search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி விலை"

    • தக்காளி ரூ.20-க்கு விற்பனை
    • பெண்கள் வழக்கம்போல் தக்காளி வாங்க தொடங்கியுள்ளனர்.

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற் பனை செய்யப்பட்டது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நட வடிக்கை மேற்கொண்டது. ரேஷன் கடைகள் மூலமாக வும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் தக்காளியின் உற்பத்தி குறைவாக இருந்ததால் விலை அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை படிப் படியாக குறைய தொடங்கி உள்ளது.

    குமரி மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப் பட்டது. உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அடியோடு நின்றதால் விலை உயர்ந்து காணப்பட்டது. பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்ப னைக்காக கொண்டுவரப் பட்டது.

    தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டதையடுத்து பொதுமக்கள் தக்காளி பயன்பாட்டை குறைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்ட பகுதி களில் இருந்தும் தக்காளி விற்பனைக்குவர தொடங்கி யது. அதிகளவு தக்காளி விற்பனைக்கு வந்ததையடுத்து விலை குறைய தொடங்கியது.

    ஓசூர், பெங்களூர் பகுதி களில் இருந்தும் அதிகளவு தக்காளி தற்பொழுது விற்பனைக்கு வருகிறது. இதனால் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.40 ஆக குறைந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்கப்பட்டது. 25 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ.400-க்கு விற்பனையானது.

    இதேபோல் இஞ்சியின் விலையும் குறைய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.280 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.150 ஆக குறைந்துள்ளது. இதேபோல் கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், மிளகாய் விலையும் குறைந் துள்ளது.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறி களின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.20, முட்டை கோஸ் ரூ.25, காலிப்ளவர் ரூ.25, கத்தரிக்காய் ரூ.30, வழுதலங்காய் ரூ.50, பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.70, பீட்ரூட் ரூ.45, மிளகாய் ரூ.70, பல்லாரி ரூ.35, சிறிய வெங்காயம் ரூ.75, சேனை ரூ.70, இஞ்சி ரூ.150, வெள்ளரிக்காய் ரூ.20, முருங்கைக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.35, வெண்டைக்காய் ரூ.30.

    காய்கறி விலை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளூர் பகுதிக ளிலிருந்தும் அதிகளவு தக்காளி வந்து கொண்டி ருப்பதால் விலை சரிந்துள்ளது. தக்காளி விலை அதிகமாக இருந்த போது பொதுமக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்து வந்தனர். தற்பொழுது பெண்கள் வழக்கம்போல் தக்காளி வாங்க தொடங்கியுள்ளனர்.

    கிலோ கணக்கில் பெண்கள் தக்காளியை வாங்கி செல்கிறார்கள். இதேபோல் மற்ற காய்கறி களும் அதிக அளவு தற்போது விற்பனைக்கு வருவதால் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட விலையை விட தற்பொழுது விலை சற்று குறைந்துள்ளது.

    தற்பொழுது திருமண சீசன் உள்ள நிலையிலும் வரத்து அதிகரித்து காணப்படுவதால் விலை குறைந்து காணப்படுகிறது என்றார்.

    • சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நாளை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • போராட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    போராட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், எம்.கே.அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர்.
    • கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் இல்லத்தரசிகள் அனைவரும் என்ன செய்வதென ெதரியாமல் திண்டாடி வந்தனர். இதனையடுத்து தக்காளி விலை உயர்வை தொடர்ந்து பழங்கள், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர். தக்காளி விலையை கட்டுப்படுத்த கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது. கடலூரில் மாவட்டத்தில் இன்று காய்கறிகளின் விலைபட்டியல் வருமாறு:-

    மிளகாய் ரூ. 80, வெங்காயம் ரூ. 24, தக்காளி ரூ. 88, உருளை ரூ.20, பல்லாரி ரூ.26, சின்ன வெங்காயம் ரூ. 90, கேரட் ரூ. 46, பீன்ஸ் ரூ. 95, கோஸ் ரூ.20, சவுசவ் ரூ.26, பீட்ரூட் ரூ. 35, இஞ்சி ரூ.255, முள்ளங்கி ரூ. 22, கத்தரிக்காய் ரூ.50, வெண்டை ரூ.30, கோஸ் ரூ.20, குடைமிளகாய் ரூ.65, பஜ்ஜிமிளகாய் ரூ.60, காளிபிளவர் ரூ. 30, நூக்கோல் ரூ. 80, அவரைக்காய் ரூ.40, மாங்காய் ரூ.22, கருணைகிழங்கு ரூ.50, முருங்கை ரூ. 35, சேம்பு ரூ. 45, பிடிகருணை ரூ. 40, பாகற்காய் ரூ. 50, புடலை ரூ. 20, சுரக்காய் ரூ. 20, சுவிட்கான் ரூ. 22.

    • 5500 கிலோ தக்காளி மட்டுமே ஒரு நாளைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது.
    • தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் ஏற்பட்டுள்ள விலை உயர்வின் காரணமாக விவசாயிகளுக்கு ஏதாவது லாபம் கிட்டுகிறதா என்றால் நிச்சயம் இல்லை.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 35,000-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள், குறிப்பாக நகர்ப்புறங்களிலேயே ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் இருக்கின்ற நிலையில், வெறும் 82 ரேஷன் கடைகள், 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 147 கடைகள்மூலம், ஒரு கடைக்கு 100 கிலோ என்ற அடிப்படையில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பும், லட்சணக்கணக்கான கிலோ தக்காளி ஒரு நாளைக்கு மக்களுக்கு தேவைப்படுகின்ற நிலையில், மேற்படி கடைகள் மூலம் வெறும் 5500 கிலோ தக்காளி மட்டுமே ஒரு நாளைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது.

    தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் ஏற்பட்டுள்ள விலை உயர்வின் காரணமாக விவசாயிகளுக்கு ஏதாவது லாபம் கிட்டுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு சென்னை மற்றும் இதர நகரப் பகுதிகளில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முருங்கைக்காய் விலை ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது.
    • தக்காளி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

    சென்னை

    'மாண்டஸ்' புயல் கரையை கடந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்தும் வருகிறது.

    தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் தாக்கம் காய்கறி விலையில் எதிரொலித்துள்ளது. இதனால் காய்கறி விலை ஓரிரு நாளிலேயே 'கிடுகிடு'வென உயர்ந்து இருக்கிறது.

    இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமான காய்கறி வரத்து மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு ரூ.20 வரை விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறி தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை ஆகிறது. பாகற்காய், கத்தரி, பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றின் விலை ரூ.10 அதிகரித்துள்ளது. தக்காளி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ரூ.12 முதல் ரூ.17 வரை விற்பனையான தக்காளி, தற்போது ரூ.30 வரை விற்பனை ஆகிறது. முருங்கைக்காய் விலையும் ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது.

    தற்போது மழை குறைந்திருப்பதால் விலை சற்று மீண்டு வருகிறது. நிலைமை சீரடையும் பட்சத்தில் காய்கறி விலை ஓரிரு நாளில் குறைந்து முன்புபோலவே விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை மழை காரணமாக மார்க்கெட்டுக்கு மக்கள் வருகை கணிசமாக குறைந்திருப்பதால், வாங்க ஆளில்லாமல் காய்கறி வீணாகி அழுகி போய் குப்பையில் கொட்டும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இது அனைவருக்குமே கவலையை தந்துள்ளது. வரும் நாட்களில் இந்த நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (மொத்தவிலையில்/கிலோவில்)

    பீன்ஸ்- ரூ.30, அவரை- ரூ.30 முதல் ரூ.35 வரை, பாகற்காய் (பன்னீர்) - ரூ.50, பாகற்காய் (பெரியது) - ரூ.50, கத்தரி-ரூ.30 முதல் ரூ.40 வரை, வெண்டை-ரூ.40, புடலங்காய்-ரூ.30 முதல் ரூ.40 வரை, சுரைக்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.40 முதல் ரூ.50 வரை, கேரட் (ஊட்டி) - ரூ.50, கேரட் (மாலூர்) -ரூ.35, முள்ளங்கி- ரூ.20 முதல் ரூ.25 வரை, முட்டைக்கோஸ்- ரூ.15 முதல் ரூ.20 வரை, இஞ்சி- ரூ.65, சாம்பார் வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.100 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்) - ரூ.20 முதல் ரூ.25 வரை, பல்லாரி வெங்காயம் (ஆந்திரா) - ரூ.15 முதல் ரூ.20 வரை, தக்காளி- ரூ.30, சேனைக்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.50 வரை, சேப்பங்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.50 வரை, காலிபிளவர் (ஒன்று) - ரூ.20, முருங்கைக்காய்- ரூ.120 முதல் ரூ.130 வரை, உருளைக்கிழங்கு- ரூ.30 முதல் ரூ.35 வரை, எலுமிச்சை- ரூ.40 முதல் ரூ.50.

    வெளிச்சந்தையில்...

    கோயம்பேடு மார்க்கெட் விலையை காட்டிலும் ஆள் கூலி, வாகன வாடகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிச்சந்தையில் ரூ.10 முதல் ரூ.25 வரை கூடுதலாக காய்கறி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது.
    • இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கள் விற்பனைக்கு வருகிறது.

    விவசாய பணியில் ஈடுபட்டு வரும் தொழி லாளர்களில் பெரும்பா லானவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 நாட்கள் வரை விடுமுறை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் காய்கறி உற்பத்தி மற்றும் அறுவடை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து கடந்த 2 நாட்களாகவே வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது. இந்த நிலையில் இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ரூ.40-க்கு விற்ற பீன்ஸ் தற்போது விலை அதிகரித்து ரூ.70-க்கும், ரூ.50-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ90-க்கும், ரூ.70-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.10-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.

    அதேபோல் கத்தரிக்காய், முட்டை கோஸ், அவ ரைக்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்து உள்ளது.

    தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.120 வரையிலும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.130 வரையும் விற்கப்படுகிறது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் பச்சை காய்கறிகள் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    தக்காளி-ரூ.23.

    நாசிக் வெங்காயம்-ரூ.36

    ஆந்திரா வெங்காயம்- ரூ.20

    சின்ன வெங்காயம்- ரூ.110

    உருளைக்கிழங்கு-ரூ.27

    ஹாசன் உருளைக்கிழங்கு- ரூ.42

    கத்திரிக்காய்- ரூ.20

    வரி கத்திரிக்காய்- ரூ.15

    அவரைக்காய்- ரூ.40

    வெண்டைக்காய்- ரூ.25

    பீன்ஸ்- ரூ.70

    ஊட்டி கேரட்-ரூ.90

    பீட்ரூட்- ரூ.25

    முள்ளங்கி- ரூ.22

    வெள்ளரிக்காய்- ரூ.12

    கோவக்காய்- ரூ.35

    பன்னீர் பாகற்காய்- ரூ.40

    முட்டை கோஸ்- ரூ.20

    காலி பிளவர் ஒன்று - ரூ.25

    முருங்கைக்காய்- ரூ.90

    சுரக்காய்- ரூ.15

    புடலங்காய்-ரூ.15

    பீர்க்கங்காய்-ரூ.35

    சவ்சவ்-ரூ.15

    இஞ்சி-ரூ.65.

    • ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகின்றன. ஒட்டன் சத்திரம், மேச்சேரி, தாளவாடி, ஊட்டி, மேட்டு ப்பாளையம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் 20 டன் காய்கறிகள் விற்பனை க்கு வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

    கேரட்டை பொருத்த வரை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் 70 ரூபாய் வரை விற்ற கத்திரிக்காய் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    பீன்ஸ்-80, பீட்ரூட்-50-70, சவ்சவ்-30, குடைமிளகா-60, கோவக்காய்-40, கருணைக்கிழங்கு-40, தக்காளி-40, பீர்க்கங்காய்-60, முள்ளங்கி, பாவக்காய், புடலங்காய், வெண்டைக்காய்-40, முருங்கைக்காய் -60, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-40, இஞ்சி-70, முட்டைகோஸ்-25, கருப்பு அவரைக்காய்-90, பட்டை அவரைக்காய்-60, காளிப்ளவர்-50.

    இன்னும் சில நாட்கள் காய்கறிகள் விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு சரியாகிவிடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நீர் நிலைகளை பாது காக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
    • சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம்- எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ஈரோட்டில் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளை பாது காக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.

    களிமண்ணால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாது காப்பான முறையில் கரைக்க வேண்டும்.

    சிலைகளின் ஆபரண ங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படு–த்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்த ப்படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மா–க்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்- பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம்எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ண ப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

    சுற்று ச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படு த்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூ ச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்ப டுத்த ப்படவே ண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தி னால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதி முறை களின்படி கரைக்க வேண்டும்.

    விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்கா தவாறு கொண்டா டும்படி பொது மக்கள் கேட்டு க்கொள்ள ப்படுகிறா ர்கள். இவ்வாறு அதில் கூறி யுள்ளார். 

    • ஈரோடு வ. உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் இன்று வ.உ.சி. பூங்க மார்க்கெட்டிற்கு 12 டன் மட்டுமே காய்கறிகள் வரத்தாகின.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    தாளவாடி, மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் ஒட்டன்சத்திரம், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து காய்கறிகள் வரத்தாகி வருகின்றன. தினமும் 15 டன் முதல் 18 டவுன் வரத்தாகி வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் இன்று வ.உ.சி. பூங்க மார்க்கெட்டிற்கு 12 டன் மட்டுமே காய்கறிகள் வரத்தாகின.

    இதனால் ஒரு சில காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்ற கேரட் விலை இந்த வாரம் ரூ.40 அதிகரித்து ரூ.90-க்கு விற்பனையானது.

    மேட்டுப்பாளையம் ஊட்டியில் இருந்து கேரட் அதிக அளவில் வரத்தாகி வந்த நிலையில் மழை காரணமாக கேரட் வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்த–னர். மற்ற காய்களின் விலை கிலோவில் வருமாறு:-

    கத்திரிக்காய் - 40, வெண்டைக்காய் - 25, கருப்பு அவரை - 60, பட்ட அவரை - 40, முள்ளங்கி - 25, பீர்க்கங்காய் - 60, முட்டைகோஸ் - 35, முருங்கைக்காய் - 50, பாகற்காய் - 40, மிளகா - 80, பீன்ஸ் - 50, கடந்த வாரம் ரூ. 40-க்கு விற்ற பீட்ரூட் இந்த வாரம் ரூ-70 ஆக இருந்துள்ளது. பூசணி–க்காய் - 20, இஞ்சி - 70, சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம்- 25 முதல் 30 வரை விற்பனையானது. 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்து விலை திடீரென அதிகரித்தது.
    • மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ100-க்கும், கேரட் கிலோ ரூ.70-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60- க்கும் விற்கப்பட்டது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 430 லாரிகளில் காய்கறி வந்து விற்பனைக்கு குவிந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்து விலை திடீரென அதிகரித்தது. இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ100-க்கும், கேரட் கிலோ ரூ.70-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60- க்கும் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்து மீண்டும் காய்கறி வரத்து வழக்கம் போல அதிகரித்து உள்ளது. இதனால் பீன்ஸ், அவரைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.30-க்கும், கேரட் கிலோ ரூ.60-க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் வரத்து அதிகரிப்பு காரணமாக வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.7-க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் அதை வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

    இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை (கிலோவில்) வருமாறு:-

    தக்காளி-ரூ.15, ஆந்திரா வெங்காயம்-ரூ.11, நாசிக் வெங்காயம்-ரூ.22, சின்ன வெங்காயம்-ரூ.50, ஹாசன் உருளைக்கிழங்கு-ரூ.30, ஆக்ரா உருளைக்கிழங்கு-ரூ.25, கத்தரிக்காய்-ரூ.15, வரி கத்தரிக்காய்-ரூ.8, அவரைக்காய்-ரூ.30, பீன்ஸ்-ரூ.50, ஊட்டி கேரட்-ரூ.60, ஊட்டி பீட்ரூட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25,

    முட்டை கோஸ்-ரூ.12, வெண்டைக்காய்-ரூ.7, முள்ளங்கி-ரூ.7, நூக்கல்-ரூ.35, முருங்கைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.15, பாகற்காய்-ரூ.35, சுரக்காய்-ரூ15, புடலங்காய்-ரூ.15, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.35, காலி பிளவர் ஒன்று-ரூ.12, பீர்க்கங்காய்-ரூ.40, வெள்ளரிக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.40, இஞ்சி-ரூ.42, எலுமிச்சை பழம்-ரூ.100.

    ×