search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றச்செயல்களை தடுக்க பழுதடைந்த கண்காணிப்பு கேமிராக்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    குற்றச்செயல்களை தடுக்க பழுதடைந்த கண்காணிப்பு கேமிராக்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.
    • பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தடபெரும்பாக்கம் கிருஷ்ணாபுரம், திருவாயர்பாடி, உள்ளிட்ட முக்கிய இடங்களில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.

    இதனால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் குற்ற செயல்களும் குறைந்து இருந்தன. இந்நிலையில் இந்த கண்காணிப்பு காமிராக்களில் பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    எனவே கண்காணிப்பு காமிராக்களை சீரமைத்து குற்றச்செயல்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×