோல் தொடர்ந்து அவர், மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதால், பெண் கர்ப்பமடைந்தார். இது குறித்து அப்பெண்ணின் உறவினர், ெஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், செந்திலை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி செந்திலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபாரதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.

    • குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி?

    மதுக்கூர்:

    மதுக்கூர் சிவக்கொல்லையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு பற்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமுதா துரை.செந்தில் தலைமை வகித்தார்.

    மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ராஜூ, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வேந்திரன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், கொத்தடிமை தொழிலாளர், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி? என்று அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

    மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமையை தடுப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வும் நடைபெற்றது. முடிவில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னப்பா நன்றி கூறினார்.

    இதில் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதி, சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
    • முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ரோஜாவனம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் இல்ல இயக்குனர் அருள் ஜோதி தலைமையில், மேலாளர் கோபி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதியோர்களுக்கு இனிப்பு, கதர் ஆடை வழங்கி பேசினார். முதியோர் பராமரிப்பில் சிறப்பாக சேவை செய்யும் சேவையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    நாகர்கோவில், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, குற்றாலம், சென்னை மற்றும் புதுடில்லி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜாவனம் முதியோர் இல்லம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வந்து முதியோர்கள் பயன் பெறலாம் என ரோஜாவனம் இயக்குனர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரோஜாவனம் செவிலியர் கல்லூரி முதல்வர் புனிதா டேனியல், மருத்துவர் ஸ்டீவ் வாழ்த்துரை வழங்கினர். ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    முன்னதாக செவிலியர் கல்லூரி ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்று பேசினார். நிறைவாக முதியோர் இல்ல ஆலோசகர் சுசீலா நன்றி கூறினார்.மேலாளர் சாமுவேல் ராஜன், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் சிபியா, செல்லம்மாள், பிரியா, மற்றும் மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குறிப்பிட்ட ஜாதி பற்றி எழுதிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
    • அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அருணாச்சலம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதை வாழ்த்தி பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வாழ்த்தி கவிதை எழுதியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை.

    ஆனால் தமிழகத்தின் ஒரு ஜாதியை ஒப்பிட்டு எழுதி உள்ளார்.

    இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×