search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup"

    • 20 அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றன.
    • ஜூன் 2-ந்தேதி தொடங்கி ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. ஜூன் 2-ந்தேதி தொடங்கி ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    20 அணிகள் பங்கேற்கும் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. பங்கேற்கும் நாடுகள் தங்களுடைய அணிகளை அறிவித்து வருகின்றன.

     

    இந்த நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான "anthem" இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவுட் ஆஃப் திஸ் வேர்ல்டு (Out Of This World) என்ற தலைப்பில் சீன் பால் மற்றும் கெஸ் பாடியுள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் என்றாலே கடற்கரைதான். கடற்கரையில்தான் எதிர்கால வீரர்களாக வரவிருக்கும் சிறுவர்கள் விளையாடுவார்கள். அந்த காட்சிகள் இதில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணியின் விராட் கோலி அடிக்கும் ஷாட், கிறிஸ் கெய்லின் நடனம் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.

    இந்த anthem 3.09 நிமிடமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    • டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்தது.
    • டெத் ஓவரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்வார்.

    புதுடெல்லி:

    ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நடராஜன் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    பந்துவீச்சில் இடம் பெற்றுள்ள அர்ஷதீப் சிங் அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக நடராஜனை தேர்வு செய்திருக்கலாம் என தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டியில் அவர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 15 பேர் கொண்ட அணியில் உறுதியாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
    • ரிசர்வ் வீரர்கள் நான்கு பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தனது மகனுக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ரிங்கு சிங் தந்தை கூறியதாவது:-

    ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என முழுமையாக நம்பியிருந்தோம். ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சம்பவத்தை கொண்டாட எங்கள் குடும்பத்தினர் ஸ்வீட்ஸ் மற்றும் பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தோம். ஆனால், ரிங்கு சிங் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில்தான் இடம் பிடித்துள்ளார்.

    ரிங்கு சிங் அவரது அம்மாவிடம் போனில் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை எனத் தெரிவித்தார். அப்போது அவர் மனம் உடைந்துவிட்டார்.

    இவ்வாறு ரிங்கு சிங் தந்தை தெரிவித்துள்ளார்.

    கடந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பின் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் ஐந்து சிக்சர்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.

    இதனால் இந்திய அணியில் இடம் பிடித்தார். குறிப்பாக டி20 அணியில் அதிரடியாக விளைாயடி முத்திரை படைத்தார். இதனால் நீண்ட காலம் டி20 இந்திய அணியில் விளையாடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிங்கு சிங் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    • நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார்.
    • அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியில் இருப்பார்கள் என்று கருதப்பட்ட சில வீரர்கள், சரியாக விளையாடாத காரணத்தினால் கழற்றி விடப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. அதேவேளையில் அனுபவம் வாய்ந்த சில வீரர்கள் சரியாக விளையாடாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடிக்கு தகுதியானவர் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார். ஐபிஎல் போட்டியில் இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 19.38 ஆகும். ஸ்டிரைக் ரேட் 12.92. ஆனால் ஓவருக்கு 9 ரன் என சற்று கூடுதலாக ரன் கொடுத்துள்ளார். அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார். நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும்.

    அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் நான் அவர் குறித்து அதிகமாக நினைக்கிறேன். அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசுகிறார்" என்றார்.

    • பி.சி.சி.ஐ. 15 பேர் கொண்ட இந்திய டி20 அணியை அறிவித்துள்ளது
    • டெத் ஓவர்களில் நடராஜன், துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்ததை பார்த்து ரசித்துள்ளேன்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை ஏன் இப்போட்டியில் சேர்க்க வில்லை, தற்போது தேர்வுசெய்யப்பட்ட பவுலர்களை விடவா நடராஜன் மோசமாக பந்து வீசியுள்ளார் என்ற ஆதங்கம் குறித்து இணைய தளத்தில் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணியில் நடராஜன் தேர்வு செய்யப்படாதது குறித்து பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "இந்திய அணி அறிவிப்பின்போது எப்போதும் உற்சாகமாக இருக்கும். ஆனால், தமிழ் பெயர்கள் இல்லாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. டெத் ஓவர்களில் நடராஜன், துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்ததை பார்த்து ரசித்துள்ளேன்.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் அவர்களின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையிலும் இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லை.
    • தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அப்படி இடம் கிடைத்தாலும் நிரந்தரமாக அணியில் விளையாடமாட்டார்.

    முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்போது அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும். ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு சலிப்பு தட்டி உள்ளூர், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

    உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியமான தொடருக்கான வீரர்கள் தேர்வின்போது, சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என குரல் வலுக்கும். ஆனால், பிசிசிஐ கண்டு கொள்வதில்லை. அதனைத் தொடர்ந்து விமர்சனங்கள் கிளம்பும். ஓரிரு நாட்களில் அது அடங்கி போகும்.

    தற்போது ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி வருகிறார். அவர் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் 385 ரன்கள் விளாசியுள்ளார்.

    விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில்தான் நேற்று பிசிசிஐ டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது.

    இதில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் இருந்திருந்தால் பிசிசிஐ கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கும்.

    நேற்று அறிவிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனது பெயர் இடம் பிடித்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இது வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிசிசிஐ பலமுறை நிராகரித்த போதிலும், பொறுமை காத்து தனது திறமையை வெளிப்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

    15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். ரிஷப் பண்ட் ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை என்றால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    29 வயதாகும் சஞ்சு சாம்சன் 2015-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். இந்த 9 வருடத்தில் 25 போட்டிகளில் விளையாடி 1 அரைசதத்துடன் 374 ரன்கள் அடித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பாண்டியா நியமனம்.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக நேற்று அறிவித்தது.

    இதில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மாவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    மேலும், சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கேப்டனாக இல்லாவிட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்ட முதல் ஆளாக ரோகித் சர்மா இருந்திருப்பார் என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிட்னி:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என் ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

    நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல்லில் அதிரடி காட்டி வரும் மெக்கர்க் ஆகியோருக்கு இடமில்லை.

    ஆஸ்திரேலியா அணி விவரம்:

    ஆஷ்டன் ஆகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லீஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    காபூல்:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என் ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

    நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்களான முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான அணி விவரம்:

    ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), ஹஷ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி, பரீட் அகமது மாலிக்.

    ரிசர்வ் வீரர்கள்; செடிக் அடல், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஜாய், சலீம் சபி.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜாஸ் பட்லர் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

    இவருடன் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பில் சால்ட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர் டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

     


    2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி:

    ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், க்ரிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் மார்க் வுட்

    உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 22 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஜூன் 4 ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

    • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    • இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

     

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதையொட்டி பல இளம் வீரர்கள் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குவர் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. தற்போது இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்திய அணியில் இடம்பிடிக்காத வீரர்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     


    விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கே.எல். ராகுலுக்கு இந்திய டி20 அணியில் இடம்கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்ததால் இந்திய அணிக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு இடமில்லை.

    இதே போன்று ஐ.பி.எல். தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் திலக் வர்மா, ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கிய இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த மயங்க் யாதவுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இதே போன்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இன்னும் காயத்தில் இருந்து மீளாத காரணத்தால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

    • இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டன்.
    • விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

    அந்த வரிசையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக அறிவித்து இருக்கிறது. 




    அதன்படி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

    இவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் தவிர சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 



    ×