search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public demand"

    • ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.
    • அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.

    தென்திருப்பேரை சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது, குட்டக்கரை, மேலக்கடம்பா, மற்றும் கடம்பாவின் கடைமடை ஊரான கல்லாம் பாறை போன்ற கிராமங்கள் மற்றும் கடயனோடை, கேம்பலாபாத் பகுதிகளுக்கு தொடர்ந்து 3 முதல் 4 நாட்களாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இப்பகுதியில் ஏராளமான கால்நடை கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்தது. மேலும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.

    ராஜபதி, குருகாட்டூர், சிவசுப்பிரமணியபுரம், குட்டி தோட்டம், மணத்தி, கார விளை, சோழியக்குறிச்சி, சேதுக்குவாய்தான், சொக்கப் பழக்கரை போன்ற கிராமங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

    இக்கிராம சாலைகள் அனைத்தும் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டல், ஆவரங்காடு, மாங்கொட்டாபுரம், வரதராஜபுரம், கட்டையம் புதூர், சிவராம மங்கலம், மங்க ளக்குறிச்சி, பெருங்குளம் ஏழு ஊர் கிராமம், ஏரல், ஆறுமுகமங்கலம், சம்படி, புள்ளா வெளி போன்ற ஊர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    • பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.
    • பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து செட்டியாபத்து, மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், பாளையங்கோட்டை வழியாக நெல்லை செல்லும் போக்குவரத்து பாதை மிகவும் முக்கியமான போக்குவரத்து நிறைந்த பாதையாகும்.

    இந்தப் பாதையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளது. உடன்குடியில் இருந்து தினசரி 20 முறை நெல்லைக்கு பஸ் சென்றது. தற்போது ஏற்பட்டு கனமழை காரணமாக செட்டியாபத்து, லட்சுமிபுரம், மருதூர் கரை, நாசரேத் மற்றும் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்னும் வெள்ளம் வடியவில்லை.

    பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி- நெல்லை இடையே போக்குவரத்து இன்று 10-வது நாளாக தொடங்கவில்லை.

    இந்த வழித்தடத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வந்து செல்வார்கள். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.

    இந்தப் பாதையை உடனடியாக சரி செய்து உடன்குடி -நெல்லைக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • போக்குவரத்துக்கு இடையூறு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அண்ணாசாலை, கிருபானந்தவாரியார் சாலை,நேதாஜி மார்க்கெட், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வேலூர் பழைய பஸ்நிலையம், கிரீன்சர்க்கிள், காட்பாடி உட்பட பல இடங்களில் சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகிறது.

    இந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டாலும் தொடர்ந்து சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சத்துவாச்சாரி மேம்பாலம் அருகே சாலையில் மாடுகள் கூட்டமாக போக்கு வரத்திற்கு இடையூறாக சுற்றி திரிகிறது.

    இதனால் அவ்வழியாக சென்ற பஸ், கார், பைக் போன்ற வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

    காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த பகுதிகளில் மாடுகள் சுற்றுகின்றன.

    இவ்வாறு கூட்டமாக மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

    சாலையில் நிற்கும் மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதாலும், சாலைகளில் ஓடுவதாலும் பைக்கில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்க கூடிய நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன.

    இந்த பகுதி வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் திடீரென மாடுகளின் ஓட்டத்தால் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இதிலும் சில மாடுகள் திடீரென சாலைகளில் நடந்து செல்வோர் மீது முட்ட வருவதால் பொதுமக்கள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையையும், மாடுகளையும் கடந்து செல்கின்றனர்.

    எனவே சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றியும் திரியும் மாடுகளை பிடித்து நிரந்த தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோடைமழையின் போது கட்டிடத்தில் உட்புற கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கட்டிடம் ஆங்காங்கே உடைப்பும், வெடிப்புமாக காணப்பட்டது.
    • இதனால் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகம் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி தேரியூரில் செட்டியாபத்து கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. 6 மாதங்களுக்கு முன் பெய்த கோடைமழையின் போது இந்த கட்டிடத்தில் உட்புற கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கட்டிடம் ஆங்காங்கே உடைப்பும், வெடிப்புமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கட்டிடம் மக்கள் பயன்பாடுக்கு உகந்ததாக இல்லை என கூறி அதனை நிரந்தரமாக பூட்டி விட்டு, அந்த கட்டிடத்தின் பின்புறம் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகத்தை இடம் மாற்றி அமைக்கப்பட்டது.

    இ-சேவை மையம் அலுவலகம் சிறியதாக இருப்பதால் அதில் 2 அலுவலகம் உள்ளே செயல்பட முடிய வில்லை எனவும், அதனால் கிராம நிர்வாக அலுவலகத்தை புதுப்பித்து கட்டி அதனை பொது மக்கள் செயல்பாடுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது
    • செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது. மேலும் இந்த பூங்காவிற்குள் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் அந்த பகுதியில் புதர்கள் நிறைந்து மண்டிக்கிடக்கிறது. இதனால் பூங்காவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும், அவைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.
    • பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தடபெரும்பாக்கம் கிருஷ்ணாபுரம், திருவாயர்பாடி, உள்ளிட்ட முக்கிய இடங்களில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.

    இதனால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் குற்ற செயல்களும் குறைந்து இருந்தன. இந்நிலையில் இந்த கண்காணிப்பு காமிராக்களில் பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    எனவே கண்காணிப்பு காமிராக்களை சீரமைத்து குற்றச்செயல்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
    • பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ மாண விகள் படித்து வருகிறார்கள்.

    பெரும்பாலும் இவர்கள் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் இருந்து மானாம்பதி, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.

    இதனால் பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் ெரயில்வே நிலையம் மாவட்டத்தில் மிக முக்கிய மான ெரயில்வே சந்திப்பு நிலையம் ஆகும். அருகில் இருக்கும் நெய்வேலி, பெண்ணாடம், வேப்பூர், திட்டக்குடி, தொழுதூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விருத்தாசலம் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் விழுப்புரம் -திருச்சி இடையே கார்டு லைனில் ஓடும் அனைத்து ெரயில்களும் நின்று செல்லும் முக்கியமான நிலையமாக விருத்தாசலம் உள்ளது.சென்னை -மதுரை இடையே ஓடும் தேஜஸ் விரைவு ெரயிலை தவிர அனைத்து விரைவு மற்றும் அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி- சென்னை இடையே புதிய வந்தே பாரத் ெரயிலை தொடங்கி வைத்தார். இந்த ெரயிலின் கால அட்டவணையில் விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வண்டி நிற்காது என்ற அறிவிப்பு விருத்தாசலம் பயணிகளி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடலூர் மற்றும் அருகில் இருக்கும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள எந்த நிலையத்திலும் நிற்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் -திருச்சி இடையே உள்ள சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த நிலையத்திலும் நிற்காது என்ற அறிவிப்பும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே அமைச்சர், இந்திய ெரயி ல்வே, தென்னக ெரயில்வே மற்றும் ெரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு விருத்தாச்ச லம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
    • இதேபோல் பேருந்து நிலைய மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    இந்த பழைய பேருந்து நிலையம் சுமார் 20 வருடத்திற்கும் முன் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை பயணிகள் பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், சின்னாலம்பாடி பகுதி சேர்ந்த சரசு இவரது மகள் குமாரி மற்றும் 5 மாத குழந்தை புவனேஷ். மற்றும் அவரது உறவுக்கார பெண்ணான சுபத்ரா மற்றும் 9 மாத கைக்குழந்தை தர்ஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பொன்னேரி பகுதியில் உடல்நிலை சரியில்லாத காரணத்திற்க்காக தாயத்து கட்டிக்கொண்டு மீண்டும் திருவள்ளூர் பேருந்தும் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது அங்கு இருக்கும் சிமெண்ட் இருக்கையில் இருந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக அமர்ந்த போது பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து சரசு, குமாரி. சுபத்திரா ஆகியோர் மீது விழுந்துள்ளது இதில் சரசு கையில் லேசான காயம் ஏற்பட்டது. குழந்தைகள் புவனேஷ் மற்றும் தக்சன் ஆகியோர் கண்களில் சிமெண்ட் கற்கள் சிதறி விழுந்தன. இதனால் கண் எரிச்சலால் குழந்தைகள் அலறி துடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.

    மேலும் இதேபோல் பேருந்து நிலைய மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு ள்ளது. இந்த விரிசல் ஏற்பட்ட பகுதியில் இருந்து எந்த நேரத்தி லும் மேற்கூரை பெயர்ந்து விழலாம் என்ற அச்சத்தில் பயணிகள் உறைந்துள்ளனர். எனவே உடனடியாக திருவள்ளூர் நகராட்சியினர் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சீமை கருவேல மரங்களை அகற்றினர்
    • கரைகளை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெல்வாய் ஊராட்சியில் உள்ள ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த ஏரியில் சீமைக் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் தண்ணீரை ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் உறிஞ்சு விடுகிறது.

    இதனால் ஏரி நிரம்பிய சில மாதங்களிலேயே தண்ணீர் வற்றிபோகிறது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் வேலூர் எக்ஸோனாரா இன்ட ர்னேஷனல் தொண்டு நிறுவனம் தானாக முன்வந்து, நெல்வாய் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி ஏரியை தூர்வார அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர். அதன்படி தொண்டு நிறுவனத்துக்கு ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்கினார்.

    அதன்படி ஏரியில் உள்ள சீமை கருவள மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கருவேல மரங்கள் முழுவதாக அகற்றி, ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது கணியம்பாடி ஒன்றியகுழு தலைவர் திவ்யாக மல்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, தாசில்தார் செந்தில், உடன் இருந்தனர்.

    • பாவூர்சத்திரம் ரெயில் நிலைய நடை மேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவிற்கு நீட்டிக்க வேண்டும்.
    • பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் தனியாக முன்பதிவு அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.

    தென்காசி:

    ரெயில்வே ஆய்விற்காக பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் வந்த மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அனந்த்திடம் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாவூர்சத்திரம் ரெயில் நிலைய நடை மேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவிற்கு நீட்டிக்க வேண்டும். நடைமேடை ஒன்றில் கூடுதலாக சிறிய மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும்.

    நடைமேடையில் உள்ள பாவூர்சத்திரம் பெயர் பலகைகள் புதுப்பிக்கப்பட வேண்டும், பாவூர்சத்திரம் ரெயில் நிலைய வாசலில் மரங்கள் அடர்த்தியாக உள்ள பகுதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

    ஈரோடு- நெல்லை ரெயிலை அம்பை ,பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும். நெல்லையில் காலியாக நிற்கும் பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை கொண்டு, பாவூர்சத்திரம் வழியாக நெல்லை-பெங்களூருக்கு இயக்க வேண்டும். பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் தனியாக முன்பதிவு அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தின் வடபகுதியில் அமைந்துள்ள காலியிடங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையிலும், குழந்தைகள் விளையாடும் வகையில் பூங்காக்கள் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டிய ராஜா, ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன் மற்றும் பாவூர்சத்திரம் பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர்.
    • கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் இல்லத்தரசிகள் அனைவரும் என்ன செய்வதென ெதரியாமல் திண்டாடி வந்தனர். இதனையடுத்து தக்காளி விலை உயர்வை தொடர்ந்து பழங்கள், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர். தக்காளி விலையை கட்டுப்படுத்த கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது. கடலூரில் மாவட்டத்தில் இன்று காய்கறிகளின் விலைபட்டியல் வருமாறு:-

    மிளகாய் ரூ. 80, வெங்காயம் ரூ. 24, தக்காளி ரூ. 88, உருளை ரூ.20, பல்லாரி ரூ.26, சின்ன வெங்காயம் ரூ. 90, கேரட் ரூ. 46, பீன்ஸ் ரூ. 95, கோஸ் ரூ.20, சவுசவ் ரூ.26, பீட்ரூட் ரூ. 35, இஞ்சி ரூ.255, முள்ளங்கி ரூ. 22, கத்தரிக்காய் ரூ.50, வெண்டை ரூ.30, கோஸ் ரூ.20, குடைமிளகாய் ரூ.65, பஜ்ஜிமிளகாய் ரூ.60, காளிபிளவர் ரூ. 30, நூக்கோல் ரூ. 80, அவரைக்காய் ரூ.40, மாங்காய் ரூ.22, கருணைகிழங்கு ரூ.50, முருங்கை ரூ. 35, சேம்பு ரூ. 45, பிடிகருணை ரூ. 40, பாகற்காய் ரூ. 50, புடலை ரூ. 20, சுரக்காய் ரூ. 20, சுவிட்கான் ரூ. 22.

    ×